அமானிதமான அ.இ.ம.கா. தேசியப்பட்டியல் எம்.பி பதவியும் மக்களின் எதிர்பார்ப்பும்!

(எஸ். ஹமீத்)

2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி நடைபெற்ற இலங்கைப் பாராளுமன்றத்திற்கான பொதுத்தேர்தலில் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்று வெற்றி வாகை சூடிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி கிடைத்தது. அந்தப் பதவி புத்தளத்தைச் சேர்ந்த எம்.எச்.எம். நவவி அவர்களுக்கு வழங்கப்பட்டது.

(“அமானிதமான அ.இ.ம.கா. தேசியப்பட்டியல் எம்.பி பதவியும் மக்களின் எதிர்பார்ப்பும்!” தொடர்ந்து வாசிக்க…)

நான்கு பேரும் நம்ம தனியார் ஆஸ்பத்திரியும்!

டாக்டர்: என்ன வருத்தம்?

நோயாளி 1: தலைவலி டாக்டர்.
டாக்டர்: என்ன தொழில் செய்றீங்க?
நோயாளி 1 : ஒரு தொழிலும் இல்லீங்க. ரொம்பக் கஷ்டமான வாழ்க்கை.
டாக்டர்: சரி…ஒரு நாளைக்கு மூணு வேளை ஒவ்வொரு பனடோல் போடுங்க…சரியாயிடும்.

(“நான்கு பேரும் நம்ம தனியார் ஆஸ்பத்திரியும்!” தொடர்ந்து வாசிக்க…)

ஆந்திரப் புரட்சி நடிகர் ‘ரெட் ஸ்டார்’ மாதலா ரங்காராவ் மரணமடைந்தார்.

உடல்நலம் குன்றியிருந்த ஆந்திரப் புரட்சி நடிகர்
‘ரெட் ஸ்டார்’ மாதலா ரங்காராவ் கடந்த
மே 27 ஆம் தேதி ஹைதராபாதில் மரணமடைந்தார்.

என் நண்பன் ஹுசைன் மூலம்தான்
அவர் எனக்குப் பரிச்சயமானவர்.
‘ஜீவா முழக்கம்’ பத்திரிகைக்காக
நெடிய நேர்காணல் ஒன்றை அவரை சந்தித்துப் பெற்றேன்.
அதற்கு ‘பாரதம் சிவக்கட்டும்’ என்று தலைப்பிட்டிருந்தேன்.

(“ஆந்திரப் புரட்சி நடிகர் ‘ரெட் ஸ்டார்’ மாதலா ரங்காராவ் மரணமடைந்தார்.” தொடர்ந்து வாசிக்க…)

தமிழர் தேசிய உணர்வுடன் கிழக்கில் ஓரணிக்கான வாய்ப்பு?

(இலட்சுமணண்)

‘அழுதும் பிள்ளை அவளே பெறவேண்டும்’ என்பதுபோல், கிழக்கு மாகாணத் தமிழர்கள், தங்களைத் தற்காத்துத் தங்கள் எதிர்கால இருப்பைப் பாதுகாத்துப் பேணுவதற்குரிய அரசியல் பொறிமுறைக்கான அடித்தளத்தை, இட்டுக் கொள்வது சாத்தியமா என்ற கேள்வியைக் கேட்டுக் கொள்வோம். எவ்வாறிருந்தாலும், வடக்கில் தமிழர் ஒருவரே முதலமைச்சராக வருவார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இருந்தாலும், அங்கு தற்போதைய முதலமைச்சரை மீண்டும் அதிகாரத்தில் அமர்த்துவதா, அதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதா, இல்லாவிட்டால் புதியவர் ஒருவரைக் கொண்டு வருவதா என்கிற போட்டி நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

(“தமிழர் தேசிய உணர்வுடன் கிழக்கில் ஓரணிக்கான வாய்ப்பு?” தொடர்ந்து வாசிக்க…)

கனேடியத்தமிழ்நாடோடிக்கதை

(மே 22 மணிவிழாக்காணும் சேரன் ஒரு நாடோடிக்கதையின் கதாநாயகனும். புலிப்பாசிச சேவைகளுக்காக சேரன் மாமனிதர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்)

