அன்று இந்தியாவும் இலங்கையும் இன்று ரஷ்யாவும் உக்ரேனும்

(எம்.எஸ்.எம். ஐயூப்)

ரஷ்யப் படைகள், பெப்ரவரி 24ஆம் திகதி அந்நாட்டுக்கு மேற்கேயுள்ள உக்ரேன் மீது படையெடுத்தது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், அந்தப் படையெடுப்பை ஆக்கிரமிப்பாகக் குறிப்பிடவில்லை. ‘இராணுவ நடவடிக்கை’ என்றே குறிப்பிட்டார்.

இலங்கை மாணவர்களுக்கான பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யவும்

ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையிலான யுத்த நிலைமைக்கு மத்தியில் பெலாரஸில் உயர்கல்வி கற்கும் இலங்கை மாணவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு  பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ பணித்துள்ளார். 

உக்ரேன் விவகாரம் : இலங்கை வாக்களிக்கவில்லை

உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பை ரஷ்யா நிறுத்தக் கோரி ஐ.நாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை 141 நாடுகள் ஆதரித்தன, இலங்கை வாக்களிக்கவில்லை. இந்தியாவும் வாக்களிக்கவில்லை.

ரஷ்யாவிடம் இலங்கை, 300 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை  கடன் கேட்டுள்ளது. மசகு எண்ணெய், காஸ் மற்றும் நிலக்கரி  ஆகியவற்றை கொள்வனவு செய்வதற்கே கடன் கேட்டுள்ளது

ரஷ்யாவிற்கும் நேட்டோவிற்கும் இடையிலான போர்

ஐரோப்பிய யூனியன்

பார்லிமெண்ட் கூட்டம்.

காணொளியில் பேசுகிறார்

உக்ரெய்ன் செலென்ஸ்கி.

கேட்டுக்கொண்டிருக்கிறவர்கள் –

“போரில் பின்வாங்கமாட்டேன் “

என்று செலென்ஸ்கி சொன்னவுடன் –

ஒரு ஆள் பாக்கி இல்லை –

எழுந்து நின்று கைதட்டுகிறான்.

எல்லாரும் ரஷ்யாவை பின்வாங்கச் சொன்னவன்.

எல்லாரும் ரஷ்யாவுக்குத் தடை போட்டவன்.

‘பேச்சுவார்த்தைக்குப் போ ‘

என்று உக்ரெய்னிடம்சொல்லாதவன்.

‘ஏன் குடிமக்கள் கையில் ஆயுதம் கொடுக்கிறாய்,

அவர்களைக் கேடயமாக்குகிறாய்’ என்று

செலென்ஸ்கியிடம் கேட்காதவன்.

அத்தனை பேரும் -இவ்வளவு வருடங்களாக

உக்ரெய்ன் தேசியவாதக் குழுக்களுக்கு

உக்ரெய்ன் ராணுவத்தின்மூலம்

ஆயுதம் கொடுத்து

உக்ரெய்ன் வாழ் ரஷ்ய குடிமக்களை

ஒடுக்கி வைக்கச் செய்தவன்.

அத்தனை பேரும் –

சண்டை நின்று விடக்கூடாது என்று

இப்போது மூட்டை மூட்டையாக

உக்ரெய்னுக்கு ஆயுதத்தை அனுப்புகிறவன்.

அவர்கள் முன் முஷ்டி உயர்த்தும் செலென்ஸ்கி

“போரில் பின்வாங்கமாட்டேன்!” எனும்போது

எழுந்து, கைதட்டி ஆரவாரிக்கிறார்கள்.

இந்தப் போர் அமெரிக்காவுக்கும்

நேட்டோவுக்கும் செலென்ஸ்கிக்கும்

இனிக்கிறது என்று நான் எழுதியதன் –

இந்தப் போர் உக்ரெய்னுக்கு ஆகாது;

ரஷ்யாவுக்கும் கூடாது;

ஆனால், அமெரிக்காவுக்குத்

தேவையாக இருக்கிறது என்று

ரஷ்யா, உக்ரெய்ன் கம்யூனிஸ்டு கட்சிகள்

சொன்னதன் –

பொருள்

விளங்குகிறதல்லவா?

(Rathan Chandrasekar)

ரஷ்ய உக்ரேன் யுத்தத்தின் பலிக்கடாக்கள்

(மொஹமட் பாதுஷா)

உலக வரலாற்றில் முக்கால்வாசிப் பக்கங்கள் போர்களாலேயே நிரம்பியுள்ளன. நில ஆக்கிரமிப்புக்கான போர், நில மீட்புக்கான போர், அதிகாரத்தை அதிகரிப்பதற்கான போர், இன, மத ரீதியான போர் என இது நீட்சி கொள்கின்றது. ஏன் மண்ணுக்கான போர் மட்டுமன்றி பெண்ணுக்கான போர்களும் நடந்தேறியுள்ளன.