சியலகொட் சம்பவம்: மதம் சார்ந்ததா, தொழில் சார்ந்ததா?

(எம்.எஸ்.எம். ஐயூப்)

இலங்கையைச் சேர்ந்த பொறியியலாளரும் பாகிஸ்தானில் சியல்கொட் நகரில் தொழிற்சாலை ஒன்றின் முகாமையாளருமான பிரியந்த குமார தியவடன என்பவர், வெள்ளிக்கிழமை (03) அவரது தொழிற்சாலை ஊழியர்களாலும் ஏனைய சில பாகிஸ்தானியர்களாலும் தாக்கப்பட்டும் எரிக்கப்பட்டும் படுகொலை செய்யப்பட்டமையால், இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் வாழும் முஸ்லிம்கள், பெரும் அசௌகரித்துக்கு உள்ளாகியுள்ளனர்.