மழைப் பேரிடரில் இப்படியும் நடக்கின்றது

’உதவும் நண்பர்களே,
உங்கள் மீது எனக்குள்ள அக்கறையினால் கூறுகிறேன்!’

(ம.செந்தமிழன்)

சென்னைக்குப் பொருட்கள் அனுப்புவோர், புதிதாக எழுந்துள்ள ஒரு சிக்கலை அறிந்துகொள்வதற்காக இதை எழுதுகிறேன். கடலூர் மற்றும் அதன் சுற்றுப் புறச் சாலைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று கொண்டு வாகனங்களை மறித்து, பொருட்களைப் பறிக்கும் சம்பவங்கள் ஏராளமாக நடக்கின்றன. நாங்கள் நேற்று இச்சம்பவங்களை நேரில் கண்டோம். இந்த மக்கள் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல, சாலையோரங்களில் வாழ்பவர்கள்.

(“மழைப் பேரிடரில் இப்படியும் நடக்கின்றது” தொடர்ந்து வாசிக்க…)

பாதுகாப்பாக இருப்பதற்காக வெட்கப்படுகிறேன் – கமலஹாசன்

“ஒரு பாதுகாப்பான அறையில் அமர்ந்து கொண்டு என் சக சென்னை மக்கள் மழையிலும் வெள்ளத்திலும் அவதிப்படுவதை ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
உண்மையில் எனக்கு இப்படி இருப்பது வெட்கமாக இருக்கிறது. தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கே இந்த நிலைமை என்றால் பிற பகுதிகளைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. ஏழைகளுக்கும், நடுத்தர வகுப்பினருக்கும் இது ஒரு கெட்ட கனவு.
பணக்காரர்கள் பிறர் படும் துன்பம் கண்டு வெட்கப்படவேண்டும் . நான் பெரிய பணக்காரன் இல்லையென்றாலும் ஒன்றும் செய்யமுடியாமல் வேடிக்கை பார்ப்பது எனக்கே வெட்கத்தை உண்டாக்கிறது.

(“பாதுகாப்பாக இருப்பதற்காக வெட்கப்படுகிறேன் – கமலஹாசன்” தொடர்ந்து வாசிக்க…)

எம்மை ஆதரித்த சென்னை மக்களுக்கு நாமும் உதவவேண்டும்

வரலாறு காணாத மழை வெள்ளம் சென்னையை புரட்டிப்போட்டு மக்களின் வாழ்க்கையை நிலைகுலையச் செய்துவிட்டது.
மாநில அரசு,மத்திய அரசு,தன்னார்வலர்கள்,தொண்டு நிறுவனங்கள் என அனைவரும் அந்த மக்களுக்கான உடனடித்தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அதிக அக்கறையுடன் செயல்பட்டு அதனை செய்து கொண்டிருக்கின்றனர். இருந்தும் வெள்ளம் காரணமாக நிலைகுலைந்து இயல்பு வாழ்கையை தொலைத்த அந்த மக்களுக்கு உதவவேண்டிய கடப்பாடு எமக்கும் உள்ளது என்பது இலங்கைத் தமிழர்கள் எண்ணங்களில் இயல்பாக தோன்றியருக்கக் கூடியதுதான் அதை நடைமுறைப்படுத்த வசதிபடைத்தவர்கள்.தன்னார்வலர்கள் முன்வரவேண்டும்.

(“எம்மை ஆதரித்த சென்னை மக்களுக்கு நாமும் உதவவேண்டும்” தொடர்ந்து வாசிக்க…)

சென்னைக்கு உதவுவது ஈழத்தமிழரின் கடமை

சென்னையில் பிரளயம் நிகழ்ந்திருக்கிறது. தண்ணீர் ஊழித்தாண்டவம் ஆடியிருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் தண்ணீர் இன்றி உணவின்றி தவித்தார்கள். சமானிய மக்கள் வாழ்நாள் பூராவும் தேடியவை எல்லாம் அழிந்து போயின. சேவைத்துறைகள் யாவும் ஸ்தம்பிதமடைந்தன.
வாழ்வும் -வாழ்வாதாரங்களும் தலைகீழாகப் புரட்டிப் போடப்பட்டது.
இந்த இடர் மிகுந்த நிலையில் மக்கள் இளையதலைமுறையினர் பிரமாண்டமான சமூகஅபிமானத்தை நல்லிதயத்தை வெளிப்படுத்தினார்கள். சகமாநிலங்கள் உதவிக்கு விரைந்தன. மக்கள் தன்னியல்பாக உதவ முன்வந்தார்கள். 2004 சுனாமி வந்த போது சகமனிதர்கள்- சக சமூகத்தவர்கள் -எமது அண்டை நாடு ஓடோடி வந்து உதவிய கணங்களை ஞாபகத்தில் கொள்வோம்.

