G7 அறிக்கையை விமர்சித்தார் ரணில் விக்கிரமசிங்க

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை தற்காப்புக்காக நியாயப்படுத்தும் சமீபத்திய G7 அறிக்கையை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விமர்சித்துள்ளார், மேலும் இந்த தாக்குதல் அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளின் போது நடந்ததாகவும், அதை நிராகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

கெஹெலிய குடும்பம் கைது

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி குசும் ரம்புக்வெல்ல மற்றும் மகள் சந்துலா ரம்புக்வெல்ல ஆகியோர் பணமோசடி குற்றச்சாட்டின் பேரில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான  ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குமூலங்களை பதிவு செய்ய அழைக்கப்பட்ட பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீதியை மறைத்து ஆர்ப்பாட்டம்

புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட  சமீதுகம முன்மாதிரி கிராம வீதியை புனரமைத்து தருமாறு கோரி பிரதேச மக்கள், வீதியை மறைத்து புதன்கிழமை (18) காலை  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

“வடக்கிலுள்ள மனிதப் புதைகுழிகள் குறித்து வதந்தி”

வடக்கில் உள்ள பல மனிதப் புதைகுழிகள் குறித்து வெளியிடப்பட்ட தகவல்கள் வதந்திகளை அடிப்படையாகக் கொண்டவை என்றும், சரியான தகவல்கள் இல்லாமல் அரசாங்கம் இவற்றின் மீது நடவடிக்கை எடுக்கத் தயாராக இல்லை என்றும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று செவ்வாய்க்கிழமை (17) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சபைக்கு வந்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, சற்றுமுன்னர் சபைக்கு வருகைதந்தார். பாராளுமன்றத்தில் உள்ள பிரதான எதிர்க்கட்சி தற்போது சபை அமர்வுகளை புறக்கணிக்கிறது, அந்த நேரத்தில் ஜனாதிபதியின் பிரசன்னம் சிறப்பு வாய்ந்தது

4 கோடி ரூபாய் ஐஸூடன் காரை விட்டோடிய சாரதி

ஓட்டுநர் கைவிட்டு தப்பிச் சென்ற சொகுசு காரில் இருந்து, ரூ.40 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக கடலோர பொலிஸ் தெரிவித்துள்ளது. திங்கட்கிழமை (16) இரவே, காருடன் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்து.

போதையில் பேருந்தை செலுத்திய சாரதி கைது

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி குடிபோதையில், போக்குவரத்து விதிகளை மீறி பேருந்தை செலுத்திய  தனியார் பேருந்தின் சாரதி ஒருவர் செவ்வாய்க்கிழமை (17) ஹல்துமுல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கிண்ணியா நகர சபை தவிசாளராக எம்.எம்.மஹ்தி

கிண்ணியா நகர சபையின் தவிசாளர் தெரிவு நகர சபையின் சபா மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (17) இடம் பெற்றது. கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் குறித்த தவிசாளர் தெரிவு இடம் பெற்றதுடன் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் எம்.எம்.மஹ்தி தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

கொட்டகலை பிரதேச சபையில் சேவல் கூவியது

நுவரெலியா மாவட்ட கொட்டகலை பிரதே சபையின்  தலைவராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர் ராஜமணி பிரசாத் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் உப -தலைவராக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஜோசப் யாகுள மேரி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

’’ஈரான் ராணுவத் தளபதி கொல்லப்பட்டார்’’: இஸ்ரேல்

தெஹ்ரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரானின் போர்க்கால தலைமைத் தளபதியும், ஈரானிய உச்சத் தலைவர் அலி கமேனிக்கு மிக நெருக்கமானவருமான அலி ஷத்மானியைக் கொன்றதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.