கல்வி சீர்திருத்தத்திற்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளில்  ஜனவரி 05  முதல் நடைமுறைக்கு வரவிருக்கும் முன்மொழியப்பட்ட புதிய கல்வி சீர்திருத்தங்களை செயல்படுத்த அரசாங்கம் தயாராக இல்லை என்று ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் கல்வி வல்லுநர்கள் கூறியுள்ளதுடன்,  போதுமான ஆலோசனை மற்றும் தயாரிப்பு இல்லாமல் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால் நாடு தழுவிய தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.