வெட்கித் தலைகுனிவோம் – யாழில் 3 ஊடகவியலாளர்கள் பணி விலகல்

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கடந்த வாரம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்த கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு யாழ் ஊடகமொன்றில் பிரசுரிக்கப்பட்ட செய்தி தவறானது என சுமந்திரன் எம்.பி யினால் கொடுக்கப்பட்ட மறுப்பினை வெளியிட்டமை தொடர்பில் இரா.சம்பந்தன் குறித்த செய்தியை எழுதிய ஊடகவியலாளரும் அவரிற்கு ஆதரவாக இரு ஊடகவியலாளர்களும் தமது பணியினை இராஜினாமாச் செய்துள்ளதாக தெரிவிகப்படுகின்றது.

(“வெட்கித் தலைகுனிவோம் – யாழில் 3 ஊடகவியலாளர்கள் பணி விலகல்” தொடர்ந்து வாசிக்க…)

ஒரு புகையிரதப் பயணம்போல் அரசியல் கட்சி ஒன்றின் பயணத்திலும் பலர் வருவார்கள் போவார்கள் – தோழர் டக்ளஸ் தேவானந்தா ஈபிடிபி செயலாளர் நாயகம்

ஒரு புகையிரதப் பயணம்போல் அரசியல் கட்சி ஒன்றின் பயணத்திலும்பலர் வருவார்கள் போவார்கள். ஒரு ஜனநாயகக் கட்சியில் இவையெல்லாம் சகஜமானவைதான். புகையிரதம் அதன் இலக்கை நோக்கி பயணத்தை தொடர்வதைப்போல், கட்சியின் பயணமும் அதன் இலக்கு நோக்கி தொடரும்.

(“ஒரு புகையிரதப் பயணம்போல் அரசியல் கட்சி ஒன்றின் பயணத்திலும் பலர் வருவார்கள் போவார்கள் – தோழர் டக்ளஸ் தேவானந்தா ஈபிடிபி செயலாளர் நாயகம்” தொடர்ந்து வாசிக்க…)

ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து அறிந்ததும் அறிய வேண்டியதும்…..

தமிழினியின் பிறப்பிலிருந்து போராட்ட வாழ்க்கை, அவரின் தனிப்பட்ட திறமைகள், இயக்கத்தில் அவருக்கு கொடுக்கப்பட்ட பணிகள், இறுதியில் சரணடைவு புனர்வாழ்வு, அவரின் குடும்ப பின்னணியையும் அறியக் கூடியதாக இருந்தது. இது அவர் வாழ்ந்த பெரும்பாலான வன்னி மக்களுக்கு தெரிந்தவையே.

(“ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து அறிந்ததும் அறிய வேண்டியதும்…..” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம்(பதிவு 14)

பற்குணம் வயல்களில் வேலை செய்த காலங்களில் படிக்காத பாமர தொழிலாளர்களே இவர்களது வழிகாட்டிகள். பற்குணமும், தங்கராசாவுமே படித்தவர்கள். அந்த பாமர மக்களின் பேச்சுக்களையும் நடவடிக்கைகளையும் இரசித்துக்கொண்டே அவர்களின் சொல் கேட்டு வேலை செய்வார்கள்.(தங்கராசா பின்னாட்களில் கச்சேரியில் தலைமை லிகிதராக பணிபுரிந்தவர்)

(“பற்குணம்(பதிவு 14)” தொடர்ந்து வாசிக்க…)

ஐரோப்பிய ஒன்றிய மீன் ஏற்றுமதி தடை நீக்கம்

ஐரோப்பிய ஒன்றியத்தால் (EU) விதிக்கப்பட்ட மீன் ஏற்றுமதி தடை நீக்கப்பட்டுள்ளதாக மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இன்று (21) இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, குறித்த தடையை நீக்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் இணக்கம் தெரிவித்துள்ளது. கடந்த அரசாங்க காலத்தில், 2014 ஒக்டோபர் மாதம் ஐரோப்பிய யூனியனால் குறித்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. சர்வதேச கடல் எல்லை தொடர்பான நிர்வாகம், கட்டுப்பாடு, மேற்பார்வை போன்றவை தொடர்பில் ஒழுங்கற்று செயற்படுவதாக தெரிவித்தே குறித் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இன்றைய தினம் (21) குறித்த பேச்சுவார்த்தை இடம்பெறவிருந்த நிலையில், குறித்த தடை நீக்கப்பட்டுள்ளதாக, நேற்றுமுன்தினம் (19) மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சின் செயலாளரால் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்று விடுக்கப்பட்டிருந்ததோடு, பின்னர் அவ்வாறான அறிக்கையை தான் விடுக்கவில்லை என அவர் தெரிவித்திருந்தார்.
சூடான நாட்களும் தேவையான நடவடிக்கைகளும்.

வடக்கு, கிழக்குக்கு சமஷ்டி கோரும் யோசனை வடமாகாண சபையில் நிறைவேற்றம்

வடக்கும் கிழக்கும் இணைந்த மாகாணத்துக்கு சமஷ்டி ஆட்சி முறைமை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உள்ளிட்ட பல கோரிக்கைகளை அரசியலமைப்புத் திருத்தத்தில் உள்ளடக்க வேண்டும் என வட மாகாண சபையில் முன்வைக்கப்பட்ட யோசனை, இன்று வெள்ளிக்கிழமை (22) ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் இந்த யோசனை, சபையில் முன்வைக்கப்பட்டது. இந்த யோசனையைத் தயாரிப்பதற்காக, வட மாகாணசபையினால் விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டிருந்தது. இக்குழு, வடக்கின் பல பிரதேசங்களுக்கும் செய்து பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தே, மேற்படி யோசனையைத் தயாரித்திருந்தது.

(“வடக்கு, கிழக்குக்கு சமஷ்டி கோரும் யோசனை வடமாகாண சபையில் நிறைவேற்றம்” தொடர்ந்து வாசிக்க…)

பெருமைகொள் தமிழா

டொரோண்டோ மற்றும் அதன் பெரும் பாகத்திலும் “பெருமைகொள் தமிழா” என்று பெருமிதம் செய்து வந்த “வணக்கம் எப் எம்” வானொலி அதன் 102.7fm என்ற உரிமத்தை இழந்து விட்டது….102.7 fm கடந்த வருடம் 2015 இல் கீதவாணி வானொலி நிலைய இயக்குனர் நடா ராஜ்குமாருக்கு வழங்கப்பட்டு இருந்த போதிலும் “வணக்கம் எப் எம்” – இவர்கள் நடத்தில் வந்தார்கள் இந்த பன் வானொலி அலை வரிசை வானொலியாக நடத்த வென்றும் மென CRTC (கனடியன் ரேடியோ-டெலிவிஷன் மற்றும் தொலைத்தொடர்பு) வழங்கப்பட்டிருந்தது “வணக்கம் எப் எம்” அதையும் மீறி இவர்கள் தமிழுக்கே முக்கியத்துவம் வழங்கி நடாத்தி வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது……

நகோனோ – கரபாக்: மௌனமாக ஒரு யுத்தம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

உலகின் பல மூலைகளிலும் நடப்பவை நம் காதுகளை எட்டுவதில்லை. எட்டுவனவும் முழுமையான செய்திகளல்ல. அவற்றிற் பாதி உண்மையுமல்ல. தெரிந்தே திரித்த செய்திகள் எங்களை அடைகின்றன. உலகின் செய்தி வழங்குனர்கள் தரும் செய்திகளை விடத் தராமல் விடும் செய்திகள் பல சமயங்களில் முக்கியமானவை. செய்திகளின் முக்கியம், அவை யாருக்கானவை என்ற அடிப்படையிலேயே முடிவாகின்றன.சில நாட்களுக்கு முன்னர், கிழக்கு ஐரோப்பிய நாடுகளான ஆர்மேனியாவுக்கும் அஸர்பைஜானுக்குமிடையே மூண்ட யுத்தம், நெடுங்காலமாகத் தொடரும் முரண்பாட்டைப் பொதுவெளிக்குக் கொண்டு வந்துள்ளது. இரு நாடுகளும் போரிடுதற்குக் காரணமாக அமைந்தது, நகோனோ-கரபாக் என்ற நிலப்பரப்பாகும். ஆர்மேனியாவுக்குரிய நகோனோ-கரபாக் அஸர்பைஜானாற் சூழப்பட்ட நிலப்பரப்பாகும்.

(“நகோனோ – கரபாக்: மௌனமாக ஒரு யுத்தம்” தொடர்ந்து வாசிக்க…)

இதுவே என் கடைசி உரையாகக்கூட இருக்கலாம் – ஃபிடெல் காஸ்ட்ரோ

“இதுவே என் கடைசி உரையாகக்கூட இருக்கலாம். நமது லத்தீன் அமெரிக்க நண்பர்களுக்கும் பிற நாட்டு நண்பர்களுக்கும் கியூப மக்கள் எப்போதும் வெற்றியாளர்களே என்ற செய்தியை தெரிவிக்க வேண்டும்” என ஃபிடெல் காஸ்ட்ரோ தனது உரையில் தெரிவித்துள்ளார். கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஃபிடெல் காஸ்ட்ரோவின் சகோதரர் ரவுல் காஸ்ட்ரோ ஏற்றுக்கொள்வார் என அந்நாடு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பும் அதன் நிமித்தமாக ஃபிடெல் காஸ்ட்ரோ ஆற்றிய உரையும் இந்த உலகுக்கு ஒரு ஆணித்தரமான செய்தியை தெரிவித்திருக்கிறது.

(“இதுவே என் கடைசி உரையாகக்கூட இருக்கலாம் – ஃபிடெல் காஸ்ட்ரோ” தொடர்ந்து வாசிக்க…)

சம்பந்தனின் அரசியலும் திமிரும்

ஏக தலைமைத்துவம் என்கிற அரசியல் அதிகார நிலை கொடுக்கும் அடாவடித்தனமான திமிரையும் அலட்சியப் போக்கினையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் வெளிப்படுத்தினார். எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், வடக்கில் தொடர்ச்சியாக சில நாட்கள் தங்கியிருந்து மக்கள் சந்திப்புக்களையும் அரசியல் கலந்துரையாடல்களையும் கடந்த வாரமே அவர் நிகழ்த்தினார்.

(“சம்பந்தனின் அரசியலும் திமிரும்” தொடர்ந்து வாசிக்க…)