அல்லாஹ் அக்பர் – வெட்கத்தைவிட்டு ரொம்ப வேதனைகளுடன் – 8

(யஹியா வாஸித்)
எப்போது உருப்படும் இந்த தேசம்,இனி என்ன செய்வதாய் உத்தேசம்
1983 ஜூலை. மொத்த ஸ்ரீலங்கா மக்களினதும் வாழ்க்கை,
வாழ்வாதாரம் அனைத்தையும் வெட்டி குழிதோண்டி
புதைத்த மாதம். அந்த நாள் எல்லா நாளையும்போல,
பொல பொல எண்டுதான் எங்களுக்கும் விடிஞ்சது,
ஆனா நேரம் போக போகத்தான் நாடி,நரம்பு, மூளை,
முண்ணான் எல்லாம் செயல் இழக்க தொடங்கியது.