ஜெர்மனி அகதிகளை ஏற்றுக் கொள்வதில் தாராள மனப்பான்மையுடன் நடந்து கொள்வதாக, ஜெர்மனியைப் புகழும் பல கட்டுரைகள் தமிழகப் பத்திரிகைகளில் வந்திருந்தன. பல நண்பர்கள் அவற்றை சுட்டிக் காட்டி, உண்மை நிலவரம் என்னவென்று கேட்டிருந்தார்கள். வழக்கம் போலவே, ஊடகங்கள் தெரிவிப்பதற்கும், உண்மை நிலவரத்திற்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி உள்ளது.
Category: கட்டுரைகள்
Articles
என் சுயநலப் பயண அனுபவப் பகிர்வு! 6
(மாதவன் சஞ்சயன்)
இரவு உண்ட இலவச பழங்களின் அனுசரணையில் வயிறு காலை 5 மணிக்கே அலாரம் அடித்தது. கூடவே அப்பத்துடன் உண்ட வெங்காய/மிளகாய் சம்பல் தன் பங்களிப்பை செய்யத் தொடங்கியது. இணைந்த குளியல் மற்றும் வசதி கொண்ட தனி அறையில் தங்கியதால், அடுத்தவரை சிரமப் படுத்தாமல் காலை நடவடிக்கைகள் முடித்து கீழ் மாடியில் இருந்த உணவகம் சென்றேன். 6 மணிக்கே இட்லி வடை சாம்பார் என அசத்தினார், அதனை அண்மையில் குத்தகை எடுத்த கண்டி தமிழர். என்னதான் தமிழருடன் முரண்பாடு வந்தாலும் சிங்களவருக்கு, இட்லி வடை தோசை சாம்பாறு என்றால் அலாதிப் பிரியம் என்பதை அறிந்து கொண்ட அவரின் உணவகத்துக்கு, அயல் விடுதிகளில் தங்குபவர்கள் கூட உணவுக்காக, அதிகாலையே வருவதைக் கண்டேன்.
விசித்திரக் கைதுகளும் மரண தண்டனையும்
இலங்கையில் மீண்டும் மரண தண்டனையை அமுல்படுத்த வேண்டும் என்றதோர் அபிப்பிராயம் தலைதூக்கி, சிறிது சிறிதாக மறைந்து போகும் நிலையைக் காணக்கூடியதாக இருக்கிறது. கொட்டதெனியாவ என்ற இடத்தில், ஐந்து வயது சிறுமியான சேயா சந்தவமி கடத்திச் செல்லப்பட்டு பாலியல் பலாத்காரத்துக்கு உற்படுத்திக் கொல்லப்பட்டதை அடுத்தே இந்த அபிப்பிராயம் இம்முறை தலைதூக்கியது. இதற்கு முன்னரும் இதுபோன்ற படுபாதகச் செயல்கள் இடம்பெற்ற போதும், இதேபோல் குற்றவாளிகள் தூக்கு மேடைக்கு அனுப்பப்பட வேண்டும் என்ற அபிப்பிராயம் தலைதூக்கியது. பின்னர் சில நாட்களில் அது மாயமாய் மறைந்துவிட்டது.
புலி திலீபனின் உண்மை முகம்
மாற்று இயக்கங்களை தடை செய்து அழித்தொழித்ததில் முக்கியமானவர் திலீபன்… தலைமறைவாக இருக்கும் புலி உறுப்பினர்கள் திடீரென்று ஊருக்குள் வருவார்கள். இன்றைக்கு இந்த இடத்தில் கூட்டம் ஒன்று வைக்க வேணும் என்பார்கள். திலீபனின் ஊர் ஊரெழு. ஆவரங்காலைச் சேர்ந்த முரளி (கிங்கோ) முன்னர் ஐரோப்பாவில் இருந்தவர். பின்னர் புலிகள் இயக்கத்தில் இணைந்துகொண்டார். முரளி உரும்பிராய்க்கு வரும்போது திலீபனையும் அழைத்துக்கொண்டு பிரச்சாரக்கூட்டங்களுக்கு வருவார். முரளி எனது வீட்டுக்கும் வருவதுண்டு. காரணம் எனது ஊருக்குள் இளைஞர்களை இயக்கத்தில் இணைக்கும் முயற்சியில் முரளி ஈடுபட்டிருந்தார். என்னையும் இயக்கத்தில் இணையும்படி கேட்டுக்கொள்வார்.
எம்மவர் உண்ணா விரதம் தொடர் கதை தானா?
(மாதவன் சஞ்சயன் )
நல்லாட்சியில் கூட மாறாது தொடரும் மோசமான நிலை இதனை எழுதத் தூண்டுகிறது. சிறைகளில் வாடும் எம் உறவுகள் தம் விடுதலை வேண்டி தொடங்கிய உண்ணா விரதம் சிலருக்கு அரசியல், பலருக்கு வேதனை. இவர்கள் ஒன்றும் கொலையாளிகளோ, பாலியல் வன்புணர்வில், மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களோ அல்ல. இனத்துக்கு நடந்த அநியாயத்துக்கு நியாயம் கேட்டு போராடியவர்கள் அல்லது, போராளிகள் என்று அவர்கள் நம்பியவர்ளுக்கு உதவி செய்தவர்கள். அவர்களை பிடித்த படையினர் எந்த ஆதாரங்களின் அடிப்படையில் பிடித்தோம் என்ற சாட்சியங்களை அன்றே கொடுத்திருந்தால் நீதி மன்றில் அவர்கள் குற்றவாளிகளா இல்லையா என்பது எப்போதோ வெளிவந்திருக்கும். மாறாக அவர்கள் தமிழர்கள் என்ற ஒரே ஒரு காரண அடிப்படையில், கொட்டியா (புலி) என்று சந்தேகித்து, விசாரணை கூண்டில் அடைக்கப்பட்டு ஆண்டுகள் பல கடந்து விட்டன.
என் சுயநலப் பயண அனுபவப் பகிர்வு! 5
(மாதவன் சஞ்சயன்)
2007ன் பின் இப்போது தான் கதிர்காமம் வருகிறேன். மக்கள் மனங்கள் உட்பட எந்த ஒரு பெரிய மாற்றமும் இங்கு எனக்கு தெரியவில்லை. அன்று ராணுவத்துக்கு மகன்களை அனுப்பிய தந்தைகள் பற்றி முன்பு எழுதினேன். இன்று அவர்களின் மரண செய்தி வராதது மட்டுமே மாற்றம். மற்றப்படி அதே தங்கும் விடுதிகள், உணவகங்கள், பூஜா வட்டி விற்பனை நிலையங்கள் என ஏற்கனவே பார்த்த காட்சிகள் தான். காப்பற் பாதைகள் உயர்ந்த அளவுக்கு மக்களின் வாழ்க்கை தரம் உயரவில்லை. அடிக்கடி பயணிக்கும் பேரூந்துகள் தெற்கின் எல்லையை கொழும்புடன் இணைத்தாலும் அதில் தினம் தினம் பயணிக்க ஆட்கள் இன்றி அவை குறுந்தூர ஆட்களை ஏற்றி இறக்கி, தம் டீசல் செலவை ஈடு செய்யும் நிலை தான் காணப்படுகிறது.
சர்வதேச அனுசரணையுடன் உள்நாட்டு விசாரணை
(சுகு-ஸ்ரீதரன்)
எவ்வாறானதோ இலங்கையில் இன்றைய காலகட்டத்தில் சர்வதேச தலையீட்டுடன் அரசியல் சமூக பொருளாதார செயற்பாடுகள் நிகழவேண்டியிருக்கின்றன. அவ்வாறு இல்லாது இலங்கையினுள் மாத்திரம் நிகழவேண்டும் என என கருதுவதெல்லாம் சற்று பாமரத்தனமான சிநதனைப்போக்காகும். நீண்டகால யுத்தம் சமூக ஜனநாயக செயற்பாடுகளுக்கான இடைவெளிகளைக் குறைத்து அவசரகால மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை என்பனவெல்லாம் சிதைவடைந்ததும்- அகங்காரமானதும் -ஊழல் நிறைந்ததும் -அதிகார துஸ்பிரயோகம் சமூகத்தின் மீது பலாத்கார பிரயோகம் இவற்றைக் கொண்ட அதிகார வர்க்கத்தை உருவாக்கியுள்ளது.
(“சர்வதேச அனுசரணையுடன் உள்நாட்டு விசாரணை” தொடர்ந்து வாசிக்க…)
என் சுயநலப் பயண அனுபவப் பகிர்வு! 4
(மாதவன் சஞ்சயன் )
மச்சான் நரி எடா எண்டவனை பைத்தியக்காரனை பார்ப்பது போல பார்த்த நாம் எட விசரா கொழும்பில எங்கடா நரி, மாலைக் கண்ணன் இருட்டில் நாயை பாத்து நரி எண்டு ஓடிவாறான் என நக்கலடிக்க, கேட்டது ஒரு ஊளைச் சத்தம். மூவர் முகத்திலும் கலவரம் தோன்ற யன்னல் ஊடாக எட்டிப் பார்த்தவன் வந்து பாருங்கடா நாயா நரியா என கத்த, எட்டிப் பார்த்த நாம் அதிர்ச்சியில் உறைந்தோம். கீழ் மாடி குப்பைத் தொட்டியை புரட்டிய சந்தோசத்தில் ஒரு நரி ஊளையிட பற்றைக்குள் இருந்து அதன் உறவுகள் வரத்தொடங்கின. அதுவரை தெகிவளை மிருகக் காட்சி சாலையில் மட்டுமே நரியை கண்ட எம் கண் முன்னே அவை சுதந்திரமாக உலவுவதை கண்டதும், எம் வாய் தானாகவே காக்க காக்க கனக வேல் காக்க என கந்தசஸ்டி கவசம் சொல்லத் தொடங்கியது.
பிள்ளையான் பழிவாங்கப்படுகிறாரா?
(மீன்பாடும் தேனாடான்)
கடந்த கால உள்நாட்டு யுத்தத்தில் பல அரசியல் தலைவர்கள் கொல்லப்பட்டனர்.அதில் பல தமிழ் தலைவர்களை புலி பயங்கரவாதிகளே கொன்றனர். 2004ன் பின்னர் கிழக்கு மாகாணத்தில் புலிகள் இரண்டாக பிளவு பட்டு நின்றபோது இதுபோன்ற பல கொலைகள் இடம் பெற்றது. அப்போது தமிழ் அரசியல் தலைவர்கள் பலர் கிழக்கு மாகாணத்தில் கொல்லப்பட்டனர். குறிப்பாக 2004 பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளாராக போட்டியிட்ட இராஜன் சத்தியமூர்த்தி 2004 தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளாராக போட்டியிட்டு வென்ற பாராளுமன்ற உறுப்பினர் கிங்ஸ்லி இராசநாயகம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசேப் பரராச சிங்கம், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு, மட்டகளப்பு தொழில் நுட்பகல்லூரி அதிபர் கைலைநாதன் என இப்பட்டியல் நீளும்.
அரசாங்கமும், தமிழர் கூட்டமைப்பும் திறந்த விதத்தில் அரசியல் அமைப்பு அம்சங்கள் குறித்த விவாதங்களை நடத்துவதே உகந்தது
வெளிநாடு வாழ் இலங்கையர் தமிழர் ( NRTSL )அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டு நடத்தப்பட்ட கூட்டத்தில் இலங்கைக்கான அரசியல் அமைப்பின் உள்ளமைப்பு, அதனை நிறைவேற்றுவதற்கான புறச்சூழல் தொடர்பான கலந்துரையாடல் கடந்த 9-10-15ம் திகதி லண்டனில் இடம்பெற்றது. இச் சந்திப்பில் தேசத்தின் நலனில் குறிப்பாக சிறுபான்மைத் தேசிய இனங்களின் ஜனநாயக உரிமைகள் குறித்து ஆர்வமும், அபிப்பிராயங்களையும் வெளியிடும் பலர் கலந்துகொண்டனர். மிகவும் திறந்த அடிப்படையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தற்போது இலங்கையில் நிலவும் அரசியற் பின்னணியானது அரசியல் யாப்பு மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான உகந்த சூழல் என்பதோடு அதிகார பரவலாக்கத்தினை வழங்கும் நல்லாட்சியை உறுதிப்படுத்துவதற்கான தருணம் என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.