கேர்ணல் ரத்னப்பிரியவின் பின்னால் மறைந்திருக்கும் உண்மைகள்:துரோகிகளும் தியாகிகளும்

(இனியொரு… )
விஸ்வமடு இராணுவ முகாமிலிருந்து இடமாற்றம் பெற்றுச் செல்லும் இராணுவ அதிகாரியை தமிழ் மக்கள் கதறியழுது கண்ணீர் மல்கி வழியனுப்பிய காட்சி கடந்த இரண்டு நாட்களாக தமிழ் ஊடகங்களை ஆக்கிரமித்துக்கொண்டது. கதறியழுதவர்களை துரோகிகள் என புலம்பெயர் முகநூலில் பஞ்ச் பேசி தமது ‘தேசிய’ உணர்ச்சியை பொரிந்து தள்ளினார்கள். இதன் மறுபக்கத்தில் இராணுவ அதிகாரி இரத்தினப்பிரிய உலகமகா மனிதாபிமானியாக இன்னும் ஒரு குழு மக்களோடு சேர்ந்து கசிந்து கண்ணீர் மல்கியது. இவை இரண்டிற்கும் இடையில் இன்னொரு உண்மை இச் சம்பவங்களின்பின்னால் உறைந்து கிடப்பதை சில ஊடகங்கள் மறைத்தன, மற்றும் சில தமது பிரதியெடுக்கும் திறனை மேலும் வளர்த்துக்கொண்டன.

(“கேர்ணல் ரத்னப்பிரியவின் பின்னால் மறைந்திருக்கும் உண்மைகள்:துரோகிகளும் தியாகிகளும்” தொடர்ந்து வாசிக்க…)

தமிழக அகதிகள் முகாம்களில் இருந்து விமானத்தில் தாயகம் திரும்பும் அகதிகள்.கப்பல் சேவை எப்போது?

(அருளம்பலம்.விஜயன்)

இலங்கையில் ஏற்பட்ட இனச்சிக்கல்கள் காரணமாக 1983 தொடக்கம் இறுrefugees returnதி யுத்தம் நடைபெற்ற காலகட்டம் வரை இலங்கை தமிழர்கள் பல கட்டங்களாக தமிழகத்துக்கு அகதிகளாக வந்து தமிழகத்தின் பல்வேறு முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். முகாம்களில் இருந்தவர்கள் பல கட்டங்களாக தங்களது சொந்த இடத்துக்கும் சொற்ப அளவில்அவ்வப்போது திரும்பிய வண்ணமும் இருந்தனார். இறுதியாக இந்திய- இலங்கைஒப்பந்தம் ஏற்பட்ட 1987 களில் பெருமெடுப்பில் கப்பலில் தாயகம் திரும்பினர்.

(“தமிழக அகதிகள் முகாம்களில் இருந்து விமானத்தில் தாயகம் திரும்பும் அகதிகள்.கப்பல் சேவை எப்போது?” தொடர்ந்து வாசிக்க…)

இந்த நூற்றாண்டின் மறக்கமுடியாத நிகழ்வு !!

இது செய்தி என்பதை விட பல பாடங்களை உலகிற்கு கற்பித்த இந்த நூற்றாண்டின் மறக்கமுடியாத நிகழ்வு. நம்பிக்கை என்ற அந்த ஒற்றை வார்தையின் பலம் மட்டுமே 10 நாட்கள்…….முதன்முறையாக 4km தொலைவில் கண்டுபிடிக்கப்படும் வரை அவர்களை உயிரோடு வைத்திருந்தது.

