தோழர் க.பத்மநாபா

ஈழமக்கள் புரட்சிகர விடுதலைமுன்னணி முதலாவது காங்கிரஸ் தலைமை உரை.

FIRST CONGRESS OF THE EPRLF

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி யின் வரலாற்றில் முதலாவது காங்கிரஸ் (1984 சூன் 28) புதியதோர் திருப்பத்தைக் குறிக்கிறது. சுய விமர்சனம், விமர்சனம் என்னும் ஆயுதத்தால் தவறுகளைக் களைந்து சரியான திசை வழியில் முன்னேறிக்கொண்டிருக்கும் எமது புரட்சிகர ஸ்தாபனத்தின் முன்னோக்கிய வளர்ச்சிப் பாதைக்கு முதலாவது காங்கிரஸ் ஒளிபாய்ச்சியுள்ளது.