புட்டின் இடைநீக்கம்

சர்வதேச ஜூடோ கூட்டமைப்பின் (ஐஜேஎஃப்) கௌரவத் தலைவர் பதவியில் இருந்து ரஷ்ய ஜனாதிபதி விளாதிமீர் புட்டின் இடைநீக்கம் செய்யப்பட்டார் என விளையாட்டு நிர்வாகக் குழு அறிவித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு காரணமாக அந்த கௌரவத் தலைவர் பதவியில் இருந்து புட்டின் நீக்கப்பட்டுள்ளார் என அக்குழு அறிவித்துள்ளது.

உக்ரைனில் சிக்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் புதிய தகவல்

ரஷ்யா – உக்ரைன் போர் ஆரம்பித்துள்ள நிலையில் உக்ரைனில் சிக்கியுள்ள 20 இலங்கையர்கள் நாடு திரும்ப காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் போலந்து எல்லையூடாக உக்ரைனிலிருந்து வௌியேற போலந்து எல்லையில்  காத்திருப்பதாக துருக்கி, ஜோர்ஜியா மற்றும் உக்ரைனுக்கான இலங்கை தூதுவர் எம்.ஆர். ஹசன் குறிப்பிட்டார்.

கிழக்கில் 4 ஆயிரம் ஆசிரியருக்கு தட்டுப்பாடு

கிழக்கில் ஆளணியின்படி, சுமார் 24 ஆயிரம் ஆசிரியர்கள் தேவை. எனினும், தற்போது 20 ஆயிரம் ஆசிரியர்களே இருக்கின்றனர். சுமார் 4,000 ஆசிரியருக்கு தட்டுப்பாடு நிலவியது என கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜி.திஸாநாயக தெரிவித்தார்.

தமிழர் நிலங்களை சட்டரீதியாக மீட்க முடிவு

முல்லைத்தீவு – கொக்கிளாயில், கம்பித்தறை மற்றும் வில்லுவெளி ஆகிய தமிழர்களின் பூர்வீக வயல்நிலங்களை இல்மனைட் அகழ்வுக்காக கனிப்பொருள் மணல்கூட்டுத்தாபனத்தினர் அபகரித்துள்ளனர்.

பேச்சுவார்த்தைக்கு உக்ரேன் தயார்

உக்ரேன்-பெலாரஸ் எல்லையில் ரஷ்ய அதிகாரிகளுடன் முன்நிபந்தனைகள் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஒரு தூதுக்குழுவை அனுப்ப கெய்வ் ஒப்புக்கொண்டுள்ளதாக உக்ரேன் ஜனாதிபதி வெளாடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷ்ய தாக்குதலின் 4ஆம் நாளில் கார்கிவ் விழுந்தது

உக்ரேன் மீது ரஷ்யா, நேற்று (27) நான்காவது நாளாக தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், இணைய சேவை, இராணுவ ஆயுதங்கள், நிதியுதவி என உக்ரேனுக்கு உதவிக்கரம் நீண்டுகொண்டே செல்கின்றது.  வருகிறது.

இம்ரானின் மொஸ்கோவுக்கான விஜயம் ’முட்டாள்’ தனமானது

உக்ரேனில் நடந்து வரும் மோதல்களுக்கு மத்தியில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், மொஸ்கோவுக்குச் செல்ல தீர்மானித்தமை ‘தவறான நேரம்’ மற்றும் ‘முட்டாள்தனமானது’ என்று தெரிவிக்கப்படுகிறது.

சோவியத்தின் கொல்லைப் புறத்தில் என்னதான் நடக்கின்றது (பகுதி 3)

(சாகரன்)

ரஷ்யா உக்ரேன் அமெரிக்கா

நீண்ட நாட்களாக தனி நாடு அமைக்க போராடி வரும் உக்ரைனின் கிழக்கே அமைந்த டொன்பாஸில், ரஷ்ய மொழி பேசும் டொனஸ்க் மற்றும் லஹான்ஸ் ஆகியவற்றை தனி நாடுகளாக அங்கீகரித்து அமைதியை நிலைநாட்ட அங்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் படைகளை அனுப்பிவிட்டார்.

புலிகள் இறுதி யுத்தத்தின்போது மக்களை சுட்டார்கள்! மக்கள் புலிகளுக்கு திருப்பி அடித்து வாகனங்களை கொழுத்தினார்கள்! (பகுதி 5)

(சிவராசா கருணாகரன்)

கடந்த ஐம்பது ஆண்டுகளாகப் பல நூற்றுக்கணக்கான படுகொலைகளைச் சந்தித்திருந்த ஈழத் தமிழ்ச் சமூகம் இப்போது நடந்த படுகொலைகளை ஜீரணிக்க முடியாமல் திணறியது. அந்தளவுக்கு அதன் அனுபவப்பரப்புக்கு அப்பால் முன்னெப்போதையும்விட மிக மோசமாக இந்தக் கொலைகள் நடந்தன. வீதிகள், காலனிகள், குடிசைகள் எங்கும் எங்கும் பிணக்குவியல்களே. 

13ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலான – மாகாண சபை அதிகாரங்களின் தேவையை கோரும் நேர்மையானதும் உறுதியானதுமான குரலின் அவசியம் இன்று உணரப்படுகின்றது