அம்பாறை மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மீறி வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த 38 வர்த்தகர்களுக்கு நீதிமன்றங்களால் 01 லட்சத்து 77 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட பொறுப்பதிகாரி எஸ்.என்.எம். சாலிய பண்டார நவரத்ன இன்று (07) தெரிவித்தார்.