சைட்டத்துக்கு எதிராக போராட்டம்

சைட்டம் தனியார் மருத்துவ கல்விக்கு எதிர்ப்பு தெரிவித்து, யாழில் இன்றைய தினம் (25) பேரணி இடம்பெற்றது. யாழ்.போதனா வைத்தியசாலை முன்பாக, இன்று மாலை 3.30 மணியளவில் ஒன்று கூடியவர்கள், வைத்தியசாலை வீதி வழியாக, காங்கேசன்துறை வீதியை சென்றடைந்து அங்கிருந்து வீரசிங்கம் மண்டபத்திற்கு அருகில் உள்ள மைதானத்தை சென்றடைந்தனர். குறித்த பேரணியில், தென்னிலங்கையை சேர்ந்த மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.