அடுத்த ஆண்டுக்குள் சுமார் 3,000 குறுகிய தூரப் பேருந்துகள் சேவையில் இருந்து விலகும் அபாயம் உள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
Month: October 2025
சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணத்தில் திருத்தம்?
சமிக்ஞையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச்சூடு
இரத்மலானை – கொளுமடம சந்தியில், வேன் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், வேனின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார் என்றும் குறிப்பிட்டார். பொலிஸாரின் சமிக்ஞையை மீறிச் சென்றதாலேயே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பருத்தித்துறையில் வர்த்தகர்கள் போராட்டம்
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு இல்லை
பாதாள அரசியல்வாதிகள் யார்? விரைவில் அம்பலம்
செவ்வந்திக்கு படகு வழங்கிய ஆனந்தனிடம் ஆயுதங்கள் மீட்பு
திட்டமிட்ட குற்றக் கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவை புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் சுட்டுக் கொன்ற வழக்கில் முக்கிய சந்தேக நபருக்கு படகுகளை வழங்கிய நபரின் கிளிநொச்சி வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு பிஸ்டல் ரக துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தியத் தலையீடா?
(முருகானந்தன் தவம்)
2026ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்திற்கு ஏற்ப அரசாங்கத்தின் வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்துவதற்கும் திறம்படச் செய்வதற்கும் அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்வதாக அறிவித்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி.(தேசிய மக்கள் சக்தி) அரசு, அதனடிப்படையில் இரண்டு அமைச்சர்களின் அமைச்சுப் பதவிகளில் மாற்றம் செய்துள்ளதுடன், புதிய அமைச்சர் ஒருவரையும், புதிதாக 5 பிரதி அமைச்சர்களையும் நியமித்துள்ளது.
வாசிப்பின் ஊடாக நவீன சமூகத்தை உருவாக்குவோம்
ஒக்டோபர் மாதம் இலங்கையில் தேசிய வாசிப்பு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. 2004 ஆம் ஆண்டு முதல் இந்த மாதம் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களையும், போட்டிகளையும் நடத்துவதன் மூலம் மாணவர்களிடையேயும் பொதுமக்களிடையேயும் வாசிப்பை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.