இந்தியா சென்றார் பிரதமர் ஹரிணி

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இன்று அதிகாலை இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். இன்று முதல் எதிர்வரும் 18ஆம் திகதிவரை அவர் இந்தியாவில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது. 

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையில் போர் நிறுத்தம்

ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர்நிறுத்தம் அமுலுக்கு வந்ததாக ஆப்கானிஸ்தான் அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்தார். 

ஐ.ம.சவுடன் பேச்சு நடத்த ஐ.தே.க குழு நியமனம்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் பேச்சுவார்த்தை நடத்த ஐக்கிய தேசியக் கட்சி மூன்று பேர் கொண்ட குழுவை நியமிக்க முடிவு செய்துள்ளது.

குற்றப்பிரிவில் வன்னிநாயக்க ஆஜர்

வழக்கறிஞர் குணரத்ன வன்னிநாயக்க, மேல் மாகாண தெற்கு பிரிவு குற்றப்பிரிவில் ஆஜரானதாக அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தில் புதன்கிழமை (15)  ஆஜரான பின்னர், அவரை தலா 500,000 ரூபாய் இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார், மேலும் மேல் மாகாண தெற்கு பிரிவு குற்றப்பிரிவில் சென்று வாக்குமூலம் அளிக்கவும் உத்தரவிட்டார்.

2021 ஆம் ஆண்டில் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட நிதிப் பணிப்பாளர் ஒருவர் நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபைக்கு எதிராக தாக்கல் செய்த வழக்குகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க அதிகாரசபையினால் 15.01 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தின் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவில் புலப்பட்டது.

காய்கறிகளின் மொத்த விலை குறைந்தது

தம்புள்ளை சிறப்பு பொருளாதார மையத்தில் அதிக அளவு காய்கறிகள் கையிருப்பில் உள்ளதாலும், அவற்றை வாங்க வரும் வியாபாரிகளின் எண்ணிக்கை குறைந்ததாலும் வியாழக்கிழமை (16) பிற்பகல் அளவில் காய்கறிகளின் மொத்த விலை கடுமையாகக் குறைந்துள்ளதால் விவசாயிகள் கடும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.

படகில் தாயகம் திரும்பிய நால்வர் பொலிஸில் சரண்

இந்தியாவின் தமிழகத்தில் அகதிகளாக தங்கியிருந்த நால்வர் கடல் வழியாக தாயகம் திரும்பி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன்,மனைவி மற்றும் ஆண்,பெண் பிள்ளைகள் உள்ளடங்களாக நான்கு பேர் இவ்வாறு தாயகம் திரும்பியுள்ளனர்.

பெண்களை இரவில் பணியமர்த்தும் சட்டங்களில் திருத்தம்

பரந்த தொழிலாளர் சட்ட சீர்திருத்த முயற்சியின் ஒரு பகுதியாக, பெண் தொழிலாளர்களை இரவில் பணியமர்த்துவது தொடர்பான தற்போதைய சட்டங்களைத் திருத்துவதற்கான திட்டங்களை தொழிலாளர் அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஒரு வழக்கில் வாதாட ஒரு பெண் என்னை அழைத்தாள்: செவ்வந்தி

கனேமுல்ல சஞ்சீவவைச் சுடுவதற்காக புதுக்கடை நீதிமன்றத்திற்கு நான் வந்த போது, ​​என்னை ஒரு வழக்கறிஞர் என்று நினைத்து ஒரு பெண் ஒரு வழக்கில் வாதாடுவதற்கு  என்னிடம் வழக்கை  ஒப்படைத்தாள் என இஷாரா செவ்வந்தி தெரிவித்துள்ளார்.

செவ்வந்தியுடன் சிக்கிய மிருசுவில் தக்ஷி நந்தகுமார், பளை சுரேஸ்: பின்னணி என்ன?

அளுத்கடை நீதிமன்ற வளாகத்தில் பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் படுகொலைக்குப் பின்னணியில் இருந்ததாகக் கருதப்படும் இஷாரா செவ்வந்தி, நேபாளத்தின் பக்தபூர் மாவட்டத்தில் உள்ள திப்போஸ் பூங்காவில் உள்ள ஒரு ஆடம்பரமான வீட்டில் மறைந்திருந்தபோது நேற்று முன்தினம் (13) இரவு கைது செய்யப்பட்டார்.