என் சுயநலப் பயண அனுபவப் பகிர்வு! 5

(மாதவன் சஞ்சயன்)

2007ன் பின் இப்போது தான் கதிர்காமம் வருகிறேன். மக்கள் மனங்கள் உட்பட எந்த ஒரு பெரிய மாற்றமும் இங்கு எனக்கு தெரியவில்லை. அன்று ராணுவத்துக்கு மகன்களை அனுப்பிய தந்தைகள் பற்றி முன்பு எழுதினேன். இன்று அவர்களின் மரண செய்தி வராதது மட்டுமே மாற்றம். மற்றப்படி அதே தங்கும் விடுதிகள், உணவகங்கள், பூஜா வட்டி விற்பனை நிலையங்கள் என ஏற்கனவே பார்த்த காட்சிகள் தான். காப்பற் பாதைகள் உயர்ந்த அளவுக்கு மக்களின் வாழ்க்கை தரம் உயரவில்லை. அடிக்கடி பயணிக்கும் பேரூந்துகள் தெற்கின் எல்லையை கொழும்புடன் இணைத்தாலும் அதில் தினம் தினம் பயணிக்க ஆட்கள் இன்றி அவை குறுந்தூர ஆட்களை ஏற்றி இறக்கி, தம் டீசல் செலவை ஈடு செய்யும் நிலை தான் காணப்படுகிறது.

(“என் சுயநலப் பயண அனுபவப் பகிர்வு! 5” தொடர்ந்து வாசிக்க…)

சர்வதேச அனுசரணையுடன் உள்நாட்டு விசாரணை

(சுகு-ஸ்ரீதரன்)

எவ்வாறானதோ இலங்கையில் இன்றைய காலகட்டத்தில் சர்வதேச தலையீட்டுடன் அரசியல் சமூக பொருளாதார செயற்பாடுகள் நிகழவேண்டியிருக்கின்றன. அவ்வாறு இல்லாது இலங்கையினுள் மாத்திரம் நிகழவேண்டும் என என கருதுவதெல்லாம் சற்று பாமரத்தனமான சிநதனைப்போக்காகும். நீண்டகால யுத்தம் சமூக ஜனநாயக செயற்பாடுகளுக்கான இடைவெளிகளைக் குறைத்து அவசரகால மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை என்பனவெல்லாம் சிதைவடைந்ததும்- அகங்காரமானதும் -ஊழல் நிறைந்ததும் -அதிகார துஸ்பிரயோகம் சமூகத்தின் மீது பலாத்கார பிரயோகம் இவற்றைக் கொண்ட அதிகார வர்க்கத்தை உருவாக்கியுள்ளது.

(“சர்வதேச அனுசரணையுடன் உள்நாட்டு விசாரணை” தொடர்ந்து வாசிக்க…)

என் சுயநலப் பயண அனுபவப் பகிர்வு! 4

(மாதவன் சஞ்சயன் )

மச்சான் நரி எடா எண்டவனை பைத்தியக்காரனை பார்ப்பது போல பார்த்த நாம் எட விசரா கொழும்பில எங்கடா நரி, மாலைக் கண்ணன் இருட்டில் நாயை பாத்து நரி எண்டு ஓடிவாறான் என நக்கலடிக்க, கேட்டது ஒரு ஊளைச் சத்தம். மூவர் முகத்திலும் கலவரம் தோன்ற யன்னல் ஊடாக எட்டிப் பார்த்தவன் வந்து பாருங்கடா நாயா நரியா என கத்த, எட்டிப் பார்த்த நாம் அதிர்ச்சியில் உறைந்தோம். கீழ் மாடி குப்பைத் தொட்டியை புரட்டிய சந்தோசத்தில் ஒரு நரி ஊளையிட பற்றைக்குள் இருந்து அதன் உறவுகள் வரத்தொடங்கின. அதுவரை தெகிவளை மிருகக் காட்சி சாலையில் மட்டுமே நரியை கண்ட எம் கண் முன்னே அவை சுதந்திரமாக உலவுவதை கண்டதும், எம் வாய் தானாகவே காக்க காக்க கனக வேல் காக்க என கந்தசஸ்டி கவசம் சொல்லத் தொடங்கியது.

(“என் சுயநலப் பயண அனுபவப் பகிர்வு! 4” தொடர்ந்து வாசிக்க…)

பிள்ளையான் பழிவாங்கப்படுகிறாரா?

(மீன்பாடும் தேனாடான்)

கடந்த கால உள்நாட்டு யுத்தத்தில் பல அரசியல் தலைவர்கள் கொல்லப்பட்டனர்.அதில் பல தமிழ் தலைவர்களை புலி பயங்கரவாதிகளே கொன்றனர். 2004ன் பின்னர் கிழக்கு மாகாணத்தில் புலிகள் இரண்டாக பிளவு பட்டு நின்றபோது இதுபோன்ற பல கொலைகள் இடம் பெற்றது. அப்போது தமிழ் அரசியல் தலைவர்கள் பலர் கிழக்கு மாகாணத்தில் கொல்லப்பட்டனர். குறிப்பாக 2004 பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளாராக போட்டியிட்ட இராஜன் சத்தியமூர்த்தி 2004 தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளாராக போட்டியிட்டு வென்ற பாராளுமன்ற உறுப்பினர் கிங்ஸ்லி இராசநாயகம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசேப் பரராச சிங்கம், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு, மட்டகளப்பு தொழில் நுட்பகல்லூரி அதிபர் கைலைநாதன் என இப்பட்டியல் நீளும்.

(“பிள்ளையான் பழிவாங்கப்படுகிறாரா?” தொடர்ந்து வாசிக்க…)

அரசாங்கமும், தமிழர் கூட்டமைப்பும் திறந்த விதத்தில் அரசியல் அமைப்பு அம்சங்கள் குறித்த விவாதங்களை நடத்துவதே உகந்தது

 

வெளிநாடு வாழ் இலங்கையர் தமிழர் ( NRTSL )அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டு நடத்தப்பட்ட கூட்டத்தில் இலங்கைக்கான அரசியல் அமைப்பின் உள்ளமைப்பு, அதனை நிறைவேற்றுவதற்கான புறச்சூழல் தொடர்பான கலந்துரையாடல் கடந்த 9-10-15ம் திகதி லண்டனில் இடம்பெற்றது.  இச் சந்திப்பில் தேசத்தின் நலனில் குறிப்பாக சிறுபான்மைத் தேசிய இனங்களின் ஜனநாயக உரிமைகள் குறித்து ஆர்வமும், அபிப்பிராயங்களையும் வெளியிடும் பலர் கலந்துகொண்டனர். மிகவும் திறந்த அடிப்படையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தற்போது இலங்கையில் நிலவும் அரசியற் பின்னணியானது அரசியல் யாப்பு மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான உகந்த சூழல் என்பதோடு அதிகார பரவலாக்கத்தினை வழங்கும் நல்லாட்சியை உறுதிப்படுத்துவதற்கான தருணம் என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

(“அரசாங்கமும், தமிழர் கூட்டமைப்பும் திறந்த விதத்தில் அரசியல் அமைப்பு அம்சங்கள் குறித்த விவாதங்களை நடத்துவதே உகந்தது” தொடர்ந்து வாசிக்க…)

என் சுயநலப் பயண அனுபவப் பகிர்வு ! 3

(சஞ்சயன் மாதவன்)

வடக்கில் சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பேருந்துகளுக்கு இடையில் எப்போதும் பகையாளி சண்டை நடக்கும். அதே நேரம் தனியார் பேரூந்து தமக்குள் சக்களத்தி சண்டை நடத்தும். எல்லாம் கலக்சன் பிரச்சனை. நெடுந்தூர பயணத்தில் இந்த நான் முந்தி நீ முந்தி ஓட்டப் போட்டி தினம் தினம் நடக்கும். காப்பற் வீதி போடப்பட்ட பின் பேரூந்துகள் ஓடுவதில்லை, பறக்கின்றன. நேர அட்டவணை சீர் செய்யப் படாததால் ஒரே நேரத்தில் புறப்படும் அரச, தனியார் பேரூந்துகள் போட்டி போட்டு அடுத்தவன் முந்தக் கூடாதென நடு வீதியில் நிறுத்தி ஆட்களை ஏற்றுவர். பஸ்ஸில் ஏற நாம் காலை முதல் படியில் வைத்தால் போதும், மதில் பாயும் காதலியை தாங்குவது போல் நடத்துனர் எம்மை இழுத்து அரவணைத்து உள்ளே தள்ளி விடுவார்.

(“என் சுயநலப் பயண அனுபவப் பகிர்வு ! 3” தொடர்ந்து வாசிக்க…)

விக்னேஸ்வரன் தலைமையில் ஒரு மாற்றுக் கூட்டமைப்பு சாத்தியமா?

(விஸ்வா)
தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் நிலவி வரும் முரண்பாடுகள் தற்போது வேறு ஒரு கட்டத்தை அடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. அதாவது, தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள்ளிருந்தே மாற்றுக் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகின்றன. விடுதலைப்புலிகளின் நிர்வாகம் நடைபெற்ற காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்குள் முரண்பாடுகள் காணப்படவில்லை. அவ்வாறு முரண்பாடுகள் இருந்திருந்தாலும் அவை வெளிக்காட்டப்படவில்லை. கூட்டமைப்பினரை விடுதலைப்புலிகள் அடிக்கடி கிளிநொச்சிக்கு அழைத்து அவர்களை நெறிப்படுத்திக் கொண்டிருந்தனர். நெறிப்படுத்தல் என்றால்.. விடுதலைப்புலிகளே தீர்மானங்களை எடுத்து, அதன் படி தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நகர்வுகளை மேற்கொள்ளக் கூடிய நெறிப்படுத்தல் அது என்பது எல்லோருக்கும் தெரியும்.

(“விக்னேஸ்வரன் தலைமையில் ஒரு மாற்றுக் கூட்டமைப்பு சாத்தியமா?” தொடர்ந்து வாசிக்க…)

என் சுயநலப் பயண அனுபவப் பகிர்வு ! 2

(மாதவன் சஞ்சயன்)

மாணவர்களின் முன் முயற்சியில் உருவான பிரமாண்டமான புத்தர் சிலை அமைந்துள்ள குருணாகல் மாவட்டத்தில் இருந்து தான், ராணுவத்துக்கு அதிகமானோர் இணைந்தனர் என்ற செய்தி என் ஞாபகத்துக்கு வந்த போது, சற்று மனக் குழப்பம் ஏற்பட்டது. 2002ல் ஆரம்பித்து 2015ல் திறந்து வைத்த சிலையை தனி ஒரு மலையில் செதுக்கியது தமிழகத்தை சேர்ந்த சிற்பிகள். உக்கிரமான போர் நடந்த காலத்தில் 10க்கு மேற்பட்ட தமிழர்கள் அங்கு நிரந்தரமாக தங்கி இருந்து பணியாற்ற இனவாதம் விட்டது என்றால், யார் இனவாதிகள் என்ற சுய விமர்சன கேள்வியும் என்னுள் எழுந்தது. காங்கேசன் சீமெந்து தொழிற்சாலையில் பணிபுரிந்த சிங்கள அதிகாரி முதல், ரூபவாகினி விக்னேஸ்வரனுடன் வந்த சிங்கள அதிகாரிகள் கொல்லப்பட்டது யாழ் மண்ணில் அல்லவா?
(“என் சுயநலப் பயண அனுபவப் பகிர்வு ! 2” தொடர்ந்து வாசிக்க…)

கற்றலோனியா: தனிநாட்டுக் கனவு

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

தேச அரசுகளின் தோற்றத்தின் போக்கிற் பல்வேறு தேசங்களை ஓர் அரசினுள் இணைத்ததனூடு, தேசங்களின் சிறைச்சாலைகளாக நாடுகள் உருமாறின. இவ்வுருமாற்றம் இயல்பானதல்ல. முதலாளித்துவ விருத்தியுடன் தோன்றிய தேச அரசு என்ற கருத்தாக்கம், தேசிய இனங்களாகவும் தேசங்களாகவும் அமைய வாய்ப்புள்ள சமூகங்களை ஒடுக்கித் தேச அரசுகள் என்ற வரையறைக்குள் கொணர்ந்தன. முதலாளித்துவத்தின் இன்றைய நெருக்கடி, இத் தேசிய இனங்களினதும் தேசங்களினதும் விடுதலைக் கோரிக்கைகளுக்குப் புதிய பரிணாமத்தை வழங்கியுள்ளன.

(“கற்றலோனியா: தனிநாட்டுக் கனவு” தொடர்ந்து வாசிக்க…)

நேற்றும் இன்றும் நாளையும் ஒன்றே !

(எஸ்.எம்.எம்.பஷீர்)

“மெல்ல மெல்ல செல்லுகின்ற
தந்தை செல்வா நாயகம்
சொல்லுகின்ற பாதையிலே
செல்லுகின்ற வீரர் நாம்”
( எஸ்.ஜே. வீ. பற்றிய ஒரு பாடல்)
இலங்கையின் மூன்று மாகாணங்களில் தேர்தல் நடைபெற்றாலும் வட மாகாணத் தேர்தல் , அதுவும் மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் ஒப்பிட்ட அரசியல் முள்ளிவாய்க்கால் கிழக்கிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டவுடன் அங்கு ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை இழந்தவுடன் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் உண்மையில் கிழக்கிலே மாகாண சபைத் தேர்தலிலே தோல்வியுற்றவுடன் ஆயர் சொன்னது போல் அங்கு நடந்தது அரசியல் முள்ளிவாய்க்கால் அல்ல , அது அரசியல் மாவிலாறு மட்டுமே , இப்பொழுதுதான் அரசியல் முள்ளிவாய்கால் முதற்போராட்டமே ஆரம்பித்து,அதுவும் இன்றுடன் போராட்டம் முடிவுக்கு வருகிறது, ஆயுத மாவிலாற்றுப் போராட்டத்தில் கிழக்குப் புலிகள் வன்னிப் புலிகளுக்கு எதிராக நின்று போரிட்டனர், பின்னர் மாவிலாற்று அரசியல் போராட்டத்திலும் அவர்கள் தங்களின் போராட்டத்தை புலிகளின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கெதிராக போரிட்டனர், அதிலும் அவர்கள் வென்றனர்.

(“நேற்றும் இன்றும் நாளையும் ஒன்றே !” தொடர்ந்து வாசிக்க…)