உறுதி… உறுதி… உறுதி… How many times “உறுதி…?”

 

பொது மன்னிப்பின் கீழ் விடுதலை அல்லது பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும் எனக் கோரி தமிழ்க் கைதிகள் சிறைச்சாலைகளுக்குள் கடந்த வருடம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய போது, அரசு தலைவர்களுடன் பேச்சுக்கள் நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய ஆர்.சம்பந்தன், சிறைக் கைதிகளிடம் நேரடியாக உறுதியளித்திருந்தார்…

ஆயினும், அந்த உறுதி மொழியை நிறைவேற்றத்தக்க வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படாத நிலையிலேயே சிறைக்கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டமும், வெளியில் ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றிருக்கின்றன…

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், கைதிகளின் விடுதலை குறித்து கூட்டமைப்பு பல வழிகளிலும் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து கைதிகளை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்….

(Alex Varma)