அரசாங்கம் பதவி விலக வேண்டும்!

2015 ஜனவரி 8ஆம் திகதி இலங்கையின்  ஜனாதிபதியாகப் பதவி ஏற்ற மைத்திரிபால சிறிசேனவுக்கும், அதே ஆண்டு ஓகஸ்டில் நடைபெற்ற பொதுத் தேர்தல் மூலம் பிரதமராகப்  பொறுப்பேற்ற ரணில் விக்கிரமசிங்கவிற்கும்  இடையிலான சந்தர்ப்பவாத தேன் நிலவு முடிவுக்கு வருகிறதா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.  ஐக்கிய தேசியக் கட்சியும், சிறீலங்கா சுதந்திரக்
கட்சியின் ஒரு பிரிவினரும் இணைந்து உருவாக்கிய  தற்போதைய அரசாங்கத்திற்குள் ஆரம்பம் முதலே  ஏராளமான முரண்பாடுகளும், இழுபறிகளும் இருந்து  வந்தபோதிலும், இரு தரப்பினரதும் பரஸ்பர
நலன்களுக்காக அவை மூடி மறைக்கப்பட்டே (மேலும்)