(“சென்னைக்கு உதவுவது ஈழத்தமிழரின் கடமை” தொடர்ந்து வாசிக்க…)

ஸ்டிக்கர் ஒட்டுவதும் கமலுக்குப் பதில் சொல்வதும்தான் அரசின் கடமையா? – மருதன்

“சென்னையில் இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டது. மக்கள் சகஜமாகத் தங்கள் பணிகளை மேற்கொள்ள தொடங்கி விட்டனர். சாலைகள் துடைத்து வைத்ததைப் போல் பளிச்சென்று இருக்கின்றன. இயற்கையின் சீற்றத்தை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் சீர்மிகு ஆட்சி பெருமளவில் எதிர்கொண்டு சமாளித்துவிட்டது. முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின் படி பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து விதமான நிவாரண உதவிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழக அரசின் சீர்மிகு செயல்பாடுகளால் தமிழக மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்“ – கதவை நன்றாக மூடிவிட்டு, கட்டிலில் படுத்துக்கொண்டு வேளாவேளைக்கு ஃபில்டர் காபியும் மசாலா தேநீரும் பருகியபடி ஜெயா டிவியை மட்டுமே 24 மணி நேரமும் பார்த்துக்கொண்டிருக்கும் ஒருவரால் மட்டுமே இந்த நிலவரத்தை நம்பி ஏற்க முடியும்.

(“ஸ்டிக்கர் ஒட்டுவதும் கமலுக்குப் பதில் சொல்வதும்தான் அரசின் கடமையா? – மருதன்” தொடர்ந்து வாசிக்க…)

சென்னை ஆட்களைப் பார்த்தால் மிகவும் எரிச்சலாக இருக்கும்.

சென்னை ஆட்களைப் பார்த்தால் மிகவும் எரிச்சலாக இருக்கும். சுயநலமாக இருப்பவர்கள் மட்டுமல்ல கொஞ்சம் கூட மனித நேயம் இல்லாதவர்கள் என்று. அந்த எண்ணத்தை இன்று பார்த்த சில காட்சிகள் மாற்றிவிட்டது.

1. ஜோய் ஆலுக்காஸ் முன்னால் நாங்கு இளைஞர்கள் முழங்கால் அளவு இருக்கும் தண்ணீரில் இரண்டு , மூன்று நாட்கள் நின்று கொண்டு அந்தப் பக்கம் வரும் பைக், கார் இவை சிக்கிக் கொண்டால் தூக்கி உதவிக் கொண்டும் போக்குவரத்தை சரி செய்து கொண்டும் இருந்தார்கள்.

2. வேளச்சேரி -பள்ளிக்கரணை பாலத்துக்கு கீழ் ஒருவர் முட்டி அளவு தண்ணீரில் நின்று ” இந்தப் பக்கம் வராதீங்க பள்ளம் இருக்கு ” என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

3. ஜெயின் சங்கத்தினர் பார்க்கும் இடமெல்லாம் உணவு வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். தீவிரமாக நிவாரணப் பணிகள் செய்து கொண்டிருந்தார்கள்
.
4. ஃபேஸ்புக்கில் அதிகம் திட்டப்படும் காஞ்சி மடம், தஹ்வீத் ஜமாத் ஆகியோர் பம்பரமாக சுழன்று இண்டு இடுக்குகளில் இருப்பவர்களைத் தேடி உணவு கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

5. உலகமெங்கும் உள்ள தமிழர்கள் நான் காசு தர்ரேன் போய் உதவுங்க என்று கெஞ்சுகிறார்கள்.

6. என் உறவினர் ஒருவர் மூன்று நாட்களாக சமைத்து பாரீஸ் கார்னர் சுற்றி உள்ள மக்களுக்கு சாப்பாடு , பழங்கள் கொடுத்து வருகிறார்.

7. நண்பன் இருக்கும் அடுக்கு மாடி குடியிருப்பில் காலை 4 மணிக்கு எழுந்து உயர் அதிகாரிகள், பெண்கள் , குழந்தைகள் என்று கூடி உணவை தயார் செய்து பாக்கெட்டில் அடுக்கி தினமும் சுமார் 1000 உணவுப் பொட்டலங்களை தயார் செய்தார்கள்.

8. மீனவர்கள் தங்கள் படகுகளில் வந்து தங்கள் வருமானத்தைப் பற்றி கவலைப்படாமல் இலவசமாக சேவை செய்து இரண்டு மூன்று நாட்கள் மக்களை மீட்டு எடுக்க உதவுகிறார்கள்.

9. போக்குவரத்து காவலர்கள் கொட்டும் மழையிலும் போக்குவரத்தை சரி செய்து கொண்டு இருக்கிறார்கள்.

10. துப்புரவுத் தொழிலாளர்கள் இரவு மழையைப் பற்றிக் கவலைப்படாமல் பம்பரமாக வேலை செய்தார்கள்.

11. உயிர் நண்பன் ஒருவன் 10 பேர் உயிரைக் காப்பாற்றினான். இன்னொருவன் இரண்டு நாட்கள் தூக்கமில்லாமல் தேனீயாக் சுழன்று நிவாரணப் பணிகள் செய்து கொண்டிருக்கிறான்.
மனித நேயம் சுத்தமாக செத்துப் போய்விடவில்லை. சென்னை மக்களுக்கு உதவ தூக்கம், பசி , வேலை , குடும்பம் அனைத்தையும் மறந்து உழைத்தவர்கள் பாதங்களை தொழுகிறேன்.

