இத்தனை அழிவிற்கு பின்பும் 13ல் தானா தீர்வு ? (3)

(மாதவன் சஞ்சயன்)

ஆரம்பத்தில் 25 நாடுகள் ஆதரவளித்த நிலையில் தற்போது 38 நாடுகளும் நாளடைவில் அனைத்து நாடுகளும் தீர்மானத்துக்கு ஆதரவளிக்கும் என்ற செய்தியில் நாம் சர்வதேசத்தின் கரிசனையில் வந்துள்ளமை தெரிகிறது. நாடுகளின் நலன்களுள் எம் நலன்களும் அடங்கும் விடயத்தை நாம் கவனத்தில் கொண்டு எமக்கு சாதகமானதை பெறுவதே புத்திசாலித்தனம். இந்த நிலையில் நடைமுறை சாத்தியமான விடயத்தை நாம் முன்னெடுத்தால் அது நிச்சயம் சாத்தியமாகும். பிரிவினை திட்டத்தை இந்தியா ஆரம்பத்திலேயே ஆதரிக்கவில்லை என்பதை சம்மந்தர் தொடக்கம் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் காலம் கடந்தாவது பகிரங்கமாக இன்று ஒத்துக்கொள்கின்றனர். இந்திய அனுசரணை இன்றி எதுவும் அரங்கேறாது.

(“இத்தனை அழிவிற்கு பின்பும் 13ல் தானா தீர்வு ? (3)” தொடர்ந்து வாசிக்க…)

சூத்திரதாரி பிரபாகரன் தான்

யுத்தக் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பிரதனா சூத்திரதாரி தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனேயாகும் என பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை யுத்தக் குற்றவாளியாக பார்க்கக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியே இந்த நாட்டுக்கு யுத்த வெற்றியை ஈட்டிக் கொடுத்தார் எனவும் அதனை எவரும் மறந்து விடக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வதேச சமூத்தை வெற்றி கண்டுள்ளதுடன் உள்ளக விசாரணைகளுக்கு சர்வதேச சமூகத்தை இணங்கச் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். யார் நல்ல காரியங்களைச் செய்திருந்தாலும் அவர்களை பாராட்ட வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தில் உள்ளடக்கப்படவில்லை – வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர்

சமஸ்டி பெற்றுத் தருவோம் என்று மக்களிடம் ஆணை பெற்றவர்கள் ஐக்கிய நாடுகள் மனிதஉரிமை பேரவையினால் வெளியிடப்பட்ட பிரேரணையில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற வாசகத்துடன் திருப்தியடைந்து மௌனமாக இருப்பது ஏன் என வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா கேள்வி எழுப்பியுள்ளார்.

(“தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தில் உள்ளடக்கப்படவில்லை – வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர்” தொடர்ந்து வாசிக்க…)

காட்டுப் பயணம்… கைகளில் விதை… மரபுப் பள்ளி குழந்தைகளின் சுற்றுலா அனுபவங்கள்…

இயற்கை சார்ந்த இடத்திற்கு குழந்தைகளைச் சுற்றுலா அழைத்துச் செல்வது செம்மை மரபுப் பள்ளியின் கல்வி முறையில் ஓர் அங்கம். அதன்படி, மரபுப் பள்ளி குழந்தைகள் தங்களது பெற்றோருடன் கடந்த 3ம் தேதி சனிக்கிழமை அதிகாலை சென்னையில் இருந்து இரண்டு பேருந்துகளில் கிளம்பினர். இந்தச் சுற்றுலாவிற்கு மரபுப் பள்ளியின் தலைவர் திரு.ம.செந்தமிழன் தலைமை தாங்கினார். அதற்கு முதல் நாள் இரவு சென்னை மற்றும் அருகமை மாவட்டங்களில் பெய்த கனமழை, மனதையும், சூழலையும் சில்லிட வைத்திருந்தது. குழந்தைகள், பெற்றோர், மரபுப் பள்ளி ஆசிரியர்கள், செம்மை குடும்பத்தினர் என சுமார் நூறு பேர் கொண்ட குழுவினர், முதலில் இறங்கிய இடம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி நீர்த்தேக்கம்.

