தந்திரோபாய அரசியலும் தப்பித்தலும்

(கருணாகரன்)
வடக்குக் கிழக்கில் மட்டுமல்ல, தெற்கிலே தாக்குதல் நடந்தாலும் வடக்குக் கிழக்கில்தான் பாதுகாப்புப் பலப்படுத்தப்படுகிறது. சோதனை நடவடிக்கைகள் முடுக்கி விடப்படுகின்றன. இதற்கான காரணம் என்னவென்று தெரியாது. ஆனால் நிச்சயமாக அரசாங்கத்தினதும் படைத்தரப்பினதும் உளவியல் சார்ந்த காரணங்கள் இதற்குப் பின்னணியாக இருக்கலாம். அந்த உளவியல் தமிழர்களை இன்னும் சந்தேகித்தல் மற்றும் தமிழ்ப்பகுதிகளில் படைகளின் இறுக்கத்தைத் தொடர்ந்தும் பேணுதல். இது உண்மையென்றால் இது ஒரு நோய்க்கோளாறே.

Still I Love you Rahul !

மானசீகன்***

ராகுலை கிண்டல் செய்கிற எல்லோரும் ரகசியமான பிஜேபி ஆதரவாளர்கள்தான் . நான் ஏற்கனவே சொன்னதைப் போல் ‘2K மனங்களுக்கான நவீன தேசிய அரசியல்வாதி ‘ ராகுல் மட்டும்தான். அவரை வட இந்திய மனங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை . அவர்கள் உள்ளங்கள் அந்த அளவுக்கு விஷமாகியிருக்கின்றன .மிகச்சரியாக அவரை அடையாளம் கண்டு தமிழ்நாடு கொண்டாடியது .அவருடைய பல கருத்துகள் முற்போக்கானவை .

இந்துத்துவாவின் செல்வாக்கு , Rss மற்றும் பிஜேபியின் பலமான கட்டமைப்பு ஆகியவையே பிஜேபியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம். நேருவின் காலத்திலும் கூட காங்கிரஸிற்குள் நிறைய Rss காரர்கள் இருந்தார்கள் ( நேருவே’ என் சட்டைப் பைக்குள் ஒளிந்திருக்கும் வகுப்புவாதிகள்’ என்று அவர்களை விமர்சனம் செய்திருக்கிறார் ) சோனியாவை கடுமையாக எதிர்த்தவர்கள் அவர்களே . ஆனால் அவர்களின் இருப்பு இந்தியாவிற்கு எதிராக இருந்தாலும் வட இந்திய மாநிலங்களில் காங்கிரஸிற்கு உதவியாக இருந்தது. நேருவின் குடும்பத்தில் சு . சாமி உள்ளிட்ட Rss காரர்களுக்குப் பிடித்த ஒரே தலைவர் ராஜீவ் மட்டும்தான் .அவர்களுக்கு சோனியாவையும் , ராகுலையும் சுத்தமாகப் பிடிக்காது .சோனியா பொறுப்பேற்ற தருணத்தில் பிஜேபி அலை இந்தியாவெங்கும் உச்சத்தில் இருந்தது. மிக நீண்ட காலமாக காங்கிரஸை ஆதரித்துக் கொண்டிருந்த பல Rssகாரர்கள் பிஜேபியின் பக்கம் சென்று விட்டனர். உலகிலேயே அரச ஆதரவு பெற்ற பயங்கரவாத இயக்கமான Rss ன் கட்டமைப்பும் , வட இந்தியாவில் அது மக்களிடம் ஊடுருவியிருக்கிற விதமும் நாம் கற்பனை செய்தே பார்க்க முடியாதது . அதுதான் ராகுலை படுமோசமாக வீழ்த்தியிருக்கிறது . அதற்கு புல்வாமா , 10% இட ஒதுக்கீடு , மோடி எதிர்ப்பு வாக்குகளின் சிதறல் ஆகியவையும் கூடுதல் வினையாற்றியிருக்கின்றன . இலங்கை குண்டு வெடிப்பும் கூட மறைமுகமாக ஒரு தாக்கத்தை உண்டாக்கியிருக்கலாம் . இந்த மாதிரியான அரசியலை Rss நுட்பமாக மக்களிடத்தில் பரப்பும். பொதுமக்களிடம் பயத்தை விதைத்து அதை தமக்கான அறுவடையாக மாற்றிக் கொள்வது Rss க்கு கை வந்த கலை .

