மட்டக்களப்பு முக்கொலை: குடும்பக் கட்டமைப்பும் பெண்களும் சவால்களும்

(கனகலிங்கம் கோபிகிருஷ்ணா)

மட்டக்களப்பையே – ஏன் இலங்கையில் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளையே – அதிர்வடையச் செய்திருக்கிறது, வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவிலுள்ள காக்காச்சிவெட்டைக் கிராமத்தில் இடம்பெற்ற கொடூரப் படுகொலைகள். கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற இப்படுகொலைகளின் விவரங்கள், இன்னமும் வந்துகொண்டிருக்கும் நிலையில், இவற்றுக்குப் பின்னாலுள்ள சமூக, பொருளாதாரக் காரணிகளை ஆராய்தல் அவசியமானது.

(“மட்டக்களப்பு முக்கொலை: குடும்பக் கட்டமைப்பும் பெண்களும் சவால்களும்” தொடர்ந்து வாசிக்க…)

இந்திய அம்பியூலன்ஸ் சேவை ஆரம்பம்

இந்திய அரசாங்கத்தின் அனுசரணையில் முன்னெடுக்கப்படும் அவசர அம்பியூலன்ஸ் சேவையின் முதலாவது கட்டம் இன்று வியாழக்கிழமை(28) ஆரம்பமாகியுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் காலியில் இடம்பெற்ற நிகழ்வில் வைத்து இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தால் சுமார் 470 உள்நாட்டு இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாயப்பு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிள்ளைகளை லண்டனுக்கு அனுப்பிபோட்டு, பிச்சைக்காரனின் புண்ணைக் காட்டி பிச்சை எடுக்கிற அரசியவாதிகள் நீங்கள்..!! சுரேஸ்மீது – ரிசாட் பதிதியூன் பாய்ச்சல்

“இரண்டரை வருட ஆட்சிக்காலத்தில் வடக்கு முஸ்லீம்களுக்கு ஒரு மலசலகூடத்தைக்கூட கட்டிக்கொடுக்காத விக்கினேஸ்வரன் ஐயா, அரசு நியமித்துள்ள செயலணிக் குழுவை நிராகரிப்பதாக கூறுகின்றார்.
மீள்குடியேற்றம் மத்திய அரசு செய்கின்ற பணியாகும். அந்த மக்களிற்காக வடக்கு மாகாணசபை அதுவரை எந்த ஒரு பணியையும் செய்யவில்லை” என அமைச்சர் ரிசாட் பதிதியூன் குற்றஞ்சாட்டினார்.
“தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இதுவரை அந்த மக்கள் குறித்து தம்மிடம் பேச்சுவார்த்தை நடத்தக்கூட வரவில்லை. இப்போது தம்மைக்கேட்டுத்தான் மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என கூறுகிறார்கள்” என்றார்.

(“பிள்ளைகளை லண்டனுக்கு அனுப்பிபோட்டு, பிச்சைக்காரனின் புண்ணைக் காட்டி பிச்சை எடுக்கிற அரசியவாதிகள் நீங்கள்..!! சுரேஸ்மீது – ரிசாட் பதிதியூன் பாய்ச்சல்” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் a.f.c (பகுதி 52 )

பற்குணம் உணவுக் கட்டுப்பாட்டு அதிகாரியாக பொறுப்பேற்றார்.அன்னறைய நாட்டின் சூழ்நிலையில் அரச அதிபர் பதவிக்கு அடுத்ததாக மிகவும் பொறுப்பு வாய்ந்த பதவியாக இருந்தது.அது உணவுத் தட்டுப்பாடுகள் நிறைந்த காலம்.மேலும் திருகோணமலை துறைமுக நகரம் என்பதால் பல வெளிநாட்டு உணவுக் கப்பல்கள் அங்கே வரும்.இவைகளைப் பொறுப்பேற்பது ,இங்கிருந்து உணவுகளை வெளி மாவட்டங்களுக்கு அனுப்புவது எல்லாம் அங்குள்ள உணவுக் கட்டுப்பாட்டு அதிகாரியே.

(“பற்குணம் a.f.c (பகுதி 52 )” தொடர்ந்து வாசிக்க…)

மேற்கு சகாரா: பாலைவனத் துயரம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

ஒரு நாட்டின் உருவாக்கம் காலச்சுழலால் மட்டுமன்றி அதன் வரலாற்றின் வரைபினாலும் தீர்மானிக்கப்படுகிறது. மக்கள் அல்லாத அனைத்தும் முக்கியம் பெற்ற காலத்தில் நாடுகள் கொலனிகளாகின. தசாப்தங்கள் கடந்த பின்னும் கொலனியாதிக்கம் விட்டுச்சென்ற வலித்தடங்கள் இன்னும் துயருடன் தொடர்கின்றன. குரங்கு அப்பம் பிரித்த கதையாய் ஆபிரிக்காவைக் கொலனியாதிக்க சக்திகள் கூறுபோட்டதன் துர்விளைவுகளை ஆபிரிக்க மக்கள் இன்னமும் அனுபவிக்கிறார்கள்.

