கிழக்கு முதல்வருக்கு எதிராக மனுத்தாக்கல்

திருகோணமலை, சம்பூர் பாடசாலையொன்றில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது, கடற்படை உயரதிகாரியொருவரை, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் ஏசிய விவகாரத்தைச் சவாலுக்கு உட்படுத்தும் வகையில், உயர்நீதிமன்றத்தில், நேற்றுச் செவ்வாய்க்கிழமை (07), அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கிழக்கு முதலமைச்சரின் நடவடிக்கை காரணமாக, மேற்படி கடற்படை உயரதிகாரியினதும், சம்பவத்தின் போது மேடையில் நின்றிருந்த பாடசாலை மாணவர்களினதும் கௌரவம் சீர்குலைக்கப்பட்டுள்ளது எனச் சுட்டிக்காட்டி, பி.லியனாரச்சி என்ற சட்டத்தரணியால், மேற்படி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

(“கிழக்கு முதல்வருக்கு எதிராக மனுத்தாக்கல்” தொடர்ந்து வாசிக்க…)

கண்டேன் தோழர் ஸ்ராலின் அண்ணனை…….!(பகுதி 3)

தோழர் ஸ்ராலின் அண்ணாவிற்கு வாழ்கைத் துணையாக அமைந்த அண்ணி இந்திரா திருச்சியைப் பாரம்பரியமாக கொண்டவர். இவர் தனது உறவினர்களை பார்க்க இடையிடையே குடந்தை(கும்பகோணத்தை குடந்தை என்று அழைப்பர் நாம் திருகோணமலையை திருமலை என்று அழைக்கவில்லையா அதுபோல்)யில் இருந்து போய் வருவதுண்டு. தமிழ் நாட்டுப் பெண்கள் கணவரைவிட்டு தனியே பயணம் செய்யும் வழக்கங்களை தவிர்க்கும் கலாச்சாராப் பிடிக்குள் கட்டுப்பட்டு இருந்தவர்கள். ஆண்களும் இவற்றை அனுமதிக்காத ஆண் மேலாதிக்க சிந்தனையில் பலரும் இருந்தனர். தமது மனைவியை தனக்கு கீழானவர் என்று நடத்தும் பண்புகளுக்கு மத்தியில் அண்ணியை இந்திரா என்று அன்புடன் விழிப்பதைத் தவிர நான் வேறு எந்த முறையிலும் அழைப்பதைக் காணவில்லை.

(“கண்டேன் தோழர் ஸ்ராலின் அண்ணனை…….!(பகுதி 3)” தொடர்ந்து வாசிக்க…)

வெளிநாட்டவர்களுக்கு இரத்தப் பரிசோதனை அவசியம்

இலங்கையில் தங்கியிருக்கும் நோக்கத்தில் விமானம் மூலம் நாட்டுக்குள் பிரவேசிக்கும் வெளிநாட்டவர்கள் மற்றும் ஹோட்டல், சுற்றுலா சம்பந்தப்பட்ட தொழில்களுடன் தொடர்புடையவர்கள் இரத்த பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என சுகாதார அமைசர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். 25 இலட்சம் ரூபாய் செலவில் களுத்துறை, கட்டுகஹேன பிரதேச வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ‘சுவதிவி’ மருத்துவ மையத்தை திறந்துவைத்து உரையாற்றும் போது இதனைக் கூறினார். நாட்டுக்குள் வரும் வெளிநாட்டவர்களுக்கு மலேரியா, எயிட்ஸ் போன்ற நோய்கள் இருக்கின்றதா என்று அறிந்துகொள்ளுவதற்காக இவ்வாறு இரத்தப் பரிசோதளை செய்யப்படுவதாக அமைச்சர் மேலும் கூறினார்.

பற்குணம் ஏ.ஜி.ஏ (பகுதி 42 )

தம்பலகாமம் ஏ.ஜி.ஏ ஆக பொறுப்பேற்ற பின் தம்பலகாமம் பற்றி அவர் தன் பலகலைக்கழக நண்பர் சின்னராசா என்பவர் மூலம் அங்குள்ள நிலைமைகளை கேட்டு அறிந்தார்.அவர் அப்போது தம்பலகாமம் ப.நோ.கூ. சங்க முகாமையாளராக பணியாற்றினார்.அரசியல் மற்றும் நிர்வாக சீர்கேடுகள் இருந்தன. இதன் காரணமாக அதன் தலைமைப் பொறுப்பை பற்குணம் ஏற்றார்.இதுவும் அமைச்சர் மஜீத் அவர்களுக்குப் பிடிக்கவில்லை.

