நாங்கள் உரிமைக்காக மட்டும் போராடுவோம்…..கடமையை செய்ய காலியில இருந்து காமினி வருவான்….!!!!

இன்று முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் உள்ள பெண்கள் சிறுவர் பிரிவின் மாதாந்த கூட்டத்துக்கு சென்றிருந்தேன். வழமைபோல கூட்டத்தில் சுவாரசியமான விடயங்கள் (பெண்கள் சிறுவர் சம்பந்தப்படாத) பற்றி ஆராய்ச்சி செய்யப்பட்டது….அடுத்த கூட்டத்தையும் இதே போல பயனுள்ளதாக(?) இருக்குமாறு பார்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்று உறுதி பூண்டு கூட்டத்தை நிறைவு செய்தனர்.

(“நாங்கள் உரிமைக்காக மட்டும் போராடுவோம்…..கடமையை செய்ய காலியில இருந்து காமினி வருவான்….!!!!” தொடர்ந்து வாசிக்க…)

டேவிட் ஐயாவின் மறைக்கபட்ட இருண்ட பக்கங்களில் ஒன்று.

(பீமன்)

தமிழரின் விடுதலைக்காக, அவர்களின் மேம்பட்ட வாழ்வுக்காக அனலாக கொழுந்துவிட்டெரிந்த எஸ்.ஏ.டேவிட் என்ற அக்கினிப்பிழம்பு இந்தியாவில் தனக்கே அளவான சிறியதொரு அறையில் நுளப்புக்கு எரியும் சுக்குவிறகுக்கட்டைபோன்று கடந்த 3 தசாப்தங்களுக்கு மேலாக புகைந்துகொண்டிருந்து இறுதியாக கிளிநொச்சியில் அணைந்திருக்கின்றது. இறுதிக்கிரிகையும் முடிந்தாயிற்று. பலர் டேவிட் ஐயாவின் புகழ் பேசியிருக்கின்றார்கள். பலர் அவரின் தியாகம், திறமை, வாழ்வியல் என்பன பற்றி எழுதியிருக்கின்றார்கள். ஆனால் அக்கினி பிழம்பு வெறும் புகையாக மாற காரணம் யாது , 3 தசாப்தங்கள் அவர்இருண்ட யுகத்தில் வாழக் காரணம் யாது என்ற கேள்விக்கு பதில் தேட வேண்டும்.

(“டேவிட் ஐயாவின் மறைக்கபட்ட இருண்ட பக்கங்களில் ஒன்று.” தொடர்ந்து வாசிக்க…)

படுகொலை நினைவுதினம்…

1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ஆம் மற்றும் 22ஆம் திகதிகளில் கடமையிலிருக்கும் போது, இந்திய அமைதிப்படையால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட 21 வைத்தியசாலை பணியாளர்களின் நினைவுதினம், இன்று புதன்கிழமை (21) அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். போதனா வைத்தியசாலை வளாகத்துக்குள் நுழைந்த இந்திய அமைதி காக்கும் படையினர், வைத்தியர்கள், தாதியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் நோயாளிகள் அடங்கலாக 68 பேரைச் சுட்டுக்கொலை செய்தனர். அவ்வாறு உயிரிழந்தவர்களில் வைத்தியர்கள், தாதியர்கள், உத்தியோகத்தர்கள் ஆகியோரின் நினைவு தினம், இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

(“படுகொலை நினைவுதினம்…” தொடர்ந்து வாசிக்க…)

தமிழினியின் சிறு குடிலில்…

(விஸ்வா)
தமிழினியின் மரணச் சடங்கில் கலந்துகொண்டுவிட்டு, இதனை எழுதுகின்றேன். பரந்தனிலிருந்து முல்லைத்தீவிற்கு செல்லும் பிரதான வீதியில், சற்று தூரம் சென்று இடப் பக்கமாக திரும்பும் ஒரு ஒழுங்கையில் சிறிது தூரம் செல்ல, ஒரு வயல்வெளியின் நடுவே அமைந்திருக்கும் சிறு குடில்தான் தமிழினியின் வீடு. போரின் பின்னர் இடம்பெற்ற மீள்குடியேற்றத்தின் பின்னர், பல மண் வீடுகளும், குடிசைகளும் கல் வீடுகளாகி விட்டன. வீடமைப்புத் திட்டங்கள் பல்வேறு அரசசார்பற்ற நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டு கணிசமான அளவில் நிறைவு பெற்று, தற்போதும் இந்திய வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், தமிழினியின் வீடு இன்னும் குடிசையாகவே இருக்கின்றது. என்ன காரணம் என்று தெரியவில்லை.

(“தமிழினியின் சிறு குடிலில்…” தொடர்ந்து வாசிக்க…)

ஈபிடிபி “TV” க்கு யாழில் டன்டனக்கா…..

யாழ்ப்பாணத்தினில் ஈபிடிபியால் இயக்கப்பட்டு வந்த டிடி தொலைக்காட்சி சேவை தடை செய்யப்பட்டுள்ளது.கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த இலங்கை தொலை தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அலுவலக அதிகாரிகளினால் அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ளதுடன் ஒளிபரப்பும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

(“ஈபிடிபி “TV” க்கு யாழில் டன்டனக்கா…..” தொடர்ந்து வாசிக்க…)

தமிழினியின் மரண நிகழ்வு…….!