காங்கிரஸ் கட்சியின் குறுநில மன்னர்கள் ராகுலை ரசிக்கவில்லை. உலகமயமாக்கலின் கொடும் விளைவை மிகச்சரியாகப் புரிந்து கொண்ட கம்யூனிஸ்ட் அல்லாத முதல் தேசியத் தலைவரும் ராகுல்தான் . அவரை தமக்கான அச்சுறுத்தலாகவே பல காங்கிரஸ் பெருந்தலைகள் எண்ணிக் கொண்டிருக்கின்றன .ராகுலிடம் இருக்கிற ஜனநாயகப் பண்பை அவர்கள் தமக்கு சாதகமாக்கிக் கொண்டு தங்களை மாற்றிக் கொள்ளாமலேயே பயணித்து வருகின்றனர் . அவர்களின் இருப்பால்தான் ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிய முடியவில்லை. இந்தியாவில் நாம் ஆயிரம் பேசினாலும் யார் பிரதமர் ? என்கிற கேள்விக்கான விடையாகவே மக்கள் தேர்தலை பார்க்கின்றனர் . மோடிக்கு மாற்று யார் ? என்கிற கேள்வியே குழப்ப நிலையில் இருந்த சிலரையும் இந்தப் பக்கம் திருப்பியிருக்கலாம் .

மோடி எதிர்ப்பு வாக்குகளை ஒருங்கிணைக்க ராகுல் எடுத்த முயற்சிக்கு எவருமே கை கொடுக்கவில்லை ( காங்கிரஸூம் கூட ) மம்தா, லாலு, முலாயம், மாயாவதி , கெஜ்ரிவால் சந்திரசேகர் ராவ் , நவீன் பட்நாயக், ஏன் இடதுசாரிகளுக்கும் கூட பிஜேபி என்கிற மாபெரும் அபாயத்தைத் தடுப்பதை விட அவர்களின் பிராந்திய அதிகார நலன்களே முக்கியமாக இருந்தன . ( அவர்கள் இந்தத் தேர்தலில் பிஜேபி இருநூறைத் தாண்டாது என்கிற மிதப்பில் இருந்தனர்) . சந்திரபாபு நாயுடு முயற்சியெடுத்தும் கூட பிறர் ஒத்துழைக்கவில்லை. ஆனால் அதைச் சரியாகக் கணித்துச் செயல்பட்டு வெற்றி பெற்றிருப்பவர் ஸ்டாலின் மட்டுமே . இந்தத் தேர்தலில் திமுக பெற்ற பெருவெற்றிக்குக் காரணம் தமிழகத்தில் சுழன்றடித்த மோடி எதிர்ப்பலையே . அதை மிகச்சரியாகப் புரிந்து கொண்டு மோடிக்கு எதிரான ஒரு வாக்கு கூடப் பிரிந்து விடக்கூடாது என்கிற அக்கறையோடு சகலருக்கும் இடங்களை வாரி வழங்கி அந்த எதிர்ப்பை அவர் அறுவடை செய்திருக்கிறார். காங்கிரஸிற்கு 9 இடங்கள் கிடைத்தற்கும், கேரளம், வங்கத்தில் பூஜ்யம் வாங்கிய போதும் இடதுசாரிகள் இங்கிருந்து நான்கு இடங்களை பெற்றதற்கும் ஸ்டாலினின் ஒருங்கிணைப்பே காரணம்! இதைப் பிறர் செய்யாமலிருந்து விட்டு ராகுலின் மீது பழி போடுவது அபத்தமானது . அத்தனை கட்சிகளும் ஒருங்கிணைந்து ராகுலை பிரதமர் வேட்பாளராக நிறுத்திய பிறகு தோற்றிருந்தால் இப்படிக் கேட்க நியாயம் இருக்கிறது. ஒருவேளை அப்படி நிகழ்ந்திருந்தால் கண்டிப்பாக இவ்வளவு பெரிய வெற்றியை பிஜேபி பெற்றிருக்காது . காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியே மலர்ந்திருக்கும் .

தேர்தல் தோல்வியை வைத்து ஒரு கட்சியை முடிந்து விட்டதாகக் கருதுவதோ , தலைவரை எள்ளி நகையாடுவதோ தேர்தலை வெறும் சூதாட்டமாகப் பார்க்கிறவர்களின் மனநிலை. காங்கிரஸ் கண்டிப்பாக மீண்டெழும். சகலரும் ராகுலை நோக்கி ஓடிவருவார்கள் . அதற்கான நியாயங்களை மோடி இந்த ஐந்தாண்டு காலத்தில் செய்து முடிப்பார் . இந்த ஐந்தாண்டு காலம் ராகுலுக்கு சோதனைகள் நிறைந்தது. கட்சிக் கட்டமைப்பை பலப்படுத்தி மக்களை சந்தித்துக் கொண்டிருந்தாலே போதும். எல்லாம் தானாகவே நிகழும்.

