வவுனியா சமணங்குளம் கல்லுமலை பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாரை அமைக்கும் பணியில் தொல்பொருள் திணைக்களம் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

The Formula
நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் உட்பட நால்வர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் ஞாயிற்றுக்கிழமை (28) அன்று கைது செய்யப்பட்டனர். பெண் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு பேர் போதை மாத்திரைகளுடன் ஒருவர் மாவா போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகளை நடத்தும் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஹிக்கடுவ கடற்கரையில் நீச்சலடிக்கச் சென்ற வெளிநாட்டு தம்பதியினர் கடலில் அடித்துச் செல்லப்பட்டனர். அப்போது அங்கு கடமையில் இருந்த காவல்துறை உயிர்காக்கும் பிரிவைச் சேர்ந்த நான்கு காவல்துறை அதிகாரிகள் தம்பதியினரை மீட்டனர். அதன்பின்னர் அவர்களுக்குத் தேவையான முதலுதவி சிகிச்சை அளித்தனர். மீட்கப்பட்ட இருவரும் 23 மற்றும் 20 வயதுடைய பெலாரஷ் தம்பதியினர்.
இலங்கையில் அமுலிலுள்ள பொது அவசரகால நிலையை நீடித்து ஜனாதிபதியின் செயலாளரால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.