அம்பாறையில் நிலமீட்புப் போராட்டம்: கனகர் கிராமத்தில் மீள்குடியேற்றம் சாத்தியமா?

(அதிரதன்)

அம்பாறை மாவட்டம், பொத்துவில் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட 60ஆம் மைல் போஸ்ட், கனகர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள், “அத்தனை குடும்பத்தினரையும் ஒட்டுமொத்தமாகக் குடியேற்றப்படும்போதே, எங்களது போராட்டம் முடிவுக்கு வரும்” என உறுதிபடத் தெரிவித்துள்ளார்கள். கடந்த ஓகஸ்ட் மாதம் 13ஆம் திகதி தொடங்கப்பட்ட இவர்களின் நில மீட்புப் போராட்டம், நேற்றுடன் (03) 21 நாளை எட்டியபோதும், “இதுவரையில் யார் வந்தும், தீர்க்கமான முடிவையோ, தீர்வையோ வழங்கவில்லை” என்று, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

(“அம்பாறையில் நிலமீட்புப் போராட்டம்: கனகர் கிராமத்தில் மீள்குடியேற்றம் சாத்தியமா?” தொடர்ந்து வாசிக்க…)

‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் கூட்டு துரோகி கூட்டு’ – சி.வி.விக்னேஸ்வரன்

அரசாங்கம் தருவதை ஏற்று எங்கள் இடங்களை நாங்கள் அபிவிருத்தி செய்ய வேண்டுமென தமிழ்க் கட்சித் தலைவர்கள் சிலர் முன்னர் கூறிய போது அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தான் எதிர்த்தனர். அவர்களைத் துரோகிகள் என்று அழைத்தனர் என்றுத் தெரிவித்துள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், துரோகிகள் என்று அழைத்த எமது கட்சியினர் தான், உள்ளூராட்சி சபைகள் பலவற்றில் அந்தத் ‘துரோகி’களுடன் இப்போது கூட்டு வைத்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

(“‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் கூட்டு துரோகி கூட்டு’ – சி.வி.விக்னேஸ்வரன்” தொடர்ந்து வாசிக்க…)

எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த….! (Part 4)

யாழ்ப்பாணப் பயணத்திற்கான தயாரிப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. எனது குடும்பத்துடன் எமது நட்புக் குடும்பம் ஒன்றின் பிரதான ‘புரோக்கிராமிற்குள்’ இணைக்கப்பட்டதே எனது பயண அனுபவங்கள். எனக்கான தனியான பயண விடயங்கள் இதில் உள்ளடக்கப்படக் கூடிய வாய்புகள் எனக்கு அதிகம் இருக்கவில்லை. ஆனாலும் மற்றயவர்களின் பயணச் செயற்பாட்டிற்குள் என்னை இணைத்துக் கொண்டு பல அனுபவங்களைப் பெற்றேன். அவற்றை பதிவு செய்ய விளைகின்றேன்.

(“எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த….! (Part 4)” தொடர்ந்து வாசிக்க…)

நீர்ச்செல்வத்தை ஏன் எதிர்க்கின்றார்கள்?

உலகமே நீருக்காக அலைபாய்ந்து கொண்டிருக்கும்போது ஒரு நதியின் வருகையைக் கண்டு, ஒரு மக்கள் கூட்டம் அச்சப்படுவது இலங்கையில் தானாக இருக்க வேண்டும். இந்த அச்சம் நாற்பது ஆண்டுகளாக நீடிக்கிறது. இது மேலும் நீடிக்கலாம். “மகாவலிகங்கை வடக்கு நோக்கிச் செல்கிறது” என்று அரசாங்கம் அறிவிக்கும் போதெல்லாம் பெரும்பாலான தமிழர்கள் பதைப்போடு தங்களுடைய நெஞ்சைப் பொத்திக் கொள்கிறார்கள். அப்படித்தான் கடந்த 28ஆம் திகதி முல்லைத்தீவில் நாலாயிரத்துக்கும் அதிகமானவர்கள் ஒன்று கூடி வடக்குக்கான மகாவலித்திட்டத்தை மறுதலித்துக் குரலெழுப்பியிருக்கிறார்கள். யுத்தத்திற்குப் பிறகு முல்லைத்தீவில் போராட்டமொன்றுக்காகக் கூடிய மிகப் பெரிய மக்கள் திரள் இது. (“நீர்ச்செல்வத்தை ஏன் எதிர்க்கின்றார்கள்?” தொடர்ந்து வாசிக்க…)