(“காட்டுப் பயணம்… கைகளில் விதை… மரபுப் பள்ளி குழந்தைகளின் சுற்றுலா அனுபவங்கள்…” தொடர்ந்து வாசிக்க…)

இத்தனை அழிவிற்கு பின்பும் 13ல் தானா தீர்வு ? (2)

(மாதவன் சஞ்சயன்)

இறுதித் தீர்வு 13ல் தானா என கேட்கும் பலர் இந்திய இலங்கை ஒப்பந்த காலத்தை நினைவில் கொள்ளவேண்டும். இன்று பறையடித்து “வீ வோன்ட் தமிழ் ஈழம்” என கத்துபவர்களில் பலர் அன்று பிறந்தே இருக்க மாட்டார்கள். இந்தியா எம்மை ஏமாற்றிவிட்டது என்பவர்களில் பலர் அன்று போராட்ட காலத்தில் ஒதுங்கி இருந்தவர்கள். சம்மந்தரையும் சுமந்திரனையும் சீண்டுபவர்கள் ஒருதடவை பொலிஸ் அடியுடன் அடங்கியவர்களும், வழக்கில் தப்பியபின் தம் வாழ்க்கையை கொழும்பில் முடக்கியவரும், கொழு கொம்பு கிடைத்ததும் பற்றிப் பிடித்து படர்ந்து, தலைமையை துதிபாடி குளிரவைப்பவரும், புலம்பெயர் தமிழர் சாவிக்கு ஆடும் பொம்மைகளும் தான் என்பது பகிரங்க உண்மை.

(“இத்தனை அழிவிற்கு பின்பும் 13ல் தானா தீர்வு ? (2)” தொடர்ந்து வாசிக்க…)

மின்சார கதிரையில் ஏற்றப்பட வேண்டிய சிறிதரன் எம்.பி!

இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை வெளியிட்டு உள்ள போர்க் குற்ற விசாரணை அறிக்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கடுமையாக சாடப்பட்டு உள்ளார். விடுதலைப் புலிகளின் ஆட்கடத்தல், கட்டாய ஆட்சேர்ப்பு ஆகியவற்றுக்கு புலி முக்கியஸ்தர் ஒருவரின் நெருக்கமான உறவினரும், அப்போது பாடசாலை அதிபருமான இவர் உதவி, ஒத்தாசை வழங்கினார் என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக இவர் அதிபராக இருந்து வந்த பாடசாலையின் மாணவர்களை இவரே புலிகளுக்கு காட்டிக் கொடுத்து வந்தார் என்று இதில் கூறப்பட்டு உள்ளது. இதனால் இவரின் காட்டிக் கொடுப்புகளுக்கு பயந்து பிள்ளைகளை பெற்றோர் பாடசாலைக்கு அனுப்பாமல் வீட்டில் மறைத்து வைத்திருந்தனர் என்றும் இதில் உள்ளது. (“மின்சார கதிரையில் ஏற்றப்பட வேண்டிய சிறிதரன் எம்.பி!” தொடர்ந்து வாசிக்க…)

கிளிநொச்சியில் ஜனாதிபதி வட மகாண முதல் அமைச்சர்

இராணுவ முகாமுக்கு வாருங்கள் உணவருந்திச் செல்வோம் – ஜனாதிபதி மைத்திரி
இராணுவத்தை வெளியேறக் கோரும் நான் எப்படி அங்கு வந்து உணவருந்த முடியும் – முதல்வர் விக்னேஸ்வரன்.
இன்று கிளிநொச்சியில் இடம்பெற்ற தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதியும் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனும் கலந்து கொண்டனர்.  நிகழ்வின் முடிவில் அங்குள்ள படை முகாம் ஒன்றில் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு உணவருந்தச் சென்ற ஜனாதிபதி வடக்கு முதல்வரையும் உணவருந்த அழைத்தார். வடக்கில் இருந்து படையினரை வெளியேற்றக் கோரும் நான் எப்படி அங்கு வந்து உணவருந்த முடியும் என்று கேட்டார் வடக்கு முதல்வர். அதற்கு பதலளிக்காத ஜனாதிபதி புன்முறுவலுடன் விடை பெற்றார்.

ஆனால் இந்த விழாவை ஒழுங்கமைத்ததே இராணுவம்தானே. விழா நடைபெற்ற என்னுடை கிராமம் 24 மணிநேரத்துக்கு முன்பிருந்தே அதிஉச்ச பாதுகாப்பு வலையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்தது. மகிந்தவின் விழாவுக்கும் இதற்கும் வித்தியாசம் எதுவும் இருக்கவில்லை. டிப்போ ரோட் , வில்சன் ரோட் முழுமையாக போக்குவரத்து தடுக்கப்பட்டு VIPகள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். என்னுடைட வீடு உள்ள எமர்சன் ரோட் மாத்திரம் இராணுவ கண்காணிப்பின் கீழ் பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு ‘”சதோச “கடையை சிம்பிளாக வந்து திறந்து வைத்துவிட்டு பொருட்கள் வாங்கிக்கொண்டு சென்ற மைத்திரி வருகிறாரா? அல்லது மகிந்த தான் வருகிறாரா என்ற குழப்பமே இங்கே கிளிநொச்சியில் பலருக்கும் வந்துவிட்டது.