தமிழினியின் மரண நிகழ்வு ஒப்பற்ற ஒரு நாடகமாக நடந்திருக்கிறது. ஏறக்குறைய டேவிட் ஐயாவின் மரணச் சடங்கும் அப்படித்தான் நடந்தது. மரணச்சடங்கிற்காகவே காத்தும் பார்த்தும் இருக்கிறது ஒரு கூட்டம். செத்தவீட்டு அரசியல். தமிழினி சரணடைந்ததைப்பற்றியும் அவர் புனர்வாழ்வு முகாமில் இருப்பதைப் பற்றியும் தூற்றியவர்கள் பலர். அவருடைய வழக்கை தொடர்ந்து நடத்தாமல் இடையில் கைவிட்டவர்கள் சில தமிழ்த்தேசியவாதிகள். பின்னர் அந்த வழக்கை ஒரு சிங்களப் பெண் சட்டவாளரே முன்வந்து எடுத்து நடத்தி தமிழினியின் விடுதலைக்கான வழிகளைக் காட்டினார்.

(“தமிழினியின் மரண நிகழ்வு…….!” தொடர்ந்து வாசிக்க…)

அரசன் செய்தால் அபராதம் மக்கள் செய்தால் சிரச் சேதம் இது என்ன நியாயம்

பணிப்பெண்களை கற்பழிக்க முயன்று கைதான சவுதி இளவரசர்: அறையில் நடந்தது என்ன?
பணிவிடை செய்யவந்த 3 பெண்களை கற்பழிக்க முயன்றதாக சவுதி இளவரசர் கைதாகி உள்ள நிலையில், அவரது அறையில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவங்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சவுதி அரேபிய முன்னாள் மன்னரான அப்துல்லாவின் மூத்த மகன் இளவரசர் மஜட் பின் அப்துல்லா(29). கடந்த செப்டம்பர் 21ம் திகதி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஓய்வெடுப்பதற்காக தன்னுடைய ஆடம்பர பட்டாளங்களுடன் பயணமாகியுள்ளார்.
37 மில்லியன் டொலர் மதிப்புள்ள அந்த மாளிகையில் பணியாற்றிய 3 பெண்களை இயற்கைக்கு எதிராக கற்பழிக்க முயன்ற வழக்கில் செப்டம்பர் 25ம் திகதி பொலிசாரால் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

(“அரசன் செய்தால் அபராதம் மக்கள் செய்தால் சிரச் சேதம் இது என்ன நியாயம்” தொடர்ந்து வாசிக்க…)

பா உ சிறிதரன் வரலாற்றை கற்றுக்கொள்ளத் தவறினால்…

போராட்டத்தின் ஆரம்ப நாட்களில் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் தங்கள் அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக இளைஞர்களைப் பயன்படுத்தினர். கூட்டணித் தலைவர்கள் துரையப்பாவுக்கு இயற்கை மரணம் இல்லை என்றனர். அன்று இளைஞனாக இருந்த வே பிரபாகரன் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு சவலாக நின்ற அல்பேர்ட் துரையப்பாவை படுகொலை செய்தார்.

(“பா உ சிறிதரன் வரலாற்றை கற்றுக்கொள்ளத் தவறினால்…” தொடர்ந்து வாசிக்க…)

மக்கள் மீது இராணுவத்தின் தாக்குதல் நிரூபணம்

இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, இலங்கையின் இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களினால் பொதுமக்கள் கொல்லப்பட்டதை ஏற்றுக் கொள்வதாக, ஓய்வுபெற்ற நீதியரசர் மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஏற்றுக் கொண்டுள்ளது.காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளுக்கான நியமிக்கப்பட்ட இந்தக் குழுவினது ஆணைப்பரப்பு, இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் தொடர்பான விசாரிப்பதற்கு விரிவுபடுத்தப்பட்டது.

(“மக்கள் மீது இராணுவத்தின் தாக்குதல் நிரூபணம்” தொடர்ந்து வாசிக்க…)

பாடும்மீன்கள் – கனடா

வருடாந்த பொதுக் கூட்டம்

பாடும்மீன்களின் அங்கத்தவர்கள் நண்பர்கள் நலன்விரும்பிகள் அனுசரணையாளர்களுக்கு:

எமது வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி நடைபெறவுள்ளது. கடந்த பதின்னான்கு வருடங்களாக கனடாவில் வாழும் எமது பிரதேசமக்களின் ஒட்டுமொத்த பங்களிப்புடன் மிகச்சிறப்பாக நடைபெற்று வரும் ஒன்றுகூடல் ஊடாக தாயகத்தில் பல நற்காரியங்களை முடிந்தவரை செய்து வருகின்றோம் என்பது நீங்கள் அறிந்ததே.

(“பாடும்மீன்கள் – கனடா” தொடர்ந்து வாசிக்க…)