பொருளாதார ஸ்திரத்தன்மையும், பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புதலும் ஒன்றல்ல என்பதைப் பல இலங்கை மக்கள் அன்றாடம் உணர்ந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வருமான மட்டம் மீண்டு வந்தாலும், பலரின் சம்பளம் இன்னும் பொருளாதார நெருக்கடிக்கு முந்தைய நிலையை எட்டவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தொழில் சந்தை இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை என்பதையும், குறிப்பாகப் பெண்கள் இதில் அதிக பாதிப்புக்கு உள்ளாவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
