‘இடைக்கால அறிக்கை தமிழர்களை ஏமாற்றியுள்ளது’

உத்தேச அரசமைப்பு திருத்தத்துக்கான இடைக்கால அறிக்கை தமிழர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி, சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை உறுதிப்படுத்துவதாகவே உள்ளது என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

(“‘இடைக்கால அறிக்கை தமிழர்களை ஏமாற்றியுள்ளது’” தொடர்ந்து வாசிக்க…)

அதிகாரப் பரவலாக்கம் அவசியம்’

“நாடு பிளவுபடாமல் இருப்பதற்கு, அதிகாரப் பரவலாக்கம் மிக முக்கியமானது” என, பிரபல ஊடகவியலாளரும் விரிவுரையாளருமான காமினி வியன்கொட தெரிவித்தார். கண்டி டெவோன் ரெஸ்ட்டில் நேற்று (24) மாலை இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

(“அதிகாரப் பரவலாக்கம் அவசியம்’” தொடர்ந்து வாசிக்க…)

ட்ரம்ப்பால் போராட்டங்கள் அதிகரிப்பு

ஐக்கிய அமெரிக்காவில் காணப்படும் இனப்பாகுபாடுகளைக் கண்டித்து, போட்டிகளுக்கு முன்பாக ஒலிபரப்பப்படும் தேசிய கீதத்தின் போது, முழங்காலில் நிற்கும் வீரர்களுக்கு எதிராக, ஜனாதிபதி ட்ரம்ப்பால் தெரிவிக்கப்பட்ட கருத்துகளைத் தொடர்ந்து, போராட்டங்கள் அதிகரித்துள்ளன. முழங்காலில் நிற்பவர்களை, தரக்குறைவாக உரையாற்றியிருந்த ஜனாதிபதி ட்ரம்ப், அவர்களை, விளையாட்டில் சேர்க்கக்கூடாது என்ற ரீதியில் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, தேசிய கால்பந்தாட்ட லீக்கைச் சேர்ந்த ஏராளமான வீரர்கள், முழங்காலில் நின்றும், ஏனைய வழிகளிலும், தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற 14 போட்டிகளில், 150க்கும் மேற்பட்ட வீரர்கள், இவ்வாறு தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

ராஜினியின் கொலையும் ஈ.பி.ஆர்.எல்.எவ். மீது பழிபோடலும்.

(“பனை வீழ்தது” நூலிருந்து சாராம்சம்)

இக்கொலை புலிகளினால் நன்கு திட்டமிட்டே மேற்க்கொள்ளப்பட்டது. இக்கொலை இடம்பெறுவதற்க்கு 1 வாரத்திற்க்கு முன் இந்திய இராணுவத்தின் 2 மேஜர் தரப்பு அதிகாரிகள் ராஜினியை பல்கலைக்கழக வளாகத்துள் சந்தித்துள்ளனர். ராஜினி இங்கிலாந்து சென்ற சமயத்தில் முறிந்த பனை நூலின் பிரதிகளை எடுக்க சென்ற இந்திய இராணுவம் வீட்டில் இருந்தோரை தொந்தரவு செய்துள்ளனர். இது குறித்து அங்கு வந்த இரு அதிகாரிகளுடன் ராஜினி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

(“ராஜினியின் கொலையும் ஈ.பி.ஆர்.எல்.எவ். மீது பழிபோடலும்.” தொடர்ந்து வாசிக்க…)

ஜெயலலிதாவின் மரணம் உண்மை வெளிவருமா……?

திண்டுக்கல் சீனிவாசன் கூறுகின்றார் ‘ஜெயலலிதா இட்லி சாப்பிடவுமில்லை. சட்னி சாப்பிடவுமில்லை. எல்லாம் பொய்’. இவர்களெல்லாரும் எவ்வளவு தூரம் மக்களை முட்டாளாக்கி விட்டார்கள். கோடிக்கணக்கான மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சரின் உடல் நிலையை மறைத்து வைத்ததல்லாமல், வாய் கூசாமல் பொய்களைகூட கட்டவிழ்த்திருக்கின்றார்கள். இதற்குத் தற்காலிகத் தமிழக அரசு, மோடியின் மத்திய அரசு எல்லாமே உடந்தையாகவிருந்திருக்கின்றன. சட்டத்தைத் தம்போக்குக்கு வளைத்திருக்கின்றன. இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணத்தின் உண்மை நிலை கண்டறிய இந்திய மத்திய அரசின் புலனாய்வுத்துறை மூலம் விசாரணை செய்யப்பட்டு , உண்மை வெளிக்கொணரப்பட்டுக் குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.

