எங்களிடம் நீங்கள் அரசியல் கற்கும் நிலை!

முஸ்லிங்கள் தமிழ் அரசியல் வாதிகளிடமிருந்து அரசியலைக் கற்றவர்கள் இதனை நான் மறுக்க வில்லை நிலைமைமாறி தற்போது முஸ்லிங்களிடமிருந்து தமிழர்கள்அரசியல் கற்கவேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. காரணம் வீர வசனங்களைப் பேசுவதனால் எதனையும் சாதிக்க முடியாது. தற்போது முஸ்லிம் கிராமங்கள் அபிவிருத்தியில் பாரிய முன்னேற்றமடைந்துள்ளது. காரணம் ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கத்துடன் கைகோர்த்து பல அமைச்சுப்பதவியினை பொறுப்பேற்று பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும் சந்தர்ப்பத்தில் தமிழ் அரசியல் வாதிகளில் சிலர் வீர வசனங்களை உரைக்கின்றனர். இதனால் கிடைப்பது ஒன்றுமே இல்லை, வெறுமனே தனித்து நின்று சிறுபான்மை இனத்தவர் எதனையும் பெற முடியாது. இவ்வாறு தெரிவித்தார் கிராமிய பொருளாதார அபிவிருத்திப் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமிர்அலி.

அண்மையில் துறைநீலாவணை வடக்கு கண்ணகி சனசமுக நிலைய வீதி திறப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்

அவர் மேலும் கருத்துதெரிவிக்கையில் கடந்த கால போராட்டத்தின் மூலமாக வடகிழக்கு தமிழ் மக்கள் தன்மானத்தினைத் தவிர பலவற்றினை இழந்திருக்கின்றனர். இனி இழப்பதற்கு எதுவும் கிடையாத நிலையில் வீர வசனங்களைப் பேசி உங்களை கபளீகரம் செய்ய நான் தயாரில்லை. இந் நாட்டில் வாழ்கின்ற மூவின மக்களும் வேறுபாடுகள் இல்லாத நிலையில் சமமாக வாழ்வதற்கான சுபீட்சம் உருவாகியுள்ள, நிலையில் சில அரசியல் வாதிகள் மக்கள் மத்தில் துவேசத்தன்iயினை தூண்டும் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர். இந்நிலை மாற்றமடைய வேண்டும் என்றார்.

(சுபீட்சம்)