இலங்கையின் உற்ற நண்பன் இந்தியாவே

இலங்கைக்கு எப்போதெல்லாமல் பிரச்சினைகள் ஏற்பட்டதோ அந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்தியா எமக்கு கை கொடுத்திருக்கின்றது. விசேடமாக மோடி பிரதமராக பதவியேற்ற பின்பு இலங்கை தொடர்பாக அவர் அதிக கவனம் செலுத்தி வருகின்றார் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.