அய்யா/ அம்மா உங்கள் சேவை ஈடு இணையற்றது.ஊரெல்லாம் இது போன்ற கடவுள்கள் ஏராளமானோர் இருக்காங்க.

By –
நா சாத்தப்பன்

நாபா பிறந்த நாள்….. வடக்கு கிழக்கு மாகாண சபை தேர்தல் நடந்த நாள் ? நவம்பர் 19 !

வரலாற்றில் நல்ல மனிதர்களும் நல்ல நிகழ்வுகளும் நடந்த தினங்கள் எம் நினைவில் எப்போதும் இருக்கும். அந்த வகையில் எனக்கு தெரிந்த ஒரு விடயமும், நான் அறிந்த இரண்டு விடயங்களும் என்றும் என் நினைவில் இருக்கும். எனக்கு தெரிந்த விடயம் 1988 நவம்பர் 19ல் நடந்த வடக்கு கிழக்கு மாகாண சபை தேர்தல். அறிந்த விடயங்களில் ஒன்று நாபா பிறந்த தினம் மற்றது அன்னை இந்திரா காந்தி பிறந்த தினம். ஈழ விடுதலை போராட்டத்தில் மறக்க முடியாத நாபா பிறந்த நவம்பர் 19ம் நாளை, மனிதம் பிறந்த நாள் என்பேன்.

(“நாபா பிறந்த நாள்….. வடக்கு கிழக்கு மாகாண சபை தேர்தல் நடந்த நாள் ? நவம்பர் 19 !” தொடர்ந்து வாசிக்க…)

அது நடந்து அறுபது ஆண்டுகள் ஆகிவிட்டது….. காலம் மாறிவிட்டது

1950களில் தென் மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த போது அந்த இடங்களைப் பார்வையிடுவதற்காக காமராஜர் சென்றிருந்தார். கடும் வெள்ளம். தண்ணீர் சுழித்துச் சுழித்து ஓடுகிறது. அதிகாரிகள் தயங்கி நிற்கிறார்கள். சட்டையைக் கழற்றிக் கொடுத்துவிட்டு வேஷ்டியை மடித்து இறுகக் கட்டிக் கொண்டு தண்ணீருக்குள் குதித்து மக்களை நோக்கிச் சென்றாராம் காமராஜர். அப்பொழுது மீடியா வெளிச்சம் இல்லை. பேண்ட்டை சுருட்டிவிட்டால் கூட படம் எடுத்து ‘எங்க ஆளைப் பார்..அடுத்த ஆட்சி எங்களுடையதுதான்’ என்று கறுவும் கலாச்சாரம் இல்லை. ஆனாலும் காமராஜர் தண்ணீருக்குள் இறங்கினார்.

(“அது நடந்து அறுபது ஆண்டுகள் ஆகிவிட்டது….. காலம் மாறிவிட்டது” தொடர்ந்து வாசிக்க…)

மக்களிடம் மதம் இனங்களைக் கடந்த மனித நேயம்

சென்னை வெள்ள நிவாரணப் பணிகளில், மக்கள் தாமாகவே முன்வந்து ஒருவருக்கொருவர் உதவுவதைக் காணலாம். மதம், சாதி வேறுபாடுகள் கடந்து, மனிதநேயத்துடன் உதவுகின்றனர். இயற்கைப் பேரழிவுகள் எத்தனை துயர் மிக்கதாயினும், மனிதர்கள் யாவரும் ஒரே இனம் என்ற உண்மையையும் உணர்த்துகின்றன.

(“மக்களிடம் மதம் இனங்களைக் கடந்த மனித நேயம்” தொடர்ந்து வாசிக்க…)

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் நாராயணன் மீதான தாக்குதல் மோசமானது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

கள்ளமௌனங்கள் கலையட்டும்
“இந்தியாவின் இலங்கை அகதிகள் எதிர்காலம”; எனும் தலைப்பில் 4.11.15 அன்று அரசியல் மற்றும் பொது கொள்கைகளுக்கான தி இந்து மையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கு சென்னை ஆழ்வார்பேட்டை மியூசிக் அக்கடமியில் நடைபெற்றது.இதில் இந்த நிகழ்வானது இந்து குழுமத் தலைவர் ராம் அவர்கள் தரைமையில் நடைபெற்றது.இதில் ஈழ ஏதியிலியர் மறுவாழ்வுக் கழகத்தின் பொருளாளர் சந்திரஹாசன் ஐயா,”பிரண்ட் லைன”; பத்திரிகை மூத்த துணை ஆசிரியர் ஆர்.கே.ராதாகிரு~;ணன் முன்னாள் தேசிய பாதுககாப்பு ஆலோசகர் நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

(“முன்னாள் பாதுகாப்பு செயலாளர் நாராயணன் மீதான தாக்குதல் மோசமானது வன்மையாக கண்டிக்கத்தக்கது.” தொடர்ந்து வாசிக்க…)