யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது அவர்கள் அங்குள்ள தமிழ் சகோதரர்கள் மீது வெறுப்புக்கொள்ளவில்லை

கார்த்திகேசு ஆசிரியர் துரையப்பா போன்றோர் முஸ்லிம்களிடையே செல்வாக்கு மிகுந்தவர்களாக திகழ்ந்தார்கள். ஜி ஜி பொன்னம்பலம் கூட தமிழ் தேசியத்துக்கெதிராக தமிழரசுக்கட்சிக் கெதிராக தேர்தல்களை சந்தித்தபோதும் முஸ்லிம் மக்கள் ஆதரவு வழங்கிய வரலாறும் உண்டு. 1990 அக்டோபரில் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் புலிகளால் வெளியேற்றப்பட்டபோது முஸ்லிம்கள் தொடர்பில் சில வருடங்களுக்கு முன்பு வட மாகாண முஸ்லிம்களின் நலனோம்பு அமைப்பின் சார்பாக ஏ.சி .எம் .இக்பால் “யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது அவர்கள் அங்குள்ள தமிழ் சகோதரர்கள் மீது வெறுப்புக்கொள்ளவில்லை ஏனெனில் அவர்கள் ஒரு பொழுதில் சுல்தானை நகர பிதாவாக ஆக்கியவர்கள் என்பதனாலாகும்” என்று குறிப்பிட்டுள்ளார். 2008 பிப்ரவரியில் நாங்கள் யாழ்ப்பாணம் செல்ல நேர்ந்தபோது அங்கு யாழ் முன்னாள் அரச அதிபர் கணேஷ் தலைமையில் சிவில் சமூக பிரதிநிகள் சிலரையும் சந்தித்து கருத்துப்பகிர்வு செய்யும் ஒரு நிகழ்வு யாழ் அரச அதிபர் அலுவலகத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. (Bazeer)

குழவியையும் ஈவிரக்கமின்றி கொல்வதற்கு ஆணையிட்ட தமிழ் தேசியத் தலைவரிடம்….

 

பாணியில் முஸ்லிம்களின் தேசியத் தலைவர் என பிரகடனப்படுத்திக்கொண்டு தமது இனத்தினை ஏதோ புலிகள்தான் அங்கீகரிக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்புடன் ஹக்கீம் புலிகளுடன் ஒப்பந்தம் செய்த பொழுது முஸ்லிம் தரப்பில் சென்றிருந்த முன்னாள் செனட்டரும் தமிழரசுக் கட்சியின் உறுப்பினருமான ஜனாப் மசூர் மௌலானா அவர்கள் நன்கு சமைத்த ஹலால் ஆட்டிறைச்சிக் கறியினை உண்டதன் பின்னர் பிரபாகரனிடம் தம்பி உங்களுடைய பிள்ளைகளினுடைய படிப்பு எப்படியென்று கேட்டுவைத்தார். அவரும் பதிலுக்கு தனது பிள்களகனின் சிறந்த பெறுபேறுகளை சொல்லிவைத்தார். ஆனால் 1990 ம் ஆண்டு 12 வயதிற்கும் குறைந்த பாலகர்கள் காத்தான்குடிப் பள்ளிவாசலிலே தொழுது கொண்டிருந்த வேளையிலும் ஏறாவுரில், அழிஞ்சிப்பத்தானையில், படுக்கையிலும், தாயின் முலையைச் சப்பிய மழலையையும், கற்பிணியின் வயிற்றில் ஜனித்திருந்த குழவியையும் ஈவிரக்கமின்றி கொல்வதற்கு ஆணையிட்ட தமிழ் தேசியத் தலைவரிடம் நிட்சயமாக கேட்கவேண்டிய கேள்விதான் அது!

(Bazeer Seyed)
புலிகள் இன சுத்திகரிப்பு செய்தார்கள் என்று இனவாதம் பேசவேண்டாம். புலிகள் மனித சுத்திகரிப்பு செய்தனர்.அவர்கள் செய்ததை தமிழ் முஸ்லிம் சிங்களம் என்று பார்த்தல் உங்களை மக்கள் நடுநிலை வாதிகள் என்று ஏற்கமாட்டார்கள்.(Neethirajan Chellamanickam)

இரண்டும் நியாயமான கருத்துக்கள்தான் (Saakaran)

அகிம்சாவாதியும் ஆயுததாரியும் இறுதியில் அடைந்தது ஏமாற்றமே !

