இராகலையிலிருந்து மேலும் மூவர் புறப்பட்டனர்

அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இராகலை நகரில் இருந்து கொழும்பை நோக்கி  மூவர் நடைப்பயணத்தை ஆரம்பித்துள்ளனர். குறித்த மூவரும் இன்று (09) காலை 8மணியளவில் தமது நடை பயணத்தை இராகலை நகரில் ஆரம்பித்தனர். இராகலையைச் சேர்ந்த மொஹமட் நிசாம்,  எஸ்.கோபாலகிருஸ்ணன் எஸ்.மகேந்திரன் ஆகியோரே நடை பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.