பொட்டம்மானின் மனைவியும் தேசியத்தலைவரின் மனைவியும் நெருங்கிய நண்பிகள். ஒருமுறை பொட்டம்மானின் மனைவி தேசியத்தலைவரின் மனைவி மதிவதனிக்கு பேன் பார்த்துக்கொண்டிருந்தபோது மட்டக்களப்பார் எல்லாரும் தேசியத்தலைவரை படிக்காத ஆள் என்று பழிக்கிறார்களே என்று மதிவதனி குறைபட்டுக்கொண்டாரம். இதற்கு பொட்டரின் மனைவி ” யக்கா இதுக்கெல்லாம் போய்க்கவலைப்பர்றியளே, ஏன் உங்கட மகனை உங்கடை “இஞ்சேருங்கோ’ விட்டைச் சொல்லி லண்டன் சீமைக்கனுப்பி இங்கிலீசில ஒக்ஸ்போட்டில படிப்பிக்கலாமே ” என்று ஆலோசனை சொன்னா.

(“கனேடியத்தமிழ்நாடோடிக்கதை” தொடர்ந்து வாசிக்க…)

முள்ளிவாய்க்காலைப் போல சுற்றி வளைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி, திரேஸ்புரம்!

இன்றிரவு நடக்கவிருக்கும் போலீசு தாக்குதலை தடுத்து நிறுத்த குரல் கொடுப்போம்!

– பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கூட்டறிக்கை

தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 14 என்பது கடைசியாக கிடைத்த தகவல். 30 பேருக்கும் மேற்பட்டவர்கள் குண்டடி பட்டிருக்கின்றனர். துப்பாக்கிச் சூடு மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பகுதியில்தான் நடைபெற்றது என்பது உண்மைக்குப் புறம்பானது என்கிறார்கள் தூத்துக்குடி மக்கள்.
திரேஸ்புரம் பகுதிக்குள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வரும்போது, அவருக்கு காவல் வந்த படையினர் துப்பாக்கியால் சுட்டதில் இரண்டு பெண்கள் ஓர் ஆண் உள்ளிட்ட மூவர் கொல்லப்பட்டிருக்கின்றனர். (“முள்ளிவாய்க்காலைப் போல சுற்றி வளைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி, திரேஸ்புரம்!” தொடர்ந்து வாசிக்க…)

தூத்துக்குடியில் உயிர் இழந்த மக்களுக்கு அஞ்சலி

இந்திய தமிழகத்தில் தூத்துக்குடியில் அகிம்சைவழியில் போராடிய தமிழ்மக்களை சுட்டு கொன்றதற்கு கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் உயிர் இழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இலங்கையில் திருகோணமலை மலையருவி முன் ஒன்று கூடிய போது

மே 19. தலைவர் பிரபாகரனின் உடல்……..?

இன்று மே 19. தலைவர் பிரபாகரனின் உடல் இன்றுதான் சிறிலங்கா மற்றும் சர்வதேச ஊடகங்களில் காட்டப்பட்டது. சிதைக்கப்பட்டிருந்த தலையின் மேற்பகுதி துண்டு போட்டு மூடப்பட்டிருந்தது. அளவற்ற புலிச் சீருடை ஒன்று அணிவிக்கப்பட்டிருந்தது. தெளிவற்ற கமெரா (அனேகமாக கைத்தொலைபேசி) ஒன்றின் ஊடாக அந்தக் காட்சி எடுக்கப்பட்டிருந்தது.

(“மே 19. தலைவர் பிரபாகரனின் உடல்……..?” தொடர்ந்து வாசிக்க…)

முள்ளிவாய்க்கல் நினைவேந்தலும் விக்கி ஐயா கையேந்தலும்

இன்றுவரை வடமாகாண முதலமைச்சராகிய பிற்பாடு, பல நாடுகளுக்கு செல்லும் அனுபவங்களையும் விக்கினேஸ்வரன் அவர்கள் (விக்கி ஐயா) பெற்று வந்துள்ளார். ஆனால் ஒரு நினைவேந்தலிலே யார் பங்கேற்கிறார்கள் என்பதைக் கூட அறியாதவராக உள்ளவரா விக்கி ஐயா? கனடாவில் இரண்டாம் உலக யுத்தத்தில் போரிட்டு உயிரிழந்தவரைக் கனம் பண்ண, முன்னாள் போராளிகளை Veterans எனக் கூறி, அவர்களுக்கு முன்னிடம் அளித்துத்தான் ஆண்டுதோறும் நினைவேந்தல் நடைபெறுகிறது. இது அவர்களுக்கு அளிக்கும் ஆறுதல்.

(“முள்ளிவாய்க்கல் நினைவேந்தலும் விக்கி ஐயா கையேந்தலும்” தொடர்ந்து வாசிக்க…)