இரு வேறுபட்டவரின் மரண நிகழ்வுகள் அண்மையில் பிரசித்தம் பெற்றது. ஒருவர் முதியவர் காந்தியம் டேவிட் ஐயா, மற்றவர் நடுவயதினர் போராளி தமிழினி. தமிழினி என்றால் முன்னாள் போராளி எனத்தானே போடவேண்டும்? ஆனால் தமிழினி என்ற சிவகாமி இறுதி வரை மரணத்துடன் போராடினாள் என்பதால் அவள் இறுதிவரை போராளிதான். இருவருமே இரு வேறு பாதையில் பயணித்தவர். அடைய நினைத்த இலக்கு ஒன்றுதான். தம் இனம் தமது சொந்தக்காலில் சுதந்திரமாக வாழவேண்டும் என்ற வேட்கையில் தான் இருவரும் தாம் தேர்ந்தெடுத்த பாதையில் தம் பயணத்தை தொடர்ந்தனர்.

(“அகிம்சாவாதியும் ஆயுததாரியும் இறுதியில் அடைந்தது ஏமாற்றமே !” தொடர்ந்து வாசிக்க…)

ஊடக அறிக்கை

மிக்க அவதானமாக செயற்பட வேண்டிய நேரமிது
வாராந்த பத்திரிகையாளர் மாநாட்டில் அமைச்ர் டாக்டர் ராஜித சேனாரட்ண அவர்கள் இலங்கையில் அரசியல் கைதிகள் இல்லையென்று தெரிவி;த்தமை விரைவில் மீண்டுமொரு சங்கடமான நிலைமையை சிறைக்கைதிகள் மத்தியில் ஏற்படும் என்ற ஐயம் எனக்கு எழுக்கிறது. கைதிகள் குற்றம் செய்தார்களோ இல்லையோ என்பது அல்ல எமது பிரச்சனை. அவர்கள் நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்தமையால் அவர்கள் செய்த குற்றம் எதுவாக இருந்தாலும் அனுபவித்த தண்டனை அதிகமாகையால் போதுமானதாகும். அந்த அடிப்படையில்தான் அவர்களின் விடுதலையைக் கோரி இத்தனை போராட்டங்கள் நடந்தது மட்டுமல்ல இறுதியில் சாகும்வரையிலான உண்ணாவிரதத்தில் ஜனாதிபதி, பிரதம மந்திரி ஆகியோர் தலையிட்டு உண்ணாவிரதத்தை முடித்து வைத்தனர். ஆனால் அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ன விடுத்துள்ள அறிக்கை மீண்டும் பிரச்சினையை உயிர்பெறச் செய்யும் என்பது எதுவித சந்தேகமும் இல்லை.

(“ஊடக அறிக்கை” தொடர்ந்து வாசிக்க…)

தீர்வு வழங்காவிடின் மீண்டும் ஆயுதம் ஏந்தலாம்

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காவிட்டால் மீண்டும் ஆயுதப் போராட்டம் உருவெடுக்கலாம் என ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இந்தியாவினாலோ ஜ.நாவினாலோ தீர்வு கிடைக்காது என்று குறிப்பிட்ட அவர் சகலரதும் ஒத்துழைப்புடன் விசேட நீதிமன்றம் அமைத்து யுத்ததின் போது இடம் பெற்ற சம்பவங்கள் குறித்து ஆராய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

(“தீர்வு வழங்காவிடின் மீண்டும் ஆயுதம் ஏந்தலாம்” தொடர்ந்து வாசிக்க…)

இது தமிழினியின் மரணத்தைக் கொச்சைப்படுத்த அல்ல.

 

புலிகள் இயக்கம் ஒரு சூனியமான இயக்கம். பல இளஞர்கள் புலிகள் இயக்கத்தில் இணைந்த பின்னால் வருத்தப்பட்டார்கள். சிலர் தாங்கள் இறந்துவிடுவதே நல்லதென நினைத்தார்கள் இறந்தார்கள்… பலர் இணைந்த பிறகுதான் உட்படுகொலைகள், சகோதரப் படுகொலைகள் செய்ய வேண்டியதற்கு ஆளானார்கள். இந்திய அமைதிப்படையுடன் பிரபாகரன் யுத்தம் தொடுத்த பின்னர் பல நூற்றுக்கணக்கான புலிகள் இதுதான் தருணம் என இந்தியாவுக்குத் தப்பிச் சென்று அங்கிருந்து ஐரோப்பாவிற்கும், கனடாவிற்கும் சென்றுவிட்டார்கள். குறிப்பாக கிட்டுவுடன் சேர்ந்து இயங்கிய பல புலிகள் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டார்கள்.