பின்பு ஏன் முதல்வர் ஐயா சாப்பாட்டில் மட்டும் அரசியல் காட்டுறார்.
ஒருவேளை அர்ஜுன் நடித்த முதல்வன் படத்தை இந்தாள் ஒவரா பார்த்திருப்பாரோ?
(பி.கு: பத்து வருடங்களுக்கு முன்பு 2004-2005 களில் பிரபாகரன் வெளிநாட்டு ராஜததந்திரிகளை சந்திக்கவரும்போதும் இப்படிதான் புலிகளும் எனது கிராமத்தில் குவிக்கப்படுவார்கள்)

(Rajh Selvapathi)

இந்திய மீனவரின் இலங்கை கடலுக்குள் அத்து மீறும் பிரச்சனை

இதைப்பற்றிய முழுமையான புரிதல் எனக்கு இல்லைதான். இருந்தாலுமே, இந்த மீனவனின் கருத்துக்கள், நிறையவே சென்சிபிள் ஆக இருக்கிறது. படித்துப்பாருங்கள்… தீராத தலைவலியான இந்த ராமேஸ்வரம் மீனவர்கள் பிரச்னையை மத்திய அரசு எப்படி தீர்த்து வைத்திருகிறது என்பதையும், தமிழ் நாட்டு தலவைர்கள் கட்ச தீவை மீட்க வேண்டும் என்று எப்படி அரசியல் ஆதாரத்துக்காக நாடகம் ஆடுகிறார்கள் என்பதையும், இலங்கை கடற்பகுதியில் நம் மீனவர்கள் செய்யும் அட்டூழியங்களையும் இதில் பார்ப்போம்..

(“இந்திய மீனவரின் இலங்கை கடலுக்குள் அத்து மீறும் பிரச்சனை” தொடர்ந்து வாசிக்க…)

ஆடு நனைகிறதென்று…

(தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

சொற்கள் பொருளழியுங் காலத்தில், பொருள்கோடல் சொற்களை மேலும் பொருளற்றதாக்குகிறது. அது சொற்களின் பெறுமதியைக் கேள்விக்குள்ளாக்குகிறது. மனித உரிமைகள் என்ற சொல்லாடல் இன்றைய உலக அரசியலின் திசைவழியில் வலிய சொல்லாகியிருக்கிறது. அது யாருக்கானது அல்லது யாருக்கு எதிரானது என்பது அதன் வலிமையைத் தீர்மானிக்கிறது. இப்போது ஜெனீவாவில் நடக்கும் ஐ.நா. மனித உரிமைப் பேரவை அமர்வுகளும் அதில் இலங்கையின் மீதான அக்கறையும் ஒருபுறம் கவனத்தை ஈர்க்கையில், மறுபுறம் பேரவையின் முக்கியமான குழுவுக்கான தலைமையை ஐ.நா. சவூதி அரேபியாவுக்கு வழங்கியிருப்பது கடும் விமர்சனத்துக்குட்பட்டுள்ளது.

(“ஆடு நனைகிறதென்று…” தொடர்ந்து வாசிக்க…)

மீண்டும் ஜப்பான் இலங்கையில் கடை விரிக்கின்றது

இலங்கை – ஜப்பான் உறவை கட்டியெழுப்ப இருநாடுகளுக்கான அமைச்சர்கள் மட்ட உயர்குழு
ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையில் சமூக, பொருளாதாரம், அரசியல் மற்றும் கலாசாரம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் முழுமையான தொடர்பாடலை வலுப்படுத்துவதற்கான திட்டத்தைத் தயாரிப்பதற்காக இரு நாடுகளையும் சேர்ந்த உயர்மட்ட அமைச்சர்களையும், அதிகாரிகளையும் உள்ளடக்கிய செயற்பாட்டுக் குழுவொன்றை அமைப்பதற்கு இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், ஜப்பான் பிரதமர் சின்சோ அபேவும் தீர்மானித்துள்ளனர்.

(“மீண்டும் ஜப்பான் இலங்கையில் கடை விரிக்கின்றது” தொடர்ந்து வாசிக்க…)