வெறுப்பிற்கு எதிராக அன்பையும் , ஆரவாரத்திற்கு எதிராக நிதானத்தையும் , பகட்டிற்கு முன்னால் எளிமையையும் , சூளுரைகளுக்கு மாற்றாக உரையாடலையும் முன்வைத்த நேருவின் பேரனை நான் வணங்குகிறேன்.

நீ பப்புதான். தென்னிந்தியர்களின் மனதிலும், மடியிலும் ஏறி அமர்ந்திருக்கிற பப்பு. உன் அரசியலைப் புரிந்து கொள்கிற பக்குவம் இன்னும் வட இந்தியர்களுக்கு வாய்க்கவில்லை . காலம் மாறும்…எல்லாம் மாறும் . அதுவரை சளைக்காமல் செயல்படுவதற்கான வல்லமையை உன் பெயருக்குப் பின்னால் இருக்கும் ‘காந்தி’ தந்து கொண்டிருக்கட்டும் .

கடவுளின் தேசத்திலிருந்து நாடாளுமன்றம் செல்லப் போகிறவனே ! நீ தெற்கைப் புரிந்து கொண்ட நிலா . பல்லாயிரம் வாட்ஸ் பல்புகள் ஃபீஸ் போன பிறகு காரிருளில் நிற்கப் போகும் வட இந்தியக் கண்கள் உன்னைத் தேடப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை.

Still I Love you Rahul !

தமிழர்களைவிட ஆந்திராவில் காவிகளை கதற விட்ட தெலுங்கர்கள்

25ல் 18 தொகுதிகளில் பாஜகவை முந்திய நோட்டா!👌

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியானது. அதில் பாரதிய ஜனதாக கட்சி பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்தது. எனினும், ஆந்திரா, கேரளம், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பாஜக 1 தொகுதிகளில் கூட வெற்றிபெற முடியவில்லை. குறிப்பாக, ஆந்திராவில் பாஜக போட்டியிட்ட 24 தொகுதிகளில், 18 தொகுதிகளில் நோட்டா பெற்ற வாக்குகளை விட குறைவான பெற்று தோல்வியைத் தழுவியுள்ளது. வாக்கு சதவீதத்தை குறிப்பிடுகையில் நோட்டாவை விட பாஜக குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளது, அதிக பட்சமாக அரக்கு தொகுதியில் 17,867 வாக்குகளை பாஜகவும், 47,977 வாக்குகளை நோட்டாவும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

என்னை சுற்றிலும் எங்கும் என் எதிரிகள்……..!!

இந்துத்துவம் என்ற பெயரில் என்னை அழிக்க ஒருத்தன் துடித்துக் கொண்டிருக்கிறான் என்பது புரிந்து, அவனை வீழ்த்தி என் மக்கள் கூட்டத்தை எப்படி காப்பாற்றலாம் என நான் சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே,

காங்கிரசின் ரம்யா ஹரிதாஸ்

(Rathan Chandrasekar)

கடந்த 48 ஆண்டுகளில் கேரளத்தின்
இரண்டாவது தலித் பெண் எம்.பி.

தினக் கூலித் தொழிலாளியின் மகள்.

காங்கிரஸ் கட்சி சார்பில், கேரள மாநிலம்
ஆலத்தூர் மக்களவை (தனி) தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள
ரம்யா ஹரிதாஸ், கடந்த48 ஆண்டுகளில் கேரளத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும்
2-வது தலித் பெண் எம்.பி. என்ற பெருமையைப் பெறுகிறார்.

நாரஹேன்பிட்டியில் விசேட சோதனை; இலத்திரனியல் கருவிகள், கத்திகள் மீட்பு

இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து நாரஹேன்பிட்டியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது, வீடொன்றிலிருந்த இராணுவத்தினர் பயன்படுத்தும் முகமூடிகள் நான்கும், வீட்டில் பயன்படுத்துவதற்குத் தடை செய்யப்பட்ட கத்திகள் பத்தும் மற்றும் இலத்திரனியல் கருவிகள் சிலவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அத்துடன் நாட்டில் ஆறு மாவட்டங்களில் இத்தகைய சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.

15 ஐ.எஸ் பயங்கரவாதிகள் இந்தியாவுக்கு தப்பியோட்டம்

இலங்கையிலிருந்து, இலட்சத்தீவுகளுக்கு, ஐ.எஸ் அமைப்பின் உறுப்பினர்கள் 15 பேரைக்கொண்ட படகொன்று செல்வதாக கிடைக்கப்பெற்ற புலனாய்வுத் தகவலையடுத்து, கேரளா கடற்பரப்பில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

எம் சமுகக்கனவுகள் உங்கள் நினைவுகளுடன்.

