கொரனா: பெருவில் மோசமான உயிரிழப்பு வீதம்

பெருவானாது கொரோனாவால் உயிரிழந்த தமது உத்தியோகபூர்வ எண்ணிக்கையை 180,764ஆக நேற்று ஏறத்தாழ மூன்று மடங்காக்கியுள்ளது. அரசாங்க மீளாய்வொன்றைத் தொடர்ந்தே பெரு இவ்வாறு உயிரிழந்தோரின் எண்ணிக்கையை மாற்றியுள்ள நிலையில், உலகின் மோசமான இறப்பு வீதத்தைக் கொண்ட நாடாக மாறியுள்ளது.