(“இது தமிழினியின் மரணத்தைக் கொச்சைப்படுத்த அல்ல.” தொடர்ந்து வாசிக்க…)

முஸ்லிம்களின் மீள்குடியேற்றம்’ பற்றி தமிழ்க் கூட்டமைப்பு வாய் திறக்காதது ஏன்?

சம்பந்தன் ஐயாவும் கண்டுகொள்வதில்லை

ஜெனீவா உள்ளிட்ட சர்வதேசத்துக்குச் சென்று தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து பேசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், அதே தமிழ் மொழியைப் பேசும் வடபகுதி முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் வாய்திறப்பதில்லையென வாணிப மற்றும் கைத்தொழில்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

(“முஸ்லிம்களின் மீள்குடியேற்றம்’ பற்றி தமிழ்க் கூட்டமைப்பு வாய் திறக்காதது ஏன்?” தொடர்ந்து வாசிக்க…)

சிரிய நெருக்கடி: ரஷ்ய அதிரடி

(தெ.ஞா.மீநிலங்கோ)

எல்லாக் கதைகளும் எதிர்பார்த்தபடி முடிவதில்லை. சில கதைகளில் எதிர்பாராத திருப்பங்கள் எதிர்பாராதபோது ஏற்படலாம். அவை சில சமயம் கதைகளின் முடிவுகளையே மாற்றிவிடும். அதனால் அத் திருப்பத்துக்காகவே அக் கதை காத்துக்கொண்டிருந்தது போன்ற மயக்கம் ஏற்படலாம். எனினும் பொதுவாகவே திருப்பங்கள் சுவாரசியமானவை. நான்கு ஆண்டுகளுக்கு மேலாகத் தொடரும் சிரிய நெருக்கடியும் அதையொட்டிப் பல்முனைகளில் வெடித்த சிரிய உள்நாட்டு யுத்தமும் இப்போது புதிய கட்டத்தை எட்டியுள்ளன. சிரியாவில் பஷர் அல் அசாத் ஆட்சியை அகற்ற அமெரிக்காவினதும் மேற்குலகினதும் நேரடி ஆதரவுடன் களமிறங்கிய ‘சிரிய விடுதலை இராணுவம்’ என்ற கிளர்ச்சிப் படைகளுடன் அல் நுஸ்ரா, ஐ.எஸ்.ஐ.எஸ். ஆகியன கைகோர்த்து சிரிய இராணுவத்துடன் போரிடுகின்றன.

(“சிரிய நெருக்கடி: ரஷ்ய அதிரடி” தொடர்ந்து வாசிக்க…)

‘தமிழீழம் உருவாவதை தடுக்க முடியாது’ – மாவையின் வெடி

ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை மீதான தீர்மானத்தை நிறைவேற்றாமல், தமிழர்களின் உரிமைகளை அழித்து, இலங்கையை தனிச் சிங்கள நாடாக மாற்றுவதற்கு முயற்சித்தால், தனித் தமிழ் தேசம் உருவாகுவதற்கு அது வழியேற்படுத்தும், அதனை தடுக்க முடியாது, அதற்கு, சர்வதேச நாடுகளின் அனுமதியை வாங்குவதற்கு நாம் நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

(“‘தமிழீழம் உருவாவதை தடுக்க முடியாது’ – மாவையின் வெடி” தொடர்ந்து வாசிக்க…)

காத்தான்குடிக்குள்ள காணி வாங்கப்போன கந்தப்போடியார் !

நம்மட கந்தப்போடியார் கடைசி காலத்தில காத்தான்குடிக்குள்ள இருப்பம் இஞ்ச இருந்தா டாக்டரிட்ட போறத்திற்கு மருந்து எடுக்கிறதுக்கெல்லாம் வசதியாக இருக்கும் அது மட்டுமல்ல அவருக்கு காத்தான்குடியிலதான் நிறைய கூட்டாளிமாரும் இருக்காங்க. சகோதர இனத்துடன் வாழ்ந்துதான் பார்ப்போம் என்று நினைச்சி மனிசன் ஆறு மாதமாக ஒரு துண்டு காணி வாங்கலாம் என அலைஞ்சாரு பாருங்கோ. ஒருத்தரும்ஒரு துண்டுக் காணியும் கொடுக்கவில்லை.வாடகைக்கு வீடும் கேட்டுப் பார்த்தார் கிடைக்கவே இல்லை.

(“காத்தான்குடிக்குள்ள காணி வாங்கப்போன கந்தப்போடியார் !” தொடர்ந்து வாசிக்க…)