(“இந்த நூற்றாண்டின் மறக்கமுடியாத நிகழ்வு !!” தொடர்ந்து வாசிக்க…)

‘அபிவிருத்திகளைத் திணிப்பதால் ஐக்கியத்தை ஏற்படுத்திவிடமுடியாது’ – சி.வி.விக்னேஸ்வரன்

வடக்கு, கிழக்கின் பொருளாதார விருத்தி நாட்டின் ஐக்கியத்தை உறுதி செய்யும் என்ற உங்கள் எதிர்பார்ப்பு இடந்தவறியதாகவே எனக்குப்படுகின்றது என்று குறிப்பிட்டுள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அரசியல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்கள் மீது பொருளாதார அபிவிருத்திகளைத் திணிப்பதன் மூலம் தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்திவிடமுடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

(“‘அபிவிருத்திகளைத் திணிப்பதால் ஐக்கியத்தை ஏற்படுத்திவிடமுடியாது’ – சி.வி.விக்னேஸ்வரன்” தொடர்ந்து வாசிக்க…)

போதைப்பொருள் விற்றால் மரண தண்டனை

போதைப்பொருள் விற்பனை செய்வோருக்கு எதிராக மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கிகாரமளித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நேற்று (10) கூடிய அமைச்சரவைக் கூட்டத்திலேயே, மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதி சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கே அமைச்சரவை அங்கிகாரமளித்துள்ளது.

(“போதைப்பொருள் விற்றால் மரண தண்டனை” தொடர்ந்து வாசிக்க…)

சிறுவர்கள் மீட்கப்பட்ட பின்னர் கொண்டாடுகிறது தாய்லாந்து

தாய்லாந்தின் குகையில் சிக்கியிருந்த 12 சிறுவர்களையும் அவர்களின் கால்பந்தாட்டப் பயிற்றுநரையும் மீட்கும் நடவடிக்கை, நேற்று முன்தினம் (10) வெற்றிகரமாக நிறைவுக்கு வந்ததைத் தொடர்ந்து, தாய்லாந்து முழுவதும், நேற்று (11) கொண்டாட்டமான நிலைமையே நிலவியது.

(“சிறுவர்கள் மீட்கப்பட்ட பின்னர் கொண்டாடுகிறது தாய்லாந்து” தொடர்ந்து வாசிக்க…)

‘பிச்சை வேண்டும்; நாயைப்பிடி’

(இலட்சுமணன்)

விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணா பிரிவு; கருணா இலண்டனில் கைது; பிள்ளையான் தரப்பின் ஆதிக்கம்; கிழக்கு மாகாணம் பிரிப்பு; சிவநேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்தின் முதல் முதலமைச்சர்……. இவையெல்லாம் நடந்து முடிந்ததுக்குப் பிறகு, தற்போது கிழக்கு மாகாண சபைக்கான மூன்றாவது தேர்தல் நடைபெறவிருக்கின்றது.

(“‘பிச்சை வேண்டும்; நாயைப்பிடி’” தொடர்ந்து வாசிக்க…)

M உம் நான் உம்

(Saakaran)

மனோகரனும் நானும் மூர்த்தியும் நானும்……

2018 ஜுன் 02 மதியம் 12 மணி, இடம் கிளிநொச்சி. மல்லாவி சென்று வருவோம் ஆட்டோவில் என்ற முடிவுடன் பலராலும் அறியப்பட்ட எழுத்தாளருடன் நான். எம்(ன்) விருப்பப்படி குறிபிட்ட ஆட்டோவை அழைத்துவிட்டு கிளிநொச்சி அரசியல் பிரமுகர் ஒருவரின் அலுவலகத்தில் காத்திருப்பு. கிடைத்த இடைவெளியில் அரசியல் பிரமுகருடன் ஒரு சரியான மாற்றுத்தலமையை கட்டியமைக்க வேண்டும் என்பது தற்போதைய அவசியமான தேவையாக உள்ளது என்பது பற்றி கலந்துரையாடல். அவரின் செயற்பாடுகளுக்கு இடையில் எழுத்தாளரால் இவர்தான் கிளிநொச்சி பகுதியில் அடிமட்ட மக்களிடன் செல்வாக்கை பெற்றுவரும் அந்த அரசியல் பிரமுகருக்கு அடுத்த நிலையில் அவருடன் இணைந்து செயற்படுபவர் என்ற அறிமுகம்.

