அஷரப் இன் தற்கொலைத் தாக்குதல்

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஸ்ரபையும் புலிகள் கொல்ல முற்பட்ட சந்தர்ப்பங்கள் தவறிவிட்டதால் ( அது பற்றி வேறோ ஒரு சந்தர்ப்பத்தில் விரிவாக பார்ப்போம்) தமது நீண்ட நாள் திட்டத்தின்படி மெதுவாக கட்சிக்குள் உட்பட்டு அஸ்ரபை கொல்வதே சாத்தியம் என்ற செயற்திட்டத்தில் புலிகளுக்கு பலிக்கடாக்கள் தேவைப்பட்ட போதுதான் அஸ்ரபுக்கும் சந்திரிகாவுக்கும் இடையில் அரசியல் முரண்பாடு ஏற்பட்டது. சந்திரிக்காவுக்கும் அஸ்ரபுக்கும் இடையில் ஏற்பட்ட அரசியல் சச்சரவை பயன்படுத்தி , அவர் பயணம் செய்த ஹெலி கொப்டரையே தற்கொலை குண்டுதாரி மூலம் நடுவானில் தகர்த்தனர். இப்போது கொன்றது யார் என்ற ஊகம் எழுந்த போது இலகுவில் அது சந்திரிக்கா அரசின் வேலை என்று சேகு தாவூத் மேடைகளில் முழங்கி ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்கு பெற்றார். புலிகளின் திட்டமும் இலகுவாக பலி பாவத்தை சந்திரிக்கா அரசின் மீது சுமத்த முடிந்தது. அஸ்ரபின் அகால மரணம் பற்றி பத்திரிக்கையாளர் ஒருவர் புலிகளின் சமாதான செயலகத்தின் பேச்சாளரான புலித் தேவனிடம் கேட்டபோது அவர் அஸ்ரபுக்கும் சந்திரிக்காவிற்கும் இடையே நிலவிய முரண்பாடு பற்றி குறிப்பிட்டு , அக் கொலைக்கான காரணத்தை நீங்களே புரிந்து கொல்லுங்கள என்று கூறிவிட்டார்.

(Bazeer Seyed)