இந்திய – இலங்கை பாலம் குறித்து த ஹிந்து வெளியிட்ட செய்தி

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை உள்கட்டமைப்பு மேம்பாடு, எரிசக்தி இணைப்புகள் மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளில் மேம்படுத்த வேண்டும் என்று த ஹிந்து தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அண்மையில், இந்தியாவுடன் தரைவழி இணைப்பை ஏற்படுத்துவதற்கான முன்மொழிவை மேற்கொண்டிருந்தார். எனினும் அது உடனடியாக நடைமுறைக்கு வரப்போவதில்லை.

மரணசாலைகள் ஆகின்றனவா வைதியசாலைகள்

Sureka Paraman இன் பதிவு இது.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் இன்னுமொரு அசமந்தப்போக்கு ♦
இரட்டைப்பெண் சிசுக்களைப்பெற்று ஐந்து நாட்கள் கூட முடிவடையாத 25 வயதே ஆன, இளம் தாயை ; வீட்டிலே பராமரிக்குமாறு அனுப்பும் அளவிற்கு , தொற்றுநோய் தடுப்பு முகாமைத்துவம் கூட முறையாக இல்லாத ஒரு வைத்தியசாலை தானா இந்த யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலை ?????

மத்தள விமான நிலையம் ரஷ்ய-இந்திய நிறுவனத்திற்கு…

மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை ரஷ்ய – இந்திய கூட்டு தனியார் நிறுவனத்திற்கு மாற்றுவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும், அதற்கான பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தில் உள்ளதாகவும் துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கே. டி. எஸ். ருவன்சந்திர தெரிவித்துள்ளார்.

நாடு கடத்த பட்ட இந்திய வம்சாவளி மக்கள் மீண்டும் இலங்கைக்கு.

(மஸ்கெலியா விசேட நிருபர்.செ.தி.பெருமாள்)

சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் இலங்கையில் இருந்து பலவந்தமாக நாடு கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் மீண்டும் நாடு திரும்ப வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும் – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

கிழக்கிலங்கையின் இலக்கிய செல்நெறி

“இரண்டாயிரம் ஆண்டுக்கு பின்னரான கிழக்கிலங்கையின் இலக்கிய செல்நெறி” எனும் தலைப்பில் கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களமும் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் மொழித்துறையும் இணைந்து “ஆய்வரங்கம்” ஒன்றினை 2023.12.02 சனிக்கிழமை ஏற்பாடு செய்திருந்தது. இது வாழ்நாட் பேராசிரியர் அ.சண்முகதாஸ் தலைமையில் தென்கிழக்கு பல்கலைக்கழக மொழித் துறை அரங்கிலே நடைபெற்றது. இங்கு இடம் பெற்ற ஒவ்வொரு ஆய்வும் இருபது நிமிடங்களில் அமையப்பெற்றது.

தமிழ் மக்களின் இன்றைய அரசியல் கோரிக்கை

(Shanthan K Thambiah) 

மாகாண சபைகளில் மக்களாட்சி வேண்டும் என்பதே தமிழ் மக்களின் இன்றைய அரசியல் கோரிக்கை. இன்றைய தமிழ் அரசியலில். தேசியத்தரப்பினர் என்கின்ற வரையறையுடன் அவர்களுக்கான ஒற்றுமையான – நடைமுறைசாத்தியமான – தமிழர்களின் அரசியற் கோரிக்கை என்ன என்பதை – தமிழ் அரசியல் அடையாளப்படுத்த தவறிவிட்டது என்பதே உண்மை.

ஆட்சியை கைப்பற்றிய சோரம் மக்கள் இயக்கம்

40 தொகுதிகளை கொண்ட மிசோரம் சட்டசபைக்கு கடந்த மாதம் 7ம் திகதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. அம்மாநிலத்தில் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க 21 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். மிசோரத்தில் மிசோ தேசிய முன்னணி கட்சி ஆட்சி செய்கிறது. அம்மாநில முதல் மந்திரியாக ஜொராம்தங்கா செயல்பட்டு வருகிறார். அதேவேளை, சோரம் மக்கள் இயக்கம், காங்கிரஸ், பாஜக உள்ளிட்டவை முக்கிய எதிர்க்கட்சிகளாக திகழ்கின்றன.

காசாவில் குண்டு மழை ; 240 பேர் பலி

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த காலம் நிறைவடைந்த நிலையில் காசா முனையில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளது.

இலங்கை- இந்தியாவுக்கும் இடையே எண்ணெய்க் குழாய் இணைப்பு

இலங்கையில் எரிபொருள் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் இந்தியாவில்  உள்ள நாகப்பட்டினத்திற்கும், திருகோணமலைக்கும் இடையே எண்ணெய்க் குழாய் இணைப்பை  ஏற்படுத்துவது தொடர்பாகப்  கலந்துரையாடலொன்றை இடம்பெற்றுள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் போர் நிறுத்தம்

இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், மீண்டும் காசா பகுதியின் மீது இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்துள்ளது.