சென்னையிலும் நில அதிர்வு; அலறியடித்து ஓடிய மக்கள்

சென்னையில் இன்று காலை அண்ணா சாலை அருகே லாயிட்ஸ் ரோடு பகுதியில் அமைந்துள்ள 3 மாடி கட்டிடத்தில் இலேசான நிலஅதிர்வு உணரப்பட்டது. இதனையடுத்து, குறித்த கட்டிடத்தில் பணிபுரிந்துவரும் ஊழியர்கள் அலறியபடி வெளியேறி வீதியில் தஞ்சமடைந்ததால் அப்பகுதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதேசமயம் சென்னை அண்ணாசாலையில் உணரப்பட்ட நில அதிர்வுக்கு மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.