(“M உம் நான் உம்” தொடர்ந்து வாசிக்க…)

அரசியல் போட்டிகளுக்கு மத்தியில் கிழக்குத் தமிழர் ஒன்றியம் எடுபடுமா?

(அதிரதன்)

பெரியமீன்களைப் பிடிப்பவர்கள் மத்தியில், சின்ன மீன்களையே பிடிக்க முடியாதவர்கள், தாம் பிடித்த சிறியசிறிய மீன்களை, பெரியமீன்கள் என்று சொல்லி, அரசியல் களத்தில் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள். அரசியல் அநாதைகளாக தமிழர்கள் மாறிவிடக்கூடாது என்பதுதான், இனப்பிரச்சினைக்கான தோற்றுவாயாக இருந்திருக்கிறது. அந்த அடிப்படையில், இப்போதுள்ள அரசியல் போட்டிகளுக்கு மத்தியில், கிழக்கில் இருக்கின்ற அரசியல் கட்சிகளின் பிரிந்து நிற்கின்ற தன்மையானது, அதிகாரத்தைப் பெற்றுக்கொள்கின்ற நிலைப்பாட்டுக்கு எதிராக இருக்கிறது, என்ற சிந்தனை வளர்ந்து வருகிறது.

(“அரசியல் போட்டிகளுக்கு மத்தியில் கிழக்குத் தமிழர் ஒன்றியம் எடுபடுமா?” தொடர்ந்து வாசிக்க…)

தனித்து நிற்கும் வல்வெட்டித்துறை அம்மனும் சிவனும்….?

(Saakaran)

வாழையும் பனைமரமும் கிளை வைப்பதில்லை அதிலும் வாழை ஒரு முறை குலை போட்ட பின்பு தனது வாழ் நாளைக் நிறுத்திக் கொள்ள ஆரம்பிக்கும். ஆனாலும் அது பூப்பதிலும் காய்பதிலும் கனிவதிலும் பின் நிற்பதில்லை. கிளை வைத்த பனை மரம் வல்லிபுரக்கோவில் அருகில் என்னால் இன்று அதிசயமாக காணமுடிந்து. கூடவே வல்லிபுர ஆழவார் அருகில் இருக்கும் மணல் காடு என்ற கடற்கரைக் கிராமத்து குறிகாட்டியும் 1980 களுக்கு என்னை இழுத்து சென்றுவிட்டது. நீர்வேலியில் அமைந்து கிளாஸ் பக்ரறி இற்கு முன்னால் யாழ் பருத்துறை வீதியில் வைத்து நடாத்தப்பட்ட வங்கிப் பணப்பறிப்பு சம்பவமும் இதனைத் தொடர்ந்து பொலிசார் கொலையும் பணத்தை கையாளுவதில் ஏற்பட்ட முரண்பாடுகளும் தமிழ் நாட்டிற்கு பாதுகாப்பு காரணமாக செல்வதற்காக அன்று பிரபல்யமாக தேடப்பட்ட தங்கத்துரை குட்டிமணி தேவன் போன்றோர் படகு ஒன்றிற்காக மறைந்து காத்திருக்கையில் அவர்களின் பணப்பறிப்பு சகாவான பிரபாகரனால் காட்டிக் கொடுக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டிற்கு இன்று வரை ஆதாரபூர்வமான தடயங்கள் கிடைக்கவில்லை ஆனாலும் தொடர்ந்து 1983 ஜுலை வெலிக்கடைப் படுகொலைகளும் இதற்கு முன்னரான திருநெல்வேலி தபாற்பெட்டி சந்தி 13 இராணுவ கொலைச் சம்பவங்களை வைத்து எழுப்பப்பட்ட ஊகங்களும் இன்றுவரை விடைகாணாத கேள்விகளாகவே தொடர்கின்றன.

(“தனித்து நிற்கும் வல்வெட்டித்துறை அம்மனும் சிவனும்….?” தொடர்ந்து வாசிக்க…)