தோழர ரெட்ணம் (யுவாம் சொய்சா) 1970களின் பிற்பகுதியில் தன்னை சமுக அரசியல் வாழ்வில் ஈடுபடுத்திக்கொண்டவர்.மன்னார் வங்காலையைப் பிப்பிடமாகக் கொண்டவர்.
கால்நடை மருத்துவ உஸ்தியோகத்தரான தோழர் யுவாம் சொய்சா 1980களின் முற்பகுதியிலிருந்து மிகக்குறுகிய காலத்திலேயே குறிப்பிடத்தகுந்த ஒரு வெகுஜன அரசியல் தளத்தை மன்னார் மாவட்டத்திலுள்ள மீனவக் கிராமங்களிலும் விவசாயப் புறத்திலும் ஏற்படுத்துவதில் உன்னதமான பங்களிப்பை நல்கியிருந்தார். மன்னார் வங்காலையில் ஒரு கல்விப்பாரம்பரியம் உண்டு.பெருமளவு இளம் அரச ஊழியர்களும் மணவர்களும் தோழர் ரெட்ணம் அவர்களால் வசிகரிக்கப்பட்டிருந்தார்கள். மன்னார் அப்போது பதட்டம் நிறைந்த பகுதியாகவும் அரசியல் வேலைகள் செய்வதில் மிகுந்த ஆபத்துக்களை எதிர் நோக்கவேண்டியுமிருந்தது. வங்காலை வண பிதா பஸ்ரியன் போன்றவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர்.
மிகுந்த அபாயகரமான சுழலில் வெகுஜனங்கள் மத்தியில் சமுக பொருளாதார விடுதலைபற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதில் தோழர் ரெட்ணம் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். அதேவேளை அரசியல் இராணுவ பயிற்சிகளுக்கென தோழர்களை தயார் செய்து அனுப்புவதிலும் ஈடுபட்டிருந்தார். கால்நடை வைத்திய உத்தியோகஸ்தர் என்றபடியால் அவர் சகல இடங்களுக்கும் சென்று வரக்கூடிய வாய்ப்பை நன்கு பயன்படுத்தினார்.
1984ம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற கட்சியின் முதலாவது காங்கிரசிலும் பங்குபற்றியிருந்தார். 1980இற்கும் அவர் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட 1985ஆம் ஆண்டுக்குமிடையே அவர் மன்னார் பிராந்தியத்தில் ஏற்படுத்திய தளம் பிரமாண்டமானது.அவர் தனது வேலைகளுக்கூடாக ஒரு தலைவராக உருவாகிக்கொண்டிருந்தார். தோழர்கள் தங்கிவேலைகள் செய்வதிற்கான தளம் சமுகத்தினுள்ளே உருவாக்கப்பட்டிருந்தது.1980களின் நடுப்பகுதியில் பொதுமக்கள் பிரயாணம் செய்த பஸ் ஒன்றின்மீது படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இவரது மைத்துணர் ஒருவர் கொல்லப்பட்டார்.
1985அல் கைதுசெய்யப்பட்ட தோழர் ரெட்ணம் கடுமையான சித்திரவதைகளை அனுபவிக்க நேர்ந்தது.
கென்பாம், டொலர் பாம் பகுதியில் வசித்த சிங்களவர்கள் மீது புலிகள் நடாத்திய தாக்குதலை அடுத்து வவுனியா யோசப் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தோழர் ரெட்ணம் உட்பட பல அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர்.இன்றும் தோழர் ரட்ணம் அவர்களுடன் இணைந்து செயற்பட்டவர்கள் பலர் அவர் மேற்கொண்டிருந்த அரசியல் பணிகளை நினைவுகூர்ந்து வருகின்றனர்.தோழர் ரெட்ணம் (யுவாம் சொய்சா) அவர்களுக்கு எமது புரட்சிகர அஞ்சலிகள்.

வெளியே வந்துள்ள ‘ஹீரோக்கள்’

(கே. சஞ்சயன்)
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களால் ஏற்பட்ட சூழ்நிலைகள், இரண்டு முக்கியமான விடயங்களைப் பலரது கண்களில் இருந்தும் மறைத்து விட்டன. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொது பலசேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரரின் விடுதலை, அதில் ஒன்று.

இந்திய தேர்தல்

இந்தியாவின் நாடாளுமன்ற கீழ்ச் சபைக்கான தேர்தலானது கடந்த மாதம் 11ஆம் திகதி முதல் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை ஏழு கட்டங்களாக இடம்பெற்று நேற்று (23) வாக்கு எண்ணிக்கை இடம்பெற்ற நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதாக் கட்சி (பா.ஜ.க) தனிப்பெரும்பானையுடன் மீண்டும் ஆட்சியமைக்கின்றது.