27 வருடங்களின் பின்னர் திறக்கப்படும் பாடசாலை

பிரான்ஸ் நாட்டின் முன்னணி இலக்கியவாதியாகிய விக்டர் ஹியுபோ உலகமே ஏற்கத்தக்க ஒரு உண்மையினை சில வார்த்தைகளால் இவ்வாறு கூறினார். “ஒரு பாடசாலையின் கதவைத் திறப்பவர் சிறைசாலையின் கதவை மூடி விடுகின்றார்” இக்கருத்து எந்தளவு ஆழமான உண்மையாகும் என்பதனை கடந்த பல தசாப்தங்களாக நமது நாட்டிலேயே நம்மால் கண்கூடாகக் காணக்கூடியதாக இருந்தது. கடந்து சென்ற மூன்று தசாப்தங்கள் முழுவதிலும் அடிக்கடி பாடசாலைகள் மூடுவிழா காணும் அதே நேரத்தில் பல்வேறு வகையான தடுப்பு முகாம்களை பற்றியே எமக்கு அதிகம் கேட்கக் கிடைத்தது. இவற்றுள் சிறைச்சாலைகள், அகதி முகாம்கள், தற்காலிக முகாம்கள், திறந்தவெளி சிறைச்சாலைகள் ஆகியன நமது நாட்டினதும் உலகத்தினதும் முக்கிய கதைப்பொருளாக அமைந்ததை நாம் கண்டோம். (“27 வருடங்களின் பின்னர் திறக்கப்படும் பாடசாலை” தொடர்ந்து வாசிக்க…)

தண்ணீர்ப் பஞ்சமே மிகப்பெரிய பிசாசு

உலகிலேயே தண்ணீரில்லாத முதல் நகரமாக தென்னாபிரிக்காவின் கேப்டவுண் மாறிக் கொண்டிருக்கிறது என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். கேப் டவுண் கடுமையான வறட்சியில் – நீர்ப்பஞ்சத்தில் – சிக்கித்தவிக்கிறது. இங்கே மூன்று ஆண்டுகளாக மழை வீழ்ச்சியில்லை. இதனால் தண்ணீருக்கான கலவரங்கள் எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது. தற்போது தண்ணீரைப் பெறுவதற்காக நீர் விநியோக அட்டை அமூல்படுத்தப்படுகிறது. இதில் ஒரு குடும்பத்துக்கு 50 லீற்றர் தண்ணீரே கிடைக்கும். அதற்குள்தான் குளியல், குடிநீர்த்தேவை, சுத்தமாக்கல், ஆடை கழுவுதல் உள்ளிட்ட அனைத்தும். (இதைப்படிக்கும்போது யாழ்ப்பாணத்திலுள்ள மெலிஞ்சிமுனை உள்ளிட்ட பல தீவுப்பகுதிக் கிராமங்களின் காட்சி உங்களுக்கு மனதில் விரியலாம்). (“தண்ணீர்ப் பஞ்சமே மிகப்பெரிய பிசாசு” தொடர்ந்து வாசிக்க…)

‘முஸ்லிம்களிடம் ஆயுதம்’: கரடிவிடுதல்

(மொஹமட் பாதுஷா)

ஒரு நாட்டின் மீது, இனக் குழுமத்தின் மீது, போர் தொடுப்பதற்கு முன்னதாக, மெல்லமெல்ல ஏனைய மக்கள் மத்தியில், அதற்கான காரணத்தை விதைத்து வருவது, உலக அரசியலுக்குப் புதிதல்ல. முஸ்லிம் விரோத சக்திகள், ஓரிரு முஸ்லிம் நாடுகளில், உயிராபத்தை ஏற்படுத்தும் ஆயுதங்கள் இருப்பதாகச் சொல்லியும் பயங்கரவாதிகள் நிலைகொண்டுள்ளனர் எனக் கூறியும் கொடுங்கோல் ஆட்சி நடப்பதாகச் சித்திரித்தும், அந்நாடுகள் மீது போர் தொடுத்து, உள்நாட்டுக் கலவரங்களை ஏற்படுத்தி, அந்நாடுகளைச் சின்னாபின்னமாக்கியதற்கு, நிறைய உதாரணங்கள் இருக்கின்றன. (“‘முஸ்லிம்களிடம் ஆயுதம்’: கரடிவிடுதல்” தொடர்ந்து வாசிக்க…)

‘பெருந்தோட்ட உழைப்புரிமை ஒன்றியம்’ உதயம்

அரசியல் தொழிற்சங்க பேதமின்றி இணைவோம்

மக்கள் தொழிலாளர் சங்கம் அழைப்பில் நேற்று (01-09-2018) இடம் பெற்ற மக்கள் சார்பான கூட்டு ஒப்பந்தம் எவ்வாறு அமைய வேண்டும் என்ற பொதுக் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது ‘பெருந்தோட்டத் தொழிலாளர் உரிமை சம்மேளனம்’ (Plantation Labour Rights Confederation) என்ற பொது அமைப்பு தாபிக்கப்பட்டது. இந்த அமைப்பின் ஆரம்ப கட்டப்பணிகளை மேற்கொள்வதற்காக கலந்துரையாடலுக்கு சமூகமளித்திருந்த ஏழு அமைப்புகளின் பிரதிநிதிகளையும் மூன்று தனிநபர்களையும் உள்ளடக்கிய 11 பேர் கொண்ட முன் தயாரிப்பு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவில் பின் வரும் நபர்கள் அங்கத்துவம் வகிக்கின்றனர்.

(“‘பெருந்தோட்ட உழைப்புரிமை ஒன்றியம்’ உதயம்” தொடர்ந்து வாசிக்க…)

புலிகள் எப்படி ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள் (Part3)

இதேவேளை கடலையும் காட்டுப்பகுதியையும் மெல்லமெல்ல தமது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் சிறிலங்கா ராணுவம் கொண்டுவந்தது. படைத்தரப்பு மன்னாரிலிருந்து நடவடிக்கையை மேற்கொண்டு வன்னி மேற்கின் காட்டுப் பகுதிகளையும் சிறுபட்டணங்களையும் முதலில் கைப்பற்றியது. ராணுவரீதியில் புலிகளின் ஆயுதமும் கவசமும் கடலும் காடுமே. மறுபுறத்தில் மக்கள். படைத்தரப்பின் போர் உத்தியாகக் காட்டையும் கடலையும் தமது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்ததன் மூலம் புலிகளைப் பாதுகாப்பற்ற வெளிக்குள் தள்ளிவிட்டனர். இதனால் புலிகள் சனங்களை அரணாகப் பயன்படுத்தத் தொடங்கினர். புலிகளின் அழிவு என்பது இது போன்ற ஏனைய பல தவறான நடவடிக்கைகள் மூலம் ஏற்கனவே நிகழ்ந்திருந்தாலும் சனங்களைக் கட்டாயப்படுத்திப் போருக்கு இழுத்ததன் மூலம் மேலும் பாதகமான நிலைக்குத் தள்ளப்பட்டனர். சனங்களுக்கும் புலிகளுக்குமான முரண் ஒரு கட்டத்தில் உச்சநிலைக்குப் போய்விட்டது.

(“புலிகள் எப்படி ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள் (Part3)” தொடர்ந்து வாசிக்க…)

அடையாள அட்டை கட்டணம் உயர்வு

தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்போரிடம் அறவிடப்படவுள்ள கட்டணம், இன்று (01) முதல், அதிகரிக்கப்படவுள்ளது. இதன் பிரகாரம், 15 வயதைப் பூர்த்திஜ செய்தவர்கள், அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது, இன்று முதல் 100 ரூபாய் கட்டணத்தைச் செலுத்தவேண்டும் என்று, ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

(“அடையாள அட்டை கட்டணம் உயர்வு” தொடர்ந்து வாசிக்க…)