பாகிஸ்தான் தேர்தல் 2018: இராணுவ ஜனநாயகம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
ஜனநாயகம் பற்றி நாம் நிறையவே பேசுகிறோம். தேர்தல் அதன் அளவுகோலாயுள்ளது. தேர்தல்களின் மூலம் தெரியப்படும் தலைவர்களை, நாம் ஜனநாயகத்தின் பகுதியாகப் பார்க்கப் பழக்கப்படுத்தப்பட்டுள்ளோம். இதனால், தேர்தல்களில் பெறப்படும் வெற்றிகளுக்கான பெறுமதி அதிகம். ஆனால், தேர்தல்கள் உண்மையில் ஜனநாயகத்தின் அளவுகோலாக முடியுமா என்ற கேள்வி, நெடுங்காலமாக வினவப்பட்டு வந்துள்ளது.

(“பாகிஸ்தான் தேர்தல் 2018: இராணுவ ஜனநாயகம்” தொடர்ந்து வாசிக்க…)

விவசாயிகளுக்கு 18,000 ரூபாய் மானியம்

இயற்கையான சேதனப்பசளையை பயன்படுத்தி விவசாய உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடும் விசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 18,000 ரூபாவை வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. இயற்கை பசளையை பயன்படுத்தும் விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிரிவித்துள்ளார்.

(“விவசாயிகளுக்கு 18,000 ரூபாய் மானியம்” தொடர்ந்து வாசிக்க…)

யாழில் பொலிஸாரின் விடுமுறை இரத்து

ஆவா மற்றும் தனுரொக் குழுக்களிடையே ஏற்பட்டுள்ள மோதலைத் தொடர்ந்து, யாழ்ப்பாண மாவட்டத்தில் கடமையாற்றிவரும் பொலிஸாரின் விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. கோப்பாய், சுன்னாகம் மற்றும் மணிப்பாய் ஆகிய பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பிரதேசங்களில் குறித்த இரண்டு குழுக்களிடையே மோதல் இடம்பெற்றுள்ளது. சமீபத்திலும் இவ்வாறு யாழ்ப்பாண மாவட்டத்தில் கடமையாற்றிவரும் பொலிஸாரின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்று ஆகஸ்ட் 1 ‘உலக தாய்ப்பால் தினம்’….

கேரளத்தின் ‘க்ருஹலக்ஷ்மி’ மாத இதழ் தாய்ப்பாலூட்டும் பெண்ணின் படத்தை முகப்பில் வெளியிட்டபோது – ‘100 சதவீத கல்வியறிவு’ பெற்றதாகச் சொல்லப்படும் ‘தெய்வத்தின் சொந்த நாடு’ கேரளாவே விவாதித்து மாய்ந்தது.

(“இன்று ஆகஸ்ட் 1 ‘உலக தாய்ப்பால் தினம்’….” தொடர்ந்து வாசிக்க…)

ராஜபக்‌ஷக்களுடனான சந்திப்பு: சம்பந்தன் யாரை எச்சரிக்கிறார்?

(புருஜோத்தமன் தங்கமயில்)
புதிய அரசமைப்புக்கான வாய்ப்புகள் அனைத்தும் பொய்த்துப்போன புள்ளியில், இரா.சம்பந்தனுக்கும் ராஜபக்‌ஷ சகோதரர்களுக்கும் இடையிலான மிக முக்கிய சந்திப்பொன்று, அண்மையில் இடம்பெற்றிருக்கின்றது. இந்தச் சந்திப்பின் ஏற்பாட்டாளராக இலங்கைக்கான சீனத்தூதுவர் செங் ஷியுவான் இருந்திருக்கின்றார் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.

(“ராஜபக்‌ஷக்களுடனான சந்திப்பு: சம்பந்தன் யாரை எச்சரிக்கிறார்?” தொடர்ந்து வாசிக்க…)

சில மாதங்களில் மாகாண சபை திருவிழா

(Sham Varathan)

எதிர் வரும் சில மாதங்களில் மாகாண சபை திருவிழா நடைபெற போகின்றது என்பது ஊகிக்க கூடிய நிலையில் உள்ளது. அவ்வாறன நிலையில் மக்களின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கும் என்பதை நாம் சிந்திக்க வேண்டிய நிலையுள்ளது.

(“சில மாதங்களில் மாகாண சபை திருவிழா” தொடர்ந்து வாசிக்க…)

வவுனியா இன விகிதாசாரத்தைத் தாக்கும் திட்டமிட்ட குடியேற்றங்கள்

(க. அகரன்)

பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தால் போல், என்ற பழமொழியொன்றின் அர்த்தத்தை மீள் நினைவுக்கு கொண்டு வருவதாக, வடபகுதியில் சிறுபான்மையினரின் நிலைமை காணப்படுகின்றது. அரசியல் தீர்வு என்ற செயற்பாட்டை, தமிழ் அரசியல்வாதிகள் முன்கொண்டு செல்லும் போது, அது தமிழர்களின் வாழ்வியல் நிலைபேற்றையும் அதனுடன் சார்ந்த நிலத்தொடர்பையும் காரணமாக வைத்து, அழுத்தங்களைப் பிரயோகிக்க கூடியதாகவே அமைய வேண்டும்.

(“வவுனியா இன விகிதாசாரத்தைத் தாக்கும் திட்டமிட்ட குடியேற்றங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கை – இந்திய ஒப்பந்தம், இலங்கையின் தலையெழுத்தை மாற்றியது

(எம்.எஸ்.எம். ஐயூப்)
ஜூலை மாதத்துக்குள் இலங்கையின் இனப் பிரச்சினையின் வரலாற்றில், திருப்பு முனைகளாகக் கருதப்பட வேண்டிய இரண்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் திகதி தொடக்கம், சுமார் ஒரு வார காலமாக நாட்டின் பல பகுதிகளில், தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்செயல்கள் அதில் ஒன்றாகும். (“இலங்கை – இந்திய ஒப்பந்தம், இலங்கையின் தலையெழுத்தை மாற்றியது” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி: கூடியது செயலணி

நீண்டகாலமாக இடம்பெற்று வந்த யுத்தம் காரணமாக பின்னடைவுக்கு உள்ளாகியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை துரிதப்படுத்தும் நோக்கில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி செயலணி, நேற்று (30) பிற்பகல், ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி தலைமையில், முதல் முறையாக ஒன்றுகூடியது. (“வடக்கு, கிழக்கு அபிவிருத்தி: கூடியது செயலணி” தொடர்ந்து வாசிக்க…)

அனந்தி விவகாரம் – சபை அமர்வை ஈ.பி.டி.பி புறக்கணித்தது!

அரசியலில் பெண்களின் வகிபங்கு அரிதாகி இருக்கும் எமது நாட்டில் அரசியல் செயற்பாடுகளில் முன்னின்று செயற்படும் ஒருசில பெண்கள் மீது அவதூறுகளை பூசி பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி அவமானப்படுத்துவதுடன் அச்சுறுத்தும் வகையில் செயற்படுவதானது ஒரு அநாகரிகமான செயற்பாடாகும். இவ்வாறான செயற்பாடுகள் சபையில் கண்டிக்கப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி யாழ் மாநகர சபை அமர்வில் கோரியது.

(“அனந்தி விவகாரம் – சபை அமர்வை ஈ.பி.டி.பி புறக்கணித்தது!” தொடர்ந்து வாசிக்க…)