(சஞ்சயன் மாதவன்)
வடக்கில் சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பேருந்துகளுக்கு இடையில் எப்போதும் பகையாளி சண்டை நடக்கும். அதே நேரம் தனியார் பேரூந்து தமக்குள் சக்களத்தி சண்டை நடத்தும். எல்லாம் கலக்சன் பிரச்சனை. நெடுந்தூர பயணத்தில் இந்த நான் முந்தி நீ முந்தி ஓட்டப் போட்டி தினம் தினம் நடக்கும். காப்பற் வீதி போடப்பட்ட பின் பேரூந்துகள் ஓடுவதில்லை, பறக்கின்றன. நேர அட்டவணை சீர் செய்யப் படாததால் ஒரே நேரத்தில் புறப்படும் அரச, தனியார் பேரூந்துகள் போட்டி போட்டு அடுத்தவன் முந்தக் கூடாதென நடு வீதியில் நிறுத்தி ஆட்களை ஏற்றுவர். பஸ்ஸில் ஏற நாம் காலை முதல் படியில் வைத்தால் போதும், மதில் பாயும் காதலியை தாங்குவது போல் நடத்துனர் எம்மை இழுத்து அரவணைத்து உள்ளே தள்ளி விடுவார்.
