இராஜினாமாவை ஏற்க ஜனாதிபதி மறுப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பிவைத்துள்ள இரண்டு இராஜினாமா கடிதங்களை ஏற்க மறுத்துவிட்டார். பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் ராமநாதன் ஆகியோரினால் அனுப்பிவைக்கப்பட்ட இராஜினாமா கடிதங்களையே ஜனாதிபதி ஏற்க மறுத்துவிட்டார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நேற்றிரவு இடம்பெற்ற சந்திப்பின்போதே, ஜனாதிபதி அது தொடர்பில் அறிவித்துள்ளார்.