இந்தியாவையும் சீனாவையும் யுத்தத்திற்குள் தள்ளும் சதி முயற்சிகள் முறியடிக்கப்பட வேண்டும்

அமெரிக்காவும் கனடாவும் 8993 கிமீ நீளமான உலகின் மிக நீண்ட எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன. 18, 19, 20 ஆம் நூற்றாண்டுகளில் இரு நாடுகளுக்குமிடையே செய்து கொள்ளப்பட்ட பல ஒப்பந்தங்களின் மூலம் இரு நாடுகளும் சுமூகமாக தமது எல்லையை காலத்திற்காலம் நிர்ணயம் செய்து கொண்டன. இதனால் இரு நாட்டு மக்களும் எதுவித எல்லைப் பதற்றமுமின்றி நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர்.

கேரளாவை உலுக்கும் தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் கைது: என்ஐஏ நடவடிக்கை

ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தைப் பயன்படுத்தி 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையவரும், தேடப்பட்டு வரும் நபரான ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட 4 பேரையும் தேசிய விசாரணை முகமை (என்ஐ) இன்று கைது செய்தது.

கரோனா காலம்: துயரத்தை மட்டுமே சுமக்கும் தூய்மைப் பணியாளர்கள்

கரோனா காலத்தில் நாம் நலமாக இருப்பதற்காக நம் சுற்றுப்புறத்தைத் தூய்மையாகப் பராமரித்துவரும் தூய்மைப் பணியாளர்கள் நலமாக இருக்கிறார்களா என்ற கேள்விக்கு எதிர்மறைப் பதிலைத்தான் பெரும்பாலும் பெற முடிகிறது. சென்னை போன்ற பெருநகரில் சுகாதாரக் களப்பணியாளர்கள் நாள்தோறும் நூற்றுக் கணக்கான வீடுகளுக்குச் சென்று பரிசோதனை மேற்கொள்கிறார்கள். உடல்நிலை சரியில்லை என்றாலும் விடுப்பு எடுக்க முடியாத நிலையில் பலர் பணிக்குத் தொடர்ந்து சென்று வருகின்றனர். இதனால் உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.

ஐஸ்வர்யா ராய்க்கு கரோனா தொற்று: அபிஷேக் பச்சன் தகவல்

தனது மனைவி ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆராத்யா இருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக அபிஷேக் பச்சன் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

அரசியலுக்குள் பெண்கள் புகுவதை ஆணாதிக்கமே முடக்குகிறது’

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மட்டுமல்ல, மற்றுமுள்ள பல கட்சிகளும் பெண்களை அரசியலில் முன்னுக்குக் கொண்டுவருவதில் அக்கறை காட்டவில்லை. இது பெண்களின் பிழையல்ல. இது ஆணாதிக்கத்தின் ஒரு வடிவமேயாகும் என்று, நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் சார்பில், மட்டக்களப்பு மாவட்டத்தில் உதயசூரியன் சின்னம் இலக்கம் 6 இல் களமிறங்கியுள்ள கலாநிதி சந்திரகாந்தா மகேந்திரநாதன் தெரிவித்தார்.

சட்டவிரோதமாக நாட்டுக்குள் பிரவேசிக்க முயன்ற இருவர் கைது

சட்டவிரோதமாகப் படகு மூலம் நாட்டுக்குள் பிரவேசிக்க முயற்சித்த இருவர் உள்ளிட்ட நால்வரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். யாழ்.தொண்டமானாறு வடக்குக் கடற்பகுதியில் வைத்​தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை அழைத்துவரும் செயற்பாடு நிறுத்தம்….பாடசாலைகளுக்கு மீண்டும் பூட்டு

தனிமைப்படுத்தல் நிலையங்களில் போதிய இடவசதி இல்லாத காரணத்தால், வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் செயற்பாட்டை தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக, முதலீட்டு ஊடக்குவிப்பு, சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நாளை முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரையில் அனைத்து பாடசாலைகளை மூடுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மொட்டின் தேர்தல் பிரசாரம் தற்காலிகமாக நிறுத்தம்

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன முன்னணியின் சகல பிரசார நடவடிக்கைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, ஸ்ரீ லங்கா பொதுஜன ​பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ அறிவித்துள்ளார். இதற்கமைய, 13,14,15 ஆம் திகதிகளில், ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரசாரக் கூட்டங்கள் அனைத்தும் இரத்துச்செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது.

குன்றக்குடி அடிகளாரின் 95-வது பிறந்தநாள்

இன்று குன்றக்குடி அடிகளாரின் 95-வது பிறந்தநாள். இதனையொட்டி ‘Being hindu and being secular’ எனும் பேராசிரியர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் எழுதிய Economic and Political Weekly கட்டுரையில் இருந்து சில பகுதிகள்:

ஆளுமையா? அனுதாபமா?

(கௌரி நித்தியானந்தம்)

“உங்கள் மூன்று விருப்பு வாக்குகளில் ஒன்றையேனும் அந்தக் கட்சியிலுள்ள பெண் வேட்பாளருக்குப் போடுங்கள்” என்ற கோஷமானது என்றுமில்லாதவாறு தற்போதைய தேர்தல் களத்தில் மிகவும் வலுப்பெற்று வருகிறது. இது அனுதாப வாக்குகளாக வெளிக்குத் தோன்றினாலுமே ஆணாதிக்க அரசியலில் ஆளுமையுள்ள பெண்கள் கூட உள்ளே நுழைவதற்கு அனுதாபம் தான் முதலில் தேவையாக இருக்கிறது. இல்லாவிடின் மக்களுக்கு அறிமுகமேயில்லாத ஒரு வேட்பாளரை நிறுத்தினால் கூட வடக்கில் பெரும் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையோடிருக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் கூடப் பெண் வேட்பாளர் தெரிவு என்று வரும்போது ஆளுமையுள்ள பெண்ணைத் தேசியப் பட்டியலிலும் அனுதாப வாக்குகளைப் பெறக்கூடியவர் என்று கருதுபவரையே களத்திலும் இறக்கப்படுகிறார். இதுவே அரசியலில் பெண்களின் இன்றைய நிலை.