(“பற்குணம் ஏ.ஜி.ஏ (பகுதி 42 )” தொடர்ந்து வாசிக்க…)

கனடாவில் தோழர் ஸ்ராலின் அண்ணாவிற்கு அஞ்சலி நிகழ்வு

ஆரம்ப ஈபிஆர்எல்எவ் இற்கு தாங்கு சக்தியாக விளங்கிய தோழர் ஸ்ராலின் அண்ணாவிற்கு அஞ்சலி நிகழ்வு இன்று(June 05, 2016) கனடாவில் நடைபெற்றது. தோழர் ஜேம்ஸ் இன் வீட்டில் அமைந்துள்ள மண்டபத்தில் கூடிய பத்மநாபா மக்கள் முன்னணி(PPF)யினர் தமது கட்சியான தழிழர் சமூக ஜனநாயக் கட்சி – கனடா(SDPT- Canada) கிளை சார்பில் இந்நிகழ்வை நடாத்தினர். இதில் SDPT இன் கட்சி உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டு தமக்கும் ஸ்ராலின் அண்ணாவிற்கும் இடையேயான உறவு பற்றி பகிர்ந்து கொண்டனர். ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் அர்பணிப்பு செய்து செயலாற்றியவர் தோழர் ஸ்ராலின் அண்ணா என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.

(“கனடாவில் தோழர் ஸ்ராலின் அண்ணாவிற்கு அஞ்சலி நிகழ்வு” தொடர்ந்து வாசிக்க…)

கனடாவில் எம்மவருடன் சிவன் பவுன்டேசன்

 

சிவன் பவுன்டேசன் மோகன் என்ற கணேஸ் வேலாயுதம் உடன் சமூக வேலை ஆர்வலர்களுடனான சந்திப்பொன்று இன்று ரொறன்ரோ கனடாவில் நடைபெற்றது. கனடா செல்வசன்னதி ஆலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் ரெலோ சர்வதேசம் உறுப்பினர்கள், காட்லி கல்லூரி பழைய மாணவர் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி(SDPT)யின் உறுப்பினர் தோழர் ஜேம்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்கள், உதவிகள், புனர்வாழ்வு, வேலைவாய்பு. கல்வி ஊக்குவிப்பு என்பவற்றில் செயற்பாடுகளைக் கொண்டிருக்கும் சிவன் பவுன்டேசன் கனடாவின் எமது உறவுகளின் உதவியுடன் தமது சேவையை தொடர்வதற்கான ஆலோசனையும் செயற்திட்டங்கள் பற்றியும் இவ் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது. மத்திய அரசு, மாகாண சபைகள்(குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாண சபைகள்) தூரநோக்கு பார்வையுடனான செயற் திட்டங்களும், செயற்பாடுகளும், ஆக்கபூர்வமான சிந்தனைகளும் அற்று செயற்படும் தற்போதைய நிலமையில் இது போன்ற மக்களுக்கான சேவை முன் நகர்த்திச் செல்வதில், செயற்படுத்துவதில் உள்ள தடங்கலகள் பற்றி தோழர் ஜேம்ஸ் தனது கருத்துக்களைத் தெரிவித்தார்.

(“கனடாவில் எம்மவருடன் சிவன் பவுன்டேசன்” தொடர்ந்து வாசிக்க…)

தனக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தமிழினியின் கணவர் ஜெயக்குமார் தெரிவிப்பு!

தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவின் முன்னாள் அரசியற்துறைப் பொறுப்பாளர் மறைந்த தமிழினி என்கிற சிவகாமியின் கணவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கொழும்பிலிருந்து இயங்கும் ஆங்கில இணையத்தளமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். புலம்பெயர் தமிழ் சமூகத்தின் ஒரு தரப்பினர் தனக்கு அச்சுறுத்தல் விடுத்து வருவதாகவும், தமிழினியின் ‘ஓர் போர்வாளின் நிழலில்’ நூல் காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முகவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மாவீரர் தின மற்றும் வேறும் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு கடந்த காலங்களில் பணம் திரட்டிய தரப்பினர், தற்போது பொட்டு அம்மான் உயிருடன் இருப்பதாக பிரச்சாரம் செய்து புலிகளை மீளவும் இயங்கச் செய்ய முயற்சிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். எவ்வாறெனினும், தமிழீழ விடுதலைப் புலிகளை மீளவும் சர்வதேச ரீதியாக இயங்கச் செய்ய எவ்வித சாத்தியமும் கிடையாது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