(“மேற்கு சகாரா: பாலைவனத் துயரம்” தொடர்ந்து வாசிக்க…)

விடுதலைப்புலி ஆதரவாளர்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களின் செயற்பாடுகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு படையினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக, இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சர்வதேச ரீதியில் தீவிரவாத அமைப்புக்களின் செயற்பாடுகள் குறித்து இலங்கை இராணுவத்தின் பிரதம அதிகாரி மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ், இராணுவத்திற்கு விளக்கம் அளித்துள்ளார். பயங்கரவாத செயற்பாடுகளை முறியடிக்க நவீன உத்திகள் பின்பற்றப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளை மீள ஒருங்கிணைத்தல் அல்லது மீள எழுச்சிபெறுதல் தொடர்பான சாத்தியங்கள், வெளிநாடுகளில் தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கை பிரச்சாரம் செய்யப்படுதல் குறித்தும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமானது என அவர் கூறியுள்ளதாக, பிரபல ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது.

பிரபாகரனை வா , வந்து எங்களுக்காக போராடு என்று எந்த தமிழரும் வெத்திலை, பாக்கு வைத்து அழைக்கவில்லை…

1970 களில் வடமராட்சி பிரதேசம் கடல்க் கள்ள கடத்தலில் கொடிகட்டி பறந்த காரணத்தினால் அப்பகுதியில் இலங்கை இராணுவம், போலீசின் கெடு பிடிகள் அதிகமாக காணப்பட்டது. இதனால் சினமடைந்த கள்ள கடத்தல் குழுக்கள் துப்பாக்கி கொண்டு இலங்கை போலீசை எதிர்க்க ஆரம்பித்தனர், இதற்க்கு அனைத்து தமிழர் தரப்பையும் கவரக்கூடிய ஒரு எதிர்ப்பு சுலோகம் தேவைப்பட்டது. அந்த எதிர்ப்பு சுலோகம் தான் “ஈழம்” அதே கள்ள கடத்தல் கும்பல்களில் இருந்து வந்தவர் தான் பிரபாகரன் பின்னர் ஏனைய கள்ள கடத்தல் குழுக்கள் , யாழ்ப்பாணத்தில் படித்த தலைவர்கள் , அரசியல் தலைவர்கள் என அனைவரையும் துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு, தனக்கு தானே “மேதகு ” என பட்டம் சூட்டினார்.

தமிழ் மக்களுக்கு ‘போக்கிமொன்’ சொல்லும் செய்தி என்ன?

(ப. தெய்வீகன்)

உலகம், கடந்த இரண்டு மாதங்களாக பயங்கரவாதத்தின் கொடும்பிடியில் சிக்கி பல உயிர்களை இழந்திருக்கிறது. அதற்குச் சற்றும் குறைவில்லாமல், அரசியலிலும் பல அதிரடி நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவை எல்லாவற்றுக்கும் மத்தியில், கடந்த ஜூலை 11ஆம் திகதி உலக சனத்தொகையில் பல இலட்சக்கணக்கானவர்களை தன் பக்கம் திரும்ப வைத்த ஒரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது. அது வேறொன்றுமில்லை. ‘போக்கிமொன்’ எனப்படும் ஒரு விளையாட்டின் அறிமுகம்தான்.

(“தமிழ் மக்களுக்கு ‘போக்கிமொன்’ சொல்லும் செய்தி என்ன?” தொடர்ந்து வாசிக்க…)

வேற்றுகிரகவாசிகள் வாழும் கிரகம் கண்டு பிடிப்பு

வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்கள் இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உணடு. வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு பெரும்பாலான விஞ்ஞானிகள் ஆம் என்றே பதில் கூறுகிறார்கள்.

(“வேற்றுகிரகவாசிகள் வாழும் கிரகம் கண்டு பிடிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

ஐரோம் சானு ஷர்மிளா தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்

இம்பால்: மணிப்பூரின், “இரும்பு பெண்’ என்று அழைக்கப்படும், ஐரோம் சானு ஷர்மிளா, தனது 16 ஆண்டு கால உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக்கொண்டு தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்.

(“ஐரோம் சானு ஷர்மிளா தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்” தொடர்ந்து வாசிக்க…)