தியாகிகள் தினம்: சாம்பல் தீவு திருகோணமலை

இன்று { 18.06.2025} திருகோணமலை சாம்பல் தீவில் இடம்பெற்ற சிரமதானம். வட்டார எமது அமைப்பாளர் நிரோசன் முன்நின்று நடத்த தோழர் ராஜி என்கின்ற சின்ன மோகன் தலைமையில் நடைபெற்றது மத்தியகுழு உறுப்பினர் தோழர் ஓங்காரம் வழிப்படுத்தினார். தோழர்கள் ஆதரவாளர்கள் மதபோதகர்கள் இதில் கலந்து கொண்டனர்.

தியாகிகள் தினம்: சுன்னாகம் யாழ்ப்பாணம்

இன்று { 18.06.2025} யாழ்ப்பாணம் சுண்ணாகத்தில் உள்ள “காந்தி நீயூ ஸ்ரார் ‘ விளையாட்டு மைதாணம் சிரமதான மூலம் துப்யரவு செய்யப்பட்டது. எமது சுண்ணாகம் தொகுதி அமைப்பாளர் அரசராசன் ஏற்பாட்டில் இடம் பெற்ற இன் நிகழ்வை யாழ் பிராந்தியச் செயலாளர் ஜீவாரவி நெறிப்படுத்தினார். இதில் தோழர்கள் ஆதரவாளர்கள் விளையாட்டுகளக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

‘ஆசனத்தை கண்டதும் கண் கலங்கி போனேன்”

எனது தந்தை மர்ஹூம் கே.ஏ.பாயிஸ், சிங்கம் போல அந்தக் கதிரையில் அமர்ந்திருக்கும் காட்சிகள் என் கண் முன் தோன்றி, அவர் புத்தளம் நகருக்கு செய்த சேவைகள் யாவும் நினைவில் நிழலாடிக் கண்ணீரையும் வரவழைத்தது என புத்தளம் மாநகர சபையின் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரும், முன்னாள் புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸின் புதல்வியுமான ஷதா பாயிஸ் மனம் உருகி தெரிவித்தார்.

நுவரெலியா பிரதேச சபையை இ.தொ.கா கைப்பற்றியது

நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளராக இ.தொ.கா உறுப்பினர் வேலு யோகராஜ், பிரதி தவிசாளராக தே.ம.ச உறுப்பினர் ஹேவகே ஆசா தில்ருக்சி பொன்சேகா அவர்களும் தெரிவாகியுள்ளனர். வாக்கெடுப்பின்றி சபை தவிசாளர் வேலு யோகராஜ் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார்.

தலவாக்கலை நகர சபையை கைப்பற்றிய தே.ம.ச(NPP)

தலவாக்கலை, லிந்துலை நகர சபையின் தலைவராக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்  மலிதுவ லியனகே உப்பாலி தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் உப தலைவராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர் சின்னையா பெரியசாமி ரொசான் இராஜசேகர்  தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

யாழ்.இளைஞர்களின், 120 நாட்கள் கொண்ட சுற்றுலாப் பயணம்

இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தி, நாட்டின் பொருளாதாரத்தை அதிகரிக்க செய்யும் நோக்குடன் செவ்வாய்க்கிழமை (17) அன்று மூன்று இளைஞர்கள் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து சுற்றுலாப் பயணம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

அணு ஆயுதத்தை தயாரிக்க ஈரானுக்கு மட்டும் தடை

அணு ஆயுதத்தை ஈரான் தயாரிக்கவே கூடாது என்று ஜி7 நாடுகள், திட்டவட்டமாக தெரிவித்துள்ளன. ஜி7 மாநாடு கனடாவில் நடைபெற்ற நிலையில் அந்நாடுகளின் தலைவர்கள் கையெழுத்திட்ட கூட்டறிக்கை இறுதி நாளான செவ்வாய்க்கிழமை (17) வெளியிடப்பட்டது.அதிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான்-இஸ்ரேல் மோதல்: சபை ஒத்திவைக்கப்பட்டது

ஈரான்-இஸ்ரேல் மோதல் குறித்த ஒத்திவைப்பு விவாதத்தை முன்மொழியவிருந்த பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா இல்லாததால், இன்றைய பாராளுமன்ற அமர்வுகள் திடீரென முடிவுக்கு வந்தன. பாராமன்ற உறுப்பினர் நிஜாம் காரியப்பர் பிரேரணையை முன்மொழியத் தொடங்கியதை அடுத்து, சபை ஒத்திவைக்கப்பட்டது.

போலி கடவுச்சீட்டுகளுடன் தாயும் மகளும் கைது

போலி இந்திய கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி இந்தியாவிற்குள் நுழைந்ததாகக் கூறப்படும் இலங்கையைச் சேர்ந்த ஒரு தாயும் மகளும் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.