கொஸ்கம தீ விபத்து: இராணுவ வீரர் பலி; 8 பேர் காயம்

கொஸ்கமவிலுள்ள சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் இராணுவ வீரரொருவர் உயிரிழந்துள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இது தவிர, இச்சம்பவத்தில் எட்டு பேர் காயமடைந்துள்ளதுடன், 39 பேர் சிறுகாயங்களுக்காக சிகிச்சை பெற்று வைத்தியசாலையிலிருந்து வெளியேறியதாக சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கண்டேன் தோழர் ஸ்ராலின் அண்ணனை…….!(பகுதி 2)

(தோழர் ஜேம்ஸ்)
எமது புகையிரம் மதியம் அளவில் கும்பகோணத்தை அடைந்து. கும்பகோணம் பழமை வாய்ந்த புராதன நகரம் காவேரி ஆறு இந்த நகரத்தை ஊடறுச் செல்லுகின்றது. நாகபட்டினம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி கும்பகோணம் வழியாக பாய்ந்து தஞ்சை மாவட்டத்தை செழுமையாக்கிக் கொண்டிருக்கும் நதி. இந் நதி தமிழ்நாட்டையும் கர்நாடகாவையும் பிரிக்கும் வட மேற்கு மலைத் தொடரில் ஆரம்பித்து திருச்சி தஞ்சாவூர் ஊடாக பாக்கு நீரிணை ஜலசந்தில் கடலுடன் கலக்கும் ஆற்றுப்படுக்கையில் இடையில் உள்ள பட்டணம் கும்பகோணம் கும்பகோணம் வெத்திலைக்கு மிகவும் பிரபல்யமான இடம். ஏன் பிரசித்தி பெற்ற கோவில்கள் நிறைந்த இடமும் கூட. 12 வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் மகாமகம் நிகழ்வு நடைபெறும் விஷ்ணு கோவில்கள் உள்ள ஊர். {“12 வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் மகாமகம் நிகழ்வு நடைபெறும் கும்பேஸ்வர் [ சிவன் ] கோவில் உள்ள ஊர்.   அதுபோல விஷ்ணு [சாரங்கபாணி] கோவில் உள்ள ஊர். சிவனுக்கு நடப்பது மகாமகம். விஷ்ணுவுக்கு நடப்பது பிரமோற்சவம். ஒருமுறை மிகப்பிரமாண்டமான  [ 40 தொன்] கும்பேஸ்வர் தேர் நகர மறுத்தவேளை, ஸ்டாலின் அண்ணா சிவபுரம் முகாமில் பயிற்சியில் இருந்த     ஈ பி ஆர் எல் எப் தோழர்களை அழைத்து சென்று, அவர்களை வடம் பிடிக்க செய்ய , தேர் அரோகரா கோசத்துடன் நகர்ந்தது. கடவுள் மறுப்பு கொள்கை கொண்டிருந்தாலும், நம்புவர்களின் மன மகிழ்ச்சியை மனதில் கொண்டு, ஸ்டாலின் அண்ணன் செய்த மக்கள் சேவை அது.    (நன்றி: தகவல்: ராம்)}

(“கண்டேன் தோழர் ஸ்ராலின் அண்ணனை…….!(பகுதி 2)” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் தேசிய உணர்வாளர்களே! உங்களுக்கு என்ன நடந்தது?

நூறு வருடங்களுக்கு முன்னர், துருக்கியில் நடந்த ஆர்மேனியர்கள் மீதான படுகொலைகள், இனப்படுகொலை என்று ஜெர்மன் பாராளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இது குறித்து தமிழ் தேசிய ஆர்வலர்கள் அக்கறையற்று இருப்பது ஆச்சரியத்திற்கு உரியது. பிபிசி தமிழோசை தவிர பெரும்பாலான தமிழ் ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. என்ன காரணம்? இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, “தமிழ் இனப்படுகொலையை அங்கீகரி!” என்று ஆர்ப்பாட்டம் செய்திருக்க வேண்டாமா? குறைந்த பட்சம் சமூக வலைத்தளங்களிலாவது இந்தத் தகவலை பகிர்ந்து கொள்ளக் கூடாதா?

(“தமிழ் தேசிய உணர்வாளர்களே! உங்களுக்கு என்ன நடந்தது?” தொடர்ந்து வாசிக்க…)