இலத்திரனியல் தராசு எமக்கு வேண்டாம்… செப்பல்டன் தோட்ட மக்கள் சீற்றம்

பறிக்கப்படும் தேயிலைக் கொழுந்துகளை நிறை பார்ப்பதற்காக தோட்ட நிர்வாகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இலத்திரனியல் தராசில், கொழுந்தின் நிறை குறைவாக காட்டப்படுவதாகத் தெரிவித்து, பொகவந்தலாவை- செப்பல்டன் தோட்டத் தொழிலாளர்கள் நேற்று (25) தாம் பறித்த கொழுந்தை நிறை பார்ப்பதற்காக தோட்ட நிர்வாகத்திடம் வழங்க மறுத்துள்ளனர்.