‘பயங்கரவாத தடுப்புச்சட்டம் நீக்கப்படாது’

‘பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அகற்ற வேண்டும் என்றால் அதற்கு இணையான அல்லது நாட்டைப் பாதுகாக்கக்கூடிய சட்டமொன்று உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறான புதிய பலமான சட்டம் உருவாக்கப்படும் வரை பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நீக்கப்படாது’ என, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

(“‘பயங்கரவாத தடுப்புச்சட்டம் நீக்கப்படாது’” தொடர்ந்து வாசிக்க…)

மோடி செய்த இருபதாயிரம் கோடி எரிவாயு ஊழல்

(அ.மார்க்ஸ்)

நரேந்திர மோடி குஜராத்தில் முதலமைச்சராக இருந்த காலத்தில் நடைபெற்ற 19,716 கோடி ரூபாய் அளவிலான ஊழல் ஒன்றை CAG யின் தணிக்கை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. சென்ற மார்ச் 31 அன்று இந்த அறிக்கை குஜராத் சட்டமன்றத்தில் வைக்கப்பட்டபோதும் இது உரிய அளவில் கவனம் பெறவில்லை. திங்கள் கிழமை ஆங்கில இந்து நாளிதழில் இது குறித்த ஒரு விரிவான கட்டுரையை காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெயராம் ரமேஷ் எழுதியுள்ளார்.

(“மோடி செய்த இருபதாயிரம் கோடி எரிவாயு ஊழல்” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம்(பதிவு13)

அய்யா அம்மா வீட்டில் எவ்வளவோ கஷ்டங்கள் வந்தபோதும் அண்ணன் பற்குணத்தின் பணத்தேவைகளை எப்படியோ கடன்பட்டு சமாளித்தனர்.அய்யா ஊரில் இல்லாதபோது ஏதாவது பணம் தேவையான நேரங்களில் எமது உள்ளூரில் சிறிய பலசரக்குக் கடை நடாத்தி வந்த வேலன் என்கிற வேலப்பா அவசர தேவைகளுக்கு கை கொடுப்பார்.இவர் தன் பொருட்களுக்கு ஒரு சில சதங்களை ஆதாயமாக வைத்து வியாபாரம் செய்தபோதும் ஊரில் சிலர் விளக்கமின்றி கொள்ளை வேலன் என்பார்கள்.ஆனால் அவர் நல்ல மனிதர்.நாணயமானவர்.எங்களுக்கு உணவுத்தேவைகளுக்கு கூட கடன் தந்தவர்.ஒரு நாளும் கடனை திருப்பிக் கேட்டு தொல்லை தந்தது இல்லை.

(“பற்குணம்(பதிவு13)” தொடர்ந்து வாசிக்க…)

காணாமற்போன மூவர் சிறையில் உள்ளனர்

வவுனியா முத்தையன்கட்டு மற்றும் புளியம்பொக்கணை ஆகிய இடங்களிலிருந்து, 10 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமற்போனதாகத் தெரிவிக்கப்படும் இளைஞர்கள் மூவர், மாலைதீவுகளிலிருந்து கொழும்புக்கு அழைத்துவரப்பட்டு, வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தனது இளைய சகோதரன், 2005இல் வீட்டைவிட்டு வெளியே விளையாடச் சென்றிருந்த போது, காணாமற்போயிருந்ததாகவும் சம்பவம் நடந்து ஆறு ஆண்டுகளின் பின்னர், தொலைபேசியில் தொடர்பு கொண்ட அவர், மாலைதீவுகள் சிறை ஒன்றில் தான் உள்ளதாகக் கூறியதாகவும் அவர்களை நேரில் சென்று பார்த்துவிட்டுத் திரும்பிய கௌரிராஜா கவிதா தெரிவித்துள்ளார்.

(“காணாமற்போன மூவர் சிறையில் உள்ளனர்” தொடர்ந்து வாசிக்க…)

பிரிவு எதற்கு?

(அகிலன் கதிர்காமன்)

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், ஈ.பி.டி.பியிலிருந்து வெளியேறிவிட்டதாக அறிவித்திருக்கிறார். சந்திரகுமாரின் இந்த வெளியேற்றத்தைப் பற்றி, அரசியல் வட்டாரங்களில் ஏற்கெனவே ஓர் எதிர்பார்ப்பிருந்தது. ஆனாலும் இப்போதுதான் தன்னுடைய விலகலை உத்தியோகபூர்வமாகத் தெரிவித்திருக்கிறார் சந்திரகுமார். ஆனால், சந்திரகுமாரின் இந்த வெளியேற்றத்தைப் பற்றி, இதுவரையில் ஈ.பி.டி.பி வட்டாரங்கள் எதுவும் தெரிவிக்கவில்லை. ஈ.பி.டி.பியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலும் இதைப்பற்றிய செய்தி எதுவும் வெளியிடப்படவில்லை.

(“பிரிவு எதற்கு?” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் (பதிவு 12)

எமது பெரிய அண்ணன் அப்போது றத்தோட்டையில் ஆசிரியராக பணிபுரிந்தார்.எனவே அண்ணன் கண்டிப்பாக வருவார் என நம்பினார்.அவர் வரவே இல்லை.இதனிடையே பற்குணத்தின் சங்கடமான நிலைமையைப் புரிந்த சக மாணவ நண்பர்கள் தங்களிடமுள்ள மீதிப் பணங்களைச் சேர்த்து அவருக்குரிய பதிவுகளை செய்ய உதவினார்கள் .அன்றைய கால மாணவர்களின் புரிந்துணர்வு அப்படி இருந்தது.

(“பற்குணம் (பதிவு 12)” தொடர்ந்து வாசிக்க…)

பிரசாந்தனுக்கு விளக்கமறியல் நீடிப்பு

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரர் ஹரன் ஆகியோரை எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார். 2008ஆம் ஆண்டு காத்தான்குடி, ஆரையம்பதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில்; தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரான பூபாலபிள்ளை பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரர் ஹரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று செவ்வாய்க்கிழமை மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இவ்வாறு விளக்கமறியல் நீடிக்கப்பட்டது.

ஈ பி டி பி க்குள் பிளவு வெறு வாய்களுக்கு கிடைத்த அவல்?

காத்திருந்த செய்தி கிடைத்ததும் போட்டுத் தாக்கும் முனைப்பு மீண்டும் முளைவிடுகிறது. உடைந்தது ஈபிடிப!, பிளந்தது கட்சி! வெளியேறினார் சந்திரகுமார்! என தம் விருப்பு தலையங்கம் இட்டு தம்மை திருப்திப்படுத்த முற்பட்ட எதிர்பார்ப்பு அன்பர்கள் அறியாத ஒரு விடயம், ஈபிடிபியில் தலை இருக்க வால்கள் ஆட முடியாது. அவை வாலாட்ட மட்டுமே முடியும் என்பதே. தன்னை முன்னிலை படுத்துவதில் தேவானந்தாவுடன் யாரும் போட்டி போட முடியாது. நண்பர் கூட்டத்திற்கும் தலைமை வகிப்பார், இயக்கத்திலும் முன்னிலை பெறுவார் கட்சியிலும், அரசியலிலும் தன் தலைமையை தக்க வைப்பார்.

(“ஈ பி டி பி க்குள் பிளவு வெறு வாய்களுக்கு கிடைத்த அவல்?” தொடர்ந்து வாசிக்க…)

பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறீர்கள், வாழ்த்துகள்!

பெரு நிறுவனங்கள் முதல் ‘ஸ்டார்ட்-அப்’ நிறுவனங்கள் வரை ஊழியர்களின் நிலைமை மிக மோசம். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக நான் பணிபுரிந்த ‘ஹப்ஸ்பாட்’ எனும் மென்பொருள் நிறுவனத்தில், ஒருவர் பணிநீக்கம் செய்யப்படுவதைப் ‘பட்டம் பெறுதல்’ என்று அழைப்பார்கள். அணியினர் அனைவருக்கும் பாஸிடமிருந்து குதூகலமான மின்னஞ்சல் ஒன்று வரும். “அன்புள்ள அணியினருக்கு, நம்முடன் பணிபுரிந்த ‘இன்னார்’ பட்டம் பெற்றுவிட்டார் என்பதைத் தெரிவிக்கவே இந்த மின்னஞ்சல்.

(“பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறீர்கள், வாழ்த்துகள்!” தொடர்ந்து வாசிக்க…)

முதலாளிக்கும் மூளை இருக்கின்றது

பிரேசிலின் மிகப்பெரும் கோடீஸ்வரர் தனக்கு சொந்தமான பத்து லட்சம் அமெரிக்க டொலர் மதிப்புள்ள பெண்ட்லே சொகுசு காரை புதைக்க விரும்புவதாக விளம்பரப்படுத்தினார், அதற்கு அவர் சொன்ன காரணம் இறப்புக்கு பின்னர் இந்த கார் பயன்படும் என்று. இதைக்கேட்ட பத்திரிக்கைகள் விமர்சனம் செய்தன, பைத்தியக்காரன் பத்துலட்சம் டொலரை வீணடிக்கிறானே முட்டாள் என்றெல்லாம் திட்டி எழுதினார்கள். பொதுமக்கள் திட்டி தீர்த்தார்கள். புதைப்பதாக சொன்ன தேதியும் வந்தது எல்லோரும் ஆவலாக என்னதான் நடக்குது என்று பார்க்க கூடினர்.

(“முதலாளிக்கும் மூளை இருக்கின்றது” தொடர்ந்து வாசிக்க…)