(“ஜெயலலிதாவின் மரணம் உண்மை வெளிவருமா……?” தொடர்ந்து வாசிக்க…)

சீமான் உண்மை முகம்

நான் சீமானின் முன்னாள் ஆதரவாளன். அவரது உணர்சிகளை தூண்டும் பேச்சாலும் விடுதலைபுலிகளின் ஆதரவு நிலைப்பாட்டாலும் அவரால் கவரப்பட்டேன். பிறகு அவ‌ரை நெருக்கமாக கவனித்தபோது பல அதிர்ச்சியான உண்மைகள் தெரியவந்தன. எனது அனுபவத்தின் அடிப்படையில் அவரை பற்றி தெரிந்து கொண்ட விசயங்களை இங்கே தகுந்த ஆதாரங்களுடன் பகிர்ந்து கொண்டு உள்ளேன். இது தமிழ்நாட்டில் உள்ள பெரிய ஊடகங்களில் வெவ்வேறு காலகட்டங்களில் வந்த செய்திகளை ஆதாரமாக கொண்டு, வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள். இதை மறுப்பவர்களிடம் நேர்மை இருந்தால் பதிலுக்கு வேறு ஆதரங்களை கொடுக்க வேண்டும்.

(“சீமான் உண்மை முகம்” தொடர்ந்து வாசிக்க…)

ஏறாவூரில் பரீத் மீராலெப்பையாக உரு கொடுக்கப்பட்ட பஷீர் சேகுதாவூத்!

(விருட்சமுனி)
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூரில் ஒரே மேடையில் கடந்த வாரம் நடத்தப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் எம். எச். எம். அஷ்ரப், ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி பரீத் மீராலெப்பை ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வு கிழக்கு முஸ்லிம்களின் இன்றைய அரசியலை பொறுத்த வரை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வைபவம் ஆகும். தூய தலைவர்கள் இருவரை நினைவு கூருவோம் என்கிற மகுடத்தில் அஷ்ரப்பின் 17 வருட நினைவும், பரீத் மீராலெப்பையின் 32 ஆவது வருட நினைவும் அனுட்டிக்கப்பட்டன.

(“ஏறாவூரில் பரீத் மீராலெப்பையாக உரு கொடுக்கப்பட்ட பஷீர் சேகுதாவூத்!” தொடர்ந்து வாசிக்க…)

Cuba will never accept any preconditions or impositions

Speech by the Minister of Foreign Affairs of Cuba, Bruno Rodríguez Parrilla, during the 72nd Session of the United Nations General Assembly

Mr. President:

Mr. Secretary General;

Allow me to reiterate to you Cuba’s, support to your work at the helm of the United Nations and as a guarantor and advocate of international peace.

Heads of State and Government;

Distinguished delegates;

(“Cuba will never accept any preconditions or impositions” தொடர்ந்து வாசிக்க…)

வேறுபாடுகளுக்கு அப்பாலும் எதிர்ப்பு…

கொழும்பில் சேரிக்கப்படும் குப்பைகளை, புத்தளம் – அருவக்காடு பிரதேசத்தில் கொட்டும் திட்டத்துக்கு, இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் புத்தளம் கரைத்தீவு பிரதேசத்தில் ஒன்றுதிரண்ட பொதுமக்கள், இன்று (22) பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். புத்தளம், கரைத்தீவு மஸ்ஜிதுன் நூர் ஜூம்ஆப் பள்ளிவாயல், சேரக்குளி சென் பீட்டர்ஸ் தேவாலயம், எரிக்கலம்வில்லு பன்சல ஆகியன ஒன்றினைந்து குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

(“வேறுபாடுகளுக்கு அப்பாலும் எதிர்ப்பு…” தொடர்ந்து வாசிக்க…)

வடமாகாண முதலமைச்சர் – நீதியரசர் விக்கினேஸ்வரன்

“வடமாகாண முதலமைச்சர் – நீதியரசர் விக்கினேஸ்வரனையும் மாகாணசபையையும் கடுமையான தொனியில் தொடர்ந்தும் விமர்சிக்கிறீர்களே. விக்கினேஸ்வரனின் மீது அப்படியென்ன கோபம் உங்களுக்கு?” என்று கேட்டார் நண்பர் ஒருவர். இதற்கு முன்பும் வேறு பலரும் இதைப்போன்ற கேள்விகளைக் கேட்டிருக்கிறார்கள். முகப்புத்தகத்தின் உள்பெட்டியிலும் ஏராளம் கேள்விகள் வந்திருக்கின்றன. சிலவற்றுக்கு அவ்வப்போது பதில் சொல்லியிருக்கிறேன். நிலைமையைக் கருதி இப்பொழுது இங்கே பொதுத்தளத்தில் இதற்கான பதிலைச் சொல்லலாம் என எண்ணுகிறேன்.

(“வடமாகாண முதலமைச்சர் – நீதியரசர் விக்கினேஸ்வரன்” தொடர்ந்து வாசிக்க…)