இறுதி யுத்தத்தில் காணாமலாக்கப்பட்ட 280 பேரின் பெயர் விவரங்கள் வெளியீடு

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது, சரணடைந்த பின்னர் இலங்கை படையினரின் தடுப்புக்காவலில் இருந்த 280 பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக, சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் தெரிவித்துள்ளது. இவ்வாறு காணமற்போனவர்களில் குறைந்தது 25 சிறுவர்களும் உள்ளடங்குவதாகவும், இவர்கள் 2009ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மைய நாட்களில் இவர்களின் குடும்பங்களுடன் இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பில் இறுதியாக காணப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, பெயர் விபரங்களையும் வெளியிட்டுள்ளது.

(“இறுதி யுத்தத்தில் காணாமலாக்கப்பட்ட 280 பேரின் பெயர் விவரங்கள் வெளியீடு” தொடர்ந்து வாசிக்க…)

அனைத்து அதிகாரங்களும் காவிரி வாரியத்துக்கே: உச்ச நீதிமன்றம் உத்தரவு: மத்திய அரசுக்கு ‘குட்டு’: கர்நாடக கோரிக்கை நிராகரிப்பு

காவிரி நதிநீர் பங்கீடு வழக்கை இன்று விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், இறுதி தீர்ப்பில் கூறியுள்ளபடி அமைக்கப்படும் காவிரி நிதிநீர் மேலாண்மை வாரியத்துக்கே அனைத்து அதிகாரங்களும் உண்டு, மத்திய அரசை அணுகத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேசமயம், வழக்கை ஜூலை மாதத்துக்கு ஒத்திவைக்க வேண்டும் என்ற கர்நாடகத்தின் கோரிக்கையும், இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கே என்பதையும் ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

(“அனைத்து அதிகாரங்களும் காவிரி வாரியத்துக்கே: உச்ச நீதிமன்றம் உத்தரவு: மத்திய அரசுக்கு ‘குட்டு’: கர்நாடக கோரிக்கை நிராகரிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: குறுகிய அரசியலுக்கு அப்பாலான கணம்

(புருஜோத்தமன் தங்கமயில்)

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வை, யார் ஒழுங்குபடுத்துவது என்பது தொடர்பில், கடந்த ஒரு மாத காலமாக நீடித்து வந்த சிக்கலுக்குத் தற்காலிகத் தீர்வொன்று காணப்பட்டுள்ளது. அதன்பிரகாரம், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், நினைவேந்தல் நிகழ்வுகளை நேரடியாக ஒழுங்குபடுத்தவுள்ளது.

(“முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: குறுகிய அரசியலுக்கு அப்பாலான கணம்” தொடர்ந்து வாசிக்க…)

‘விரைவாக முடிவெடுங்கள்; குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும்’: கர்நாடக ஆளுநருக்கு, ஓய்வுபெற்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே எச்சரிக்கை

 

கர்நாடக சட்டசபையை விரைவாகக் கூட்டுங்கள், இல்லாவிட்டால், அரசியல் கட்சிகளின் குதிரைபேரத்துக்கு வழிவகுக்கும் என்று கர்நாடக ஆளுநர் வாஜுபாய் வாலாவுக்கு உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே எச்சரித்துள்ளார். கர்நாடகத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தனிப் பெரும்பான்மை எந்தக் கட்சிக்கும் கிடைக்காத நிலையில்,. 104 இடங்கள் பெற்ற பாஜகவை ஆட்சியில் அமரவிடக்கூடாது என்று நோக்கில் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்தது 78 இடங்களில் வென்ற காங்கிரஸ் கட்சி.

(“‘விரைவாக முடிவெடுங்கள்; குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும்’: கர்நாடக ஆளுநருக்கு, ஓய்வுபெற்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே எச்சரிக்கை” தொடர்ந்து வாசிக்க…)

குமுதினிப் படகு படுகொலை 33 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு

நெடுந்தீவு துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள குமுதினிப் படகு படுகொலை நினைவுத் தூபிக்கு இன்று (15) அஞ்சலி செலுத்தப்பட்டது. 1985ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி நெடுந்தீவு துறைமுகத்திலிருந்து 64 பயணிகளுடன் குமுதினி படகு தனது பயணத்தை வழமை போல ஆரம்பித்தது. படகு அரை மணி நேரம் தனது பயணத்தை மேற்கொண்டிருந்தவேளை கடற்படையால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டு குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் என 36 பேரை வெட்டி படுகொலை செய்யப்பட்ட துயரம் நிறைந்த 33 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

(“குமுதினிப் படகு படுகொலை 33 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு” தொடர்ந்து வாசிக்க…)

இரணைதீவில் மீள்குடியேற அனுமதி

இரணைதீவில் மக்கள் தங்களின் சொந்த காணிகளில் மீள்குடியேறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பி.சுரேஸ் அறிவித்துள்ளார் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் பி.சுரேஸ், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.ராஜபக்ஸ, இலங்கையின் கடற்படை தளபதி ரியர் அட்மிரல் எஸ்.எஸ்.ரணசிங்க தலைமையிலான குழுவினர் இன்று (15) இரணைதீவுக்கு விஜயம் செய்தனர்.

(“இரணைதீவில் மீள்குடியேற அனுமதி” தொடர்ந்து வாசிக்க…)

MY TRANSCENDENTAL BIRTH STORY

(by birthindia | May 13, 2018 | Birth, Birth Photography, Birth Story, Home Birth, Hypnobirth, Midwifery, Parenting, Pregnancy, Unassisted birth)

My Transcendental Birth Story
She decided, that a hospital birth wasn’t how she wanted to birth her second baby. Mom Ragavardhini, planned to birth her baby from the comfort of her home and in the warmth of water, and that’s what she did. On mother’s day, she shares her sublime birth story and her all-powerful birth experience!

(“MY TRANSCENDENTAL BIRTH STORY” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கை: ‘இறந்தவர்களை வைத்து அரசியல் செய்யாதீர்கள்’

இலங்கையில் இறந்தவர்களின் பிணத்தை வைத்து ஆதாயம் தேடும் நடவடிக்கைகளை அரசியல்வாதிகள் நிறுத்த வேண்டும் என்றும், இலங்கையில் புரையோடிப்போயிருக்கும் இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஒன்றைக் காண்பதில் அவர்கள் அக்கறை செலுத்த வேண்டும் என்றும் இலங்கையின் மூத்த செய்தியாளர்களும், ஆய்வாளர்களும் கருத்து வெளியிட்டுள்ளனர். (“இலங்கை: ‘இறந்தவர்களை வைத்து அரசியல் செய்யாதீர்கள்’” தொடர்ந்து வாசிக்க…)

குழந்தைகள் கொத்துக்கொத்தாக செத்து விழுந்ததை…..

(Rathan Chandrasekar)
உத்தரப்பிரதேசம் கோரக்பூரில் ஆக்சிஜன் சிலிண்டர்கள்
இல்லாத காரணத்தால் குழந்தைகள்
கொத்துக்கொத்தாக செத்து விழுந்ததை
இதயம் உள்ளவர்கள் அவ்வளவு எளிதில்
மறக்கமாட்டார்கள். அதேபோல,
கைக்காசை செலவு செய்து ஆக்சிஜன் வாங்கி
பல குழந்தைகளின் உயிர் காத்த டாக்டர்
கஃபீல் அஹ்மத் கானையும்
நம்மால் மறக்கவே முடியாது.

(“குழந்தைகள் கொத்துக்கொத்தாக செத்து விழுந்ததை…..” தொடர்ந்து வாசிக்க…)