இலங்கை: கொரனா செய்திகள்

வவுனியாவில் இருந்து  வெளிமாகாணங்களுக்கான பஸ் சேவைகள் நாளை (25) காலை முதல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   மாணவர்கள் மற்றும் அத்தியாவசிய தொழில் புரிவோரின் வசதி கருதி குறித்த பஸ் சேவைகள் வவுனியா புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளன.

அந்தவகையில் காலை 05.45 மணிக்கு இ.போ.ச வவுனியாசாலையில் வவுனியாவிலிருந்து  கண்டி நோக்கி பஸ் புறப்படவுள்ளதுடன், காலை 06.30 மணிக்கு வவுனியாவிலிருந்து  திருகோணமலை  நோக்கி புறப்படவுள்ளது.

காலை 07.30 மணிக்கு  வவுனியாவிலிருந்து  அக்கரைப்பற்று நோக்கியும், காலை 07.00 மணிக்கு கொழும்பு நோக்கியும் பஸ்கள் புறப்படவுள்ளன.

குறித்த பஸ்களில் பயணிப்போர் அத்தியாவசிய சேவைக்குரிய அடையாள அட்டையினை காண்பித்து பயணிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.