தியாகிகள் தின மூலவர்கள் பற்றிய எனது பதிவு!

 

எண்ணற்ற போராளிகள், பொதுமக்களை காவுகொண்ட ஈழ விடுதலை போராட்டத்தில், இரண்டு கரும்புள்ளிகள். அவை மிக மோசமான சகோதரப் படுகொலைகள். அதற்கு முன்பும் பல சகோதரப் படுகொலைகள் இடம்பெற்ற போதும், பெருமெடுப்பில் எதிரியே அடைக்கலம் தருகிறேன்? எனது முகாமுக்கு வா! என அழைப்பு விடுக்கும் அளவிற்கு கேவலப்பட்டது எம் ஈழ விடுதலை போராட்டம். அதில் ஒன்று டெலோ மற்றும் ஈ பி ஆர் எல் எப் போராளிகள் மீதான தாக்குதல், மற்றது நாபா உட்பட நிராயுதபாணிகளாக இருந்தவேளை, பலியெடுக்கப்பட்ட 13 உன்னதமான, என்னுடன் இறுதிவரை உறவாடிய உயிர்கள். அது நடந்தது 1990ம் ஆண்டு ஜூன் மதம் 19ம் நாள். கொலைக்கு உத்தரவிட்டவர், திட்டமிட்டவர், நடத்திமுடித்தவர்கள் உயிரோடு இல்லாவிட்டாலும், உள்வீட்டில் இருந்து உதவியவர்கள், இன்னமும் உயிரோடு தான் உலவுகின்றனர். இந்த உண்மை தெரிந்தும் எதுவும் செய்ய முடியாது என் முன் மௌனமாய் அழுத ஸ்டாலின் அண்ணாவும், அண்மையில் உலக வாழ்வை விட்டு நீங்கிவிட்டார். அன்று அவர் எழுப்பிய கேள்வி, அந்த வீட்டில் அதுவரை இருந்த AK 47 இயந்திர துப்பாக்கிகள், அந்த சம்பவத்துக்கு முன்னைய தினங்களில் ஏன் இடம்மாற்றப்பட்டன? என்பதே. விடை தெரியாமல் அவரும் எம்மை விட்டு பிரிந்துவிட்டார். ஆனால் அதை செய்ததால் பலன் அடைந்தவர்கள், ஒருநாள் பகிரங்கப்படுத்தப்படுவர். காலம் தன் கடமையை நிச்சயம் செய்யும்.

(“தியாகிகள் தின மூலவர்கள் பற்றிய எனது பதிவு!” தொடர்ந்து வாசிக்க…)

கூலிக்கு மாரடிக்கும் இலங்கை ஊடகங்களின் அயோக்கியத்தனம்

சிவா சுப்பிரமணியத்தின் மரணத்தில் சிறப்பாக வெளிச்சமானது.

(நயினை ந.ஜெயபாலன்)

நாய் பூனையின் சிலுமிசங்களைக் கூட செய்திகளாக்கி மக்களிடம் கொண்டு சேர்க்கும் இலங்கைத் தமிழ் ஊடகத்துறைக்கு சிவா சுப்பிரமணியம் ஒரு பொருட்டாகத் தெரியவில்லையோ?.

(“கூலிக்கு மாரடிக்கும் இலங்கை ஊடகங்களின் அயோக்கியத்தனம்” தொடர்ந்து வாசிக்க…)

நியோகா…………

 

நியோகா திரைப்படம் பார்க்ககிடைத்தது திரையரங்கில் ..எனக்கு மிகவும் பிடித்திருந்த்தது ஆதலால்
அது பற்றி குறிப்பெழுத வேண்டும் என்று நினைத்திருந்தேனனாலும் தமிழில்Type பண்ணுவது சிரமமம் எனக்கிருப்பதனல் அதிகமாக விமர்ச்சித்தோ விவாதித்தோ எழுதவில்லை இதை அது மட்டுமல்லாது
வேலைப்பழுவும் மறுபுறம் இருந்தாலும் சுருக்கமாக என் கருதுக்கள் பற்றி எழுதமுனைகிறேன்.

(“நியோகா…………” தொடர்ந்து வாசிக்க…)

பொது எதிரணியின் நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்றது

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக ஆறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, பொது எதிரணியின் 35 உறுப்பினர்களால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 94 மேலதிக வாக்குகளினால், நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (09) தோற்கடிக்கப்பட்டது.

(“பொது எதிரணியின் நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்றது” தொடர்ந்து வாசிக்க…)

சிவகுமாரன் நினைவு தின நிகழ்வு

உரும்பிராய் மக்களால் கனடா ரொறன்ரோவில் ஜுன் 5, 2016 அன்று சிவகுமாரனுக்கு நினைவு தின நிகழ்வு ஒன்ற நடாத்தப்பட்டது. இந்நிகழ்வு விடுதலைக்காக தம்மை அர்பணித்த அனைத்து போராளிகள், பொதுமக்களை நினைவு கூரும் நிகழ்வாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. உரும்பிராய் மக்களுடன் பல்வேறு சமூகவியல் செயற்பாடாளர்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர். சிவகுமாரனுடன் சம காலத்தில் வாழ்ந்த நண்பர்கள் பலரும் சிவகுமாரனுடன் பழகிய காலத்து அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். இக் கூட்டத்தில் பேசிய பலரும் துரோகிகளை அழித்தல் என்ற செயற்பாட்டில் சிவகுமாரனின் பங்களிப்பு செயற்பாடுகள் பற்றியும், முதல் சயனைட் தற்கொலையாளி என்றும் விடுதலைப் போராட்டத்தின் ஆயுத நடவடிக்கைகளின் முன்னோடி என்றும் அவருக்கு புகழாரம் சூட்டினர்.

(“சிவகுமாரன் நினைவு தின நிகழ்வு” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் ஏ.ஜீ.ஏ ( பகுதி 44)

பற்குணம் தம்பலகாமத்தில் பணிக்கு சேர்ந்த சில மாதங்களின் பின் சில விவசாயிகள் பற்குணத்தைக் காண வந்தனர். தம்பலகாமத்தில. சேர்மனாக இருந்த ஒருவர் அந்த விவசாயிகளின் வயல்களுக்குப் போவதற்கான பாதையை மூடி தன் வயலோடு இணைத்துவிட்டார். அதை கேட்கப் போன அந்த விவசாயிகளை விரட்டி விட்டார். அவரகள் பொலிஸில் முறையிட்டும் முடியவில்லை. இதை பற்குணத்திடம் வந்து முறையிட்டார்கள். அவர் ஒரு முரடன் என பெயரெடுத்தவர். அதனால் அவருக்கு எல்லோரும் பயந்தே இருந்தனர். இதைக் கேட்ட பற்குணம் தான் நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பினார்.

(“பற்குணம் ஏ.ஜீ.ஏ ( பகுதி 44)” தொடர்ந்து வாசிக்க…)

துரையப்பா விளையாட்டரங்கத்தை மோடி திறந்துவைப்பார்

மீளவும் செப்பனிடப்பட்ட யாழ். துரையப்பா விளையாட்டரங்கத்தை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜானதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து திறந்துவைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வீடியோ வசதியுடனேயே அவர், இந்த வைபவத்தில் பிரதமர் நரேந்திர மோடி இணைந்துகொண்டு திறந்துவைக்கவுள்ளார். இந்த வைபவம் எதிர்வரும் 18ஆம் திகதியன்று இடம்பெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைபவத்தில் பிரதம அதிதிகளாக பங்கேற்கும் இந்தியப்பிரதமர் நரேந்திரமோடி இந்தியாவிலிருந்தும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, யாழ்ப்பாணத்திலிருந்து உரையாற்றுவர்.

பற்குணம் ஏ.ஜி.ஏ (பகுதி 43 )

கிண்ணியாவில் இருந்து குணராசா (செங்கை ஆழியான்) இவரை இடம் மஜீத் இடம் மாற்றியதால் அந்த இடத்தை தற்காலிமாக பற்குணம் பொறுப்பேற்றார். கூடவே தம்பலகாம்மும் அவரின் கீழே இருந்தது.ஒரு நாள் அவருடன் நான் கிண்ணியா போய் கொண்டிருந்தேன்.ஒருவர் நடந்தே பொய்க் கொண்டிருந்தார்.அவரைக் கண்டதும் காரை சற்று அருகே நிறுத்திவிட்டு என்னை பின்னால் இருக்க சொன்னார்.வழமையாக யாரை அவர் ஏற்றினாலும் நான் நானாகவே பின்னால் சென்றுவிடுவேன்.காரணம் வயதுக்கு மரியாதை.

(“பற்குணம் ஏ.ஜி.ஏ (பகுதி 43 )” தொடர்ந்து வாசிக்க…)

மாறி வரும் நம் மரபுகள்-கலியாணம்

என் சிறு வயது முதல் பல கலியாண வீடுகளை எங்கள் சேனையூர் கட்டைபறிச்சான் பிரதேசத்தில் பார்த்திருக்கிறேன்.எனக்கு நினைவில் உள்ள முதல் கலியாண வீடு அப்புச்சியின் தங்கச்சி சின்னமாமியின் கலியாணம்.அந்த வீட்டு முற்றத்தில் பரப்பப் பட்ட வெண் மணலும் வாழை கமுகம் தென்னம் குருத்து அலங்காரமும் கொட்டகையும் வரிசைக் கால்களும் நிலவொளியில் பட்டுத்தெறிக்கும் அழகாய் பூத்த நாடகள்.

(“மாறி வரும் நம் மரபுகள்-கலியாணம்” தொடர்ந்து வாசிக்க…)

‘ஈழக் கனவை தோல்வியடைய செய்வோம்’

நாட்டுக்குள்ளும் வெளியேயும் உள்ள ஈழம் என்ற கனவு மற்றும் விடுதலை புலிகளின் சித்தாந்தத்தை நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து இல்லாதொழிப்போம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணவிட்டால் வடக்கு இளைஞர்கள் மீண்டும் ஆயுதத்தை கையில் எடுக்கும் நிலை உருவாகலாம் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். தெஹிவளை – கல்சிசை நகரமண்டபத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் வைத்து ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார். 27 வருடங்களாக வடக்கு மக்கள் முகாம்களில் இருந்தனர். நான் கேட்கின்றேன் உங்களால் அவ்வாறு இருக்க முடியுமா? அதனால் நாம் அனைவரும் எமது பிரச்சினை போலவே அவர்களது பிரச்சினைகளை உணர்ந்து கொள்ள வேண்டும்’ என்று ஜனாதிபதி கூறினார்.