தழிழரசுக் கட்சியின் மும்மூர்த்திகள் தமிழ் மக்கள் பேரவை பற்றி முரண்பாடான கருத்துகள்

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்டு வரும் முயற்சிக ளுக்கு தமிழ்மக்கள் பேரவை குந்தகம் விளை விக்குமா னால் அது தமிழ் மக்களுக்கு செய்யப்படும் துரோகமாகும் என இரா.சம்பந்தன் தெரிவித் துள்ளார்.
அதே வேளை பேரவையின் ஜனநாயக ரீதியான செயற்பாடுகளுக்கு தாங்கள் எதிரானவர்கள் அல்லர் எனவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஓர் தடையாக இருக்காது எனவும் மாவை சேனாதிராசா அறிவித் துள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகையில் தமிழ்மக்களின் பிரச்சினைக்கு பேரவை ஓர் தீர்வுத்திட்டத்தை முன் வைத்தால் அது குறித்து பரிசீலீக்க தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தயாராக இருக்கிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

(“தழிழரசுக் கட்சியின் மும்மூர்த்திகள் தமிழ் மக்கள் பேரவை பற்றி முரண்பாடான கருத்துகள்” தொடர்ந்து வாசிக்க…)

கல்முனையில் இன்று தமிழர்கள் எதிர்ப்பு பேரணி

கல்முனை அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (28) திங்கட்கிழமை கல்முனை தொகுதி தமிழ் மக்கள் மாபெரும் கண்டன எதிர்ப்பு பேரணியில் ஈடுபடவுள்ளனர். கல்முனை பிரதான வீதியிலுள்ள தரவைப் பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக இன்று காலை ஒன்பது மணிக்கு ஆரம்பமாகும் கண்டனப் பேரணி கல்முனை நகர் ஊடாக கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம், கல்முனை மாநகர சபை ஆகிய இடங்களுடாகச் செல்லவுள்ளது.

(“கல்முனையில் இன்று தமிழர்கள் எதிர்ப்பு பேரணி” தொடர்ந்து வாசிக்க…)

பேரவை அவசர கூட்டத்தால் அரசியல் பரபரப்பு

யாழ். மாநாட்டில் அரசியல் தீர்வு குறித்து ஆராய 15 பேர் கொண்ட குழு நியமனம்

தமிழ் மக்கள் பேரவையின் இரண்டாவது கூட்டம் நேற்று (28)யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

(“பேரவை அவசர கூட்டத்தால் அரசியல் பரபரப்பு” தொடர்ந்து வாசிக்க…)

பிளவுபடும் நிலையில் த.தே.கூ; வெளிப்படுத்திய பேரவை

சம்பந்தன் – விக்கி பேச்சு தோல்வி

பங்கேற்ற கூட்டமைப்பினரிடம் விளக்கம் கோருகிறார் மாவை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ள நிலையில், கூட்டமைப்புக்குள் விரிசல் வலுவடைந்துள்ளமை தெளிவாகியிருப்பதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

(“பிளவுபடும் நிலையில் த.தே.கூ; வெளிப்படுத்திய பேரவை” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் மக்கள் பேரவையின் அபத்தமான ஜனநாயக முலாம்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் இணைத் தலைமையில், யாழ்ப்பாணத்தில், உருவாக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்கள் பேரவை, தமிழ் அரசியல், ஊடகப் பரப்பில், வாதப்பிரதிவாதங்களை தோற்றுவித்திருக்கிறது. இந்த அமைப்பு உருவாக்கப்பட்ட விதம், இந்த அமைப்பை உருவாக்கியுள்ளவர்களின் பின்னணி, இதன் அடிப்படை நோக்கம் என்பன நீண்ட விவாதங்களுக்குரிய விடயங்கள் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

(“தமிழ் மக்கள் பேரவையின் அபத்தமான ஜனநாயக முலாம்” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் மக்கள் பேரவையின் கதவு திறந்துள்ளது – சி.வி

தமிழ் மக்கள் பேரவை கொண்டுள்ள எண்ணங்கள், கொள்கைகள் கொண்ட யார் வேண்டுமானாலும் இதில் இணைந்து செயற்பட முடியும் என்று, வடக்கு மாகாண முதலமைச்சரும் பேரவையின் இணைத்தலைவருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். ‘இங்கு யாரும் பின்வாசலால் வரவில்லை அனைவரும் முறையாக அழைக்கப்பட்டு முன்வாசல் வழியேதான் வந்தார்கள். எனவே, சுமந்திரனும் விரும்பினால் இந்த அமைப்பில் இணையலாம். அவர் தனது நிலைப்பாட்டை எம்மிடம் வெளிப்படுத்துவாரேயானால் நாம் அவருக்கும் அழைப்பு விடுப்போம்’ என்று முதலமைச்சர் கூறினார்.

(“தமிழ் மக்கள் பேரவையின் கதவு திறந்துள்ளது – சி.வி” தொடர்ந்து வாசிக்க…)

தை மாதம் மனநிம்மதி – மார்கழி மாதம் மனகிலேசம்

2015 ம் ஆண்டு எம்மை விட்டு விடைபெற இன்னம் சில தினங்களே உள்ள வேளையில் நடந்தேறிய நிகழ்வுகள், இதுவும் எம்மை துன்பத்தில் இருந்து முழுமையாக விடுபட உதவாத ஆண்டு என்றே அறிவித்து செல்கிறது. 2009 ல் புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கபட்டனவே தவிர அரசின், அதன் ஆதரவு செயற்பாட்டாளரின் அத்துமீறல்கள் ஓயவில்லை. அவை தான்தோன்றித் தனமாக நடந்தன. வல்லவனுக்கு வல்லவரான சர்வதேச சண்டியர் ஏற்பாட்டில் இரத்தம் சிந்தாத ஆட்சி மாற்றம் அரங்கேறி 2015 தை மாதம் 8ம் திகதி புதிய தலைவர் தலைமையில் நல்லாட்சி அமைந்தது. அதனால் எம்மவருக்கு மன மகிழ்ச்சி ஏற்பட்ட போதும் அது நிலைத்து நீடிக்குமா என்ற கேள்வியுடன் 2015 மார்கழி மாத நிகழ்வுகள் மனகிலேசத்தை ஏற்படுத்தி தெற்கிலும் வடக்கிலும் கொதி நிலை நீடிக்கிறது.

(“தை மாதம் மனநிம்மதி – மார்கழி மாதம் மனகிலேசம்” தொடர்ந்து வாசிக்க…)

கம்பவாரிதிக்கு ஓர் அன்பு மடல்! பகுதி – 2

கம்பவாரிதிக்கு அன்பு வணக்கம்!

பாவத்தைப் பார்த்திருப்பதும் பாவம் என்ற மார்ட்டீன் லூதர் கிங்கின் மெய்யுரையின் அடிப்படையில் தமிழ்மக்களுக்கு அரசியல்வாதிகளால் இழைக்கப்படும் அநீதிகள், ஏமாற்றங்கள் தொடர்பில் தமிழ்மக்கள் பலரும் வெறுப்புக்கொண்டிருந்தனர். போர் தந்த இழப்புக்கள் எழுந்து நின்று துணிந்து பேசுகின்ற எங்கள் வீரத்தை வீழ்த்தியிருந்தது. இத்தகையதோர் சூழ்நிலையில் பக்கத்திருப்பவர் துன்பந்தனை பார்க்கப் பொறாதவன் புண்ணியமூர்த்தி என்ற பாரதியின் வரிகள் எங்கள் இதயத்தைத் தொட்டுத் துளைத்தன.

(“கம்பவாரிதிக்கு ஓர் அன்பு மடல்! பகுதி – 2” தொடர்ந்து வாசிக்க…)

என்றும் ஆறாத துயர வடுவை பதித்துச் சென்ற சுனாமிப் பேரலை

சோக நினைவின் 11ம் வருட நிறைவு

உலகில் மனிதனினால் வெல்ல முடியாதது அடைய முடியாதது என்று கூறத்தக்கவை எவையும் இல்லை என்பதை காலத்திற்கு ஏற்றால் போல் விஞ்ஞான சமுதாயம் எடுத்துக்கூறி வருகின்றது. விஞ்ஞானத்தையும் உடைத்தெறிக்கூடிய சக்தி பஞ்சபூதங்களுக்கு உண்டு என்பதை அவ்வப்போது இயற்கை எமக்கு காட்டிக்கொண்டுதான் உள்ளது.

(“என்றும் ஆறாத துயர வடுவை பதித்துச் சென்ற சுனாமிப் பேரலை” தொடர்ந்து வாசிக்க…)

கும்பகர்ணர்கள்

(மொஹமட் பாதுஷா)

நாடாளுமன்றத்துக்கு செல்கின்ற நம்முடைய எம்.பி.க்களில் சிலர், எல்லா வரப்பிரசாதங்களையும் சிறப்புரிமைகளையும் உயர்ந்தபட்சமாக உபயோகப்படுத்துகின்ற போதிலும் சபையில் உரையாற்றுதல் என்ற சிறப்புச் சலுகையை மட்டும் மிகச் சரியாக பயன்படுத்திக் கொள்வதில்லை. இந்த பொடுபோக்குத்தனம் எம்மில் பலருக்கு அதிகமாக இருக்கின்றது. நாடாளுமன்றத்தின் ‘ஹன்சாட்’ பதிவேடுகளைப் பரிசோதித்தால் – முஸ்லிம்களின் தேசிய தலைவர்களும் பிராந்திய தளபதிகளையும் எத்தனை தடவைகள் தத்தமது ஆசனங்களில் இருந்து எழுந்து மக்களுக்காக பேசியிருக்கின்றார்கள் என்ற புள்ளி விவரத்தை விலாவாரியாக அறிந்து கொள்ளலாம்.

(“கும்பகர்ணர்கள்” தொடர்ந்து வாசிக்க…)