ஒரு தேசத்தின் ஓலக்குரல் கேட்கிறதா?

(ச.சேகர்)

“எப்படி வாழ்ந்த நாங்க, இப்ப இப்பிடி கஷ்டப்படுறோமே, இந்த விலைக்கு சாமான் விக்குது…, இவ்வளவு இல்லயா இருந்துது, ஏன் இப்ப இந்தளவு கூடிருச்சு…” இவ்வாறான வார்த்தைகளே இன்று எம்மில் பலர் மத்தியில் சரளமாக பேசப்படுகின்றது. ஏன் வெளிநாடுகளிலிருந்து இலங்கை வந்து தாம் உழைத்து வந்த பணத்தில் இங்கு செலவிடுவோரும் தெரிவிப்பது, என்ன சாமான் எல்லாம் நெருப்பு விலை விக்குது என்பதையே.