லெபனானாக மாறுகிறதா இலங்கை

(ச.சேகர்)

இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலவுவது அனைவரும் அறிந்த விடயம். 2022 ஆம் ஆண்டு என்பது நாட்டின் வரலாற்றில் மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடி நிலவிய ஆண்டாக அமைந்திருந்ததுடன், பொது மக்கள் பெரும் துயரங்களை அனுபவித்திருந்தனர். மக்களின் பொறுமை எல்லை கடந்ததன் விளைவாக, நாட்டின் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இராஜினாமா செய்ததோடு, அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி கோடாபய ராஜபக்ச பதவியிலிருந்து விரட்டியடிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியேற்றார்.