சி.வி – ஜனாதிபதி சந்திப்பு இன்று இடம்பெறாது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான இன்றைய (18) சந்திப்பு, காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவ்விருவருக்குமிடையிலான சந்திப்பு, இன்று திங்கட்கிழமை (18) காலை இடம்பெறவிருந்தது. இந்தச் சந்திப்பில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்துகொள்ளவிருந்தார். இருப்பினும், முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக, இந்தச் சந்திப்பு இடம்பெறாது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

(“சி.வி – ஜனாதிபதி சந்திப்பு இன்று இடம்பெறாது” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம்(பதிவு 11)

எங்கள் பெரிய அண்ணன் திருமணமாகி அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.எங்கள் குடும்பத்தில் அம்மா வழியிலும் சரி,அய்யா வழியிலும் குடும்பத்துக்கு ஒரு பெண்பிள்ளைதான்.ஆனால் எங்கள் குடும்பத்தில் எல்லோரும் ஆண்பிள்ளைகள் .அந்த பெண்பிள்ளை வெற்றிடத்தைப் மாமா மகள் ராணி என்பவள் நிரப்பினாள்.இதன் பின் எங்கள் குடும்ப வாரிசாக பெண் பிள்ளையாக அண்ணன் மகள் பிறந்தாள்.இவள் மீது பற்குணம் மிகுந்த அன்பு செலுத்தினார்.அதே போலவே அவளும் சித்தப்பா என மிகுந்த பாசம் வைத்திருந்தாள்.

(“பற்குணம்(பதிவு 11)” தொடர்ந்து வாசிக்க…)

பொது ஜனம் கேட்கின்றார்

 

இந்தியாவில் இருந்து பேச்சாளர்களை வரவழைத்து பட்டிமன்றம் நடத்தும் வடமாகாண கல்வி அமைச்சு அந்த பணத்தில் இந்த வன்னிப் பாடசாலைகளுக்கு ஏன் கூரை அமைத்து கொடுக்க முடியாது?

யாழ்.மண் சாதாரண மண்ணல்ல! இந்தியத் துணைத்தூதுவர்

யாழ் மண் சாதாரண பூமி கிடையாது. அந்த மண்ணை சாதாரணமாக நாங்கள் கருதவதில்லை. இதுவொரு புண்ணிய பூமி, இதுவொரு இலக்கிய பூமி. இதுவொரு சிந்தனைபூமி, இதுவொரு அறிவுடைய பூமி என இந்தியத் துணைத் தூதுவர் நடராஜன் தெரிவித்துள்ளார். சுதந்திர இந்தியாவில் சட்டம் மற்றும் நீதித்துறைக்கான முதலாவது அமைச்சர் கலாநிதி பி.ஆர்.அம்பேத்கார் அவர்களது 125ஆவது பிறந்த தினத்தினையும், தமிழ் சித்திரைப்பிறப்பினை கொண்டாடும் முகமாகவும் யாழ். இந்திய துணைத்தூதரகம் மற்றும் வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற புத்தாண்டு பட்டிமன்ற நிகழ்வு நேற்று யாழ். நல்லூர் சங்கிலியன் தோப்பில் யாழ். இந்திய துணைத்தூதுவர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது.

(“யாழ்.மண் சாதாரண மண்ணல்ல! இந்தியத் துணைத்தூதுவர்” தொடர்ந்து வாசிக்க…)

அர­சி­ய­ல­மைப்பு நட­வ­டிக்­கைக்­ கு­ழுவின் முத­லா­வது கூட்டம் 28 ஆம் திகதி

நாட்­டுக்கு ஏற்ற அர­சி­ய­ல­மைப்பை தயா­ரிப்­ப­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட அர­சி­ய­ல­மைப்பு சபையின் நட­வ­டிக்கை குழுவின் முத­லா­வது கூட்டம் எதிர்­வரும் 28ஆம் திகதி நடை­பெறும். அர­சி­ய­ல­மைப்பு சபையின் நட­வ­டிக்கை குழு கடந்த 6ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் நிய­மிக்­கப்­பட்­டது. இதன் தலை­வ­ராக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க செயற்­ப­டுவார். அர­சாங்க மற்றும் எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­களை உள்­ள­டக்­கிய நட­வ­டிக்கை குழுவில் 21பேர் அங்கம் வகிக்­கின்­றனர். இக்­குழு 28ஆம் திகதி முதன் முறை­யாக கூடு­வ­துடன் அதன் பின்னர் வாரம் ஒரு முறை கூடி அரசியலமைப்பு தயாரிப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தும்.

EPDP கட்சியிலிருந்து விலகி, புதிய செயற்பாட்டைத் தொடரவுள்ளேன் – சந்திரகுமார்

தமிழ் மக்களின் உணா்வுகளுக்கு மதிப்பளித்து எனது அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினா் முருகேசு சந்திரகுமார் அவா்கள் தெரிவித்துள்ளார் தமிழ்பேசும் மக்களுக்குரிய நியாயமான அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்ளுவதற்கு அர்த்த புர்வமாகச் செயற்படவுள்ளதாகவும் இதற்கான புதிய சூழ்நிலைகள் உருவாகி வரும் சந்தர்ப்பத்தில் பல்வேறு சக்திகளையும் அவற்றின் தனித்தன்மைகளுடன் ஒன்றிணைய வைத்துச் செயலாற்ற விரும்புவதாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்திருக்கிறார்.

(“EPDP கட்சியிலிருந்து விலகி, புதிய செயற்பாட்டைத் தொடரவுள்ளேன் – சந்திரகுமார்” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம்(பதிவு-10)

பற்குணம் படிக்கப் போகும் காலத்தில் வழியில் சிலர் வழிமறித்து வம்பு சண்டைக்கு இழுத்தவரகளும் உண்டு.கேலி கிண்டல் பண்ணியவர்களும் உண்டு.எங்கள் குடும்ப வறுமைக்குள் இவர்களுக்கு படிப்பு தேவையா எனக் கேட்டவர்களும் உண்டு.அவர்களே இப்போது வியப்போடு ஆச்சரியப்பட்டு அண்ணனைப் பாராட்டினார்கள். அம்மா ஆஸ்பத்திரியில் இருந்த காலங்களில் அம்மாவிடம் சில நகைகள் இருந்தன.அவற்றை விற்றே வாழவேண்டிய சூழ்நிலையில் எங்கள் குடும்பம் இருந்தது. நிலைமை புரிந்தாலும் அம்மாவுக்கு அதில் உடன்பாடில்லை .அய்யாவிடம் இதை தடுக்க முயன்றார்.அப்போது அய்யா சொன்னாராம் பிள்ளைகளின் படிப்புக்கும் சாப்பாட்டுக்கும் உதவாத நகையுன் பணமும் எதுக்கு என்றாராம்.

(“பற்குணம்(பதிவு-10)” தொடர்ந்து வாசிக்க…)

எழுச்சிகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் வித்திட்ட 1971 கிளர்ச்சி

வடக்கு – கிழக்கு மாகாணங்களில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்கள், போரின் போது உயிரிழந்த புலிகள் இயக்க உறுப்பினர்களை, வருடத்தில் இரண்டு தினங்களில் நினைவுகூருகிறார்கள். போரின் காரணமாக முதன்முதலாக சங்கர் என்னும் புலி உறுப்பினர் கொல்லப்பட்ட நவம்பர் மாதம் 27ஆம் திகதி மாவீரர் நாளாகவும் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டதாகக் கருதப்படும் மே மாதம் 18ஆம் திகதி, முள்ளிவாய்க்கால் ஞாபகார்த்த தினமாகவும் பெயரிடப்பட்டு, அவ்வாறு நினைவுகூரப்படுகிறது.

(“எழுச்சிகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் வித்திட்ட 1971 கிளர்ச்சி” தொடர்ந்து வாசிக்க…)

மா.பா.சி. கேட்டவை (தினக்குரல் பதிவுகள்)” எனும் நூலை புதிய பண்பாட்டுத்தளம் வெளியிடுகிறது

மா.பா.சி. கேட்டவை (தினக்குரல் பதிவுகள்)” எனும் நூலை புதிய பண்பாட்டுத்தளம் வெளியிடுகிறது.இந் நூல் வெளியீடும் நூலாய்வும் கொழும்பு தமிழ்ச் சங்கம், சங்கரப்பிள்ளை மண்டபத்தில், 17.04.2016 மாலை 4.30 மணியளவில் நடைபெறவுள்ளது. வேறுபட்ட பல அமைப்புகளது பரிமாணங்களை இந்நூலில் தரிசிக்க இயலுகிறது. கூட்ட உரைகளின் விவரணம், பத்திரிகைத் தமிழ், இலக்கிய ரசனைப்பாங்கு என்பவற்றின் சங்கமிப்போடு கூடிய இந்த நூலின் நடையியல் தமிழுக்குப் புதிது; 2007 – 2014 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்டதான காலகட்டத்தின் எமது கலை – இலக்கிய – சமூக அரங்குகளின் இயங்காற்றல் – செல்நெறிப் பரிணமிப்புகளை வெளிப்படுத்தும் வடிவத்தினாலும், புதிய பாணி நடையியல் வீச்சுக் காரணமாயும் இந்த நூல் பெரும் கவனிப்புக்குரியது. இலங்கையிலுள்ள 844 ஆளுமைகளின் விவரிப்புகள் இந்நூலின் பெயர்ச்சுட்டியில் இடம்பெறுவது தனிச் சிறப்பு.

 

(“மா.பா.சி. கேட்டவை (தினக்குரல் பதிவுகள்)” எனும் நூலை புதிய பண்பாட்டுத்தளம் வெளியிடுகிறது” தொடர்ந்து வாசிக்க…)

பணத்தால் நான்: பணத்தோடு நான்: பணத்திற்காகத்தான் நான்

விருத்தாசலத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்திற்கு செல்கிறார் ஜெயலலிதா. இரண்டு பேர் சாகின்றனர்; 17 பேர் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்படுகின்றனர். இது, பொதுக் கூட்டத்திற்கு சென்றவர்களின் நிலை. அது பொதுக்கூட்டம் தானே, போர்க்களம் அல்லவே! பின் ஏன் சாவுகள் நிகழ வேண்டும்? ஈ.வெ.ரா., அண்ணாதுரை, முத்துராமலிங்க தேவர், ராஜாஜி போன்ற தலைவர்களின் சிந்தனை திறன் மிக்க பேச்சைக் கேட்க, மக்கள் கடலெனத் திரண்டனர். அவர்களின் பேச்சுகள் நிகழும் மைதானங்கள், மாலை நேர கல்லுாரிகளாகவே மாறின. அந்த வகையில், பழைய தலைமுறையின் கருத்து வளமும், சொல்வளமும் மிக்க பேச்சாளர்களில் இன்று எஞ்சி இருக்கும் இருவர், கருணாநிதியும், அன்பழகனும் தான்.

(“பணத்தால் நான்: பணத்தோடு நான்: பணத்திற்காகத்தான் நான்” தொடர்